Saturday, September 19, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் X  

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? V 


சூழ்நிலை (Context) : அடுத்த ஒரு முக்கியமான விறுவிறுப்பான காட்சியை விவாதிப்பதற்கு முன்பாக அந்த சீனுக்கு நாம் போவதற்கு உரிய சூழ்நிலையை கூறிவிடுவோம். அமெரிக்க அரசாங்கம் வேற்று கிரக விண்கலம் அவங்க நாட்டில் இறக்குவதை ரேடாரில் பார்த்து இருப்பார்கள் அல்லவா? எனவே அமெரிக்க ராணுவம் அல்லது போலிஸ் அந்த காட்டுக்கு  வந்துடுவாங்க... எனவே அவசர அவசரமாக  விண்கலம் தவறுதலாக  ஒரு வேற்றுகிரக மனிதனை  மட்டும் புவியில் விட்டுவிட்டு மேல் எழும்பி  சென்றுவிடும். அந்த சீனில் நம்ம இயக்குனர் ஸ்பீல்பர்க்  விண்கலம் வருவதை எல்லாம் ரேடாரில் காட்டமாட்டாரு. அந்த காட்சி படத்தினுள்  மறைத்து வைக்கப்பட்டு உள்ள காட்சி.(implicit scene). இதே வேறு இயக்குனர் படம் என்றால் என்ன செய்வாங்க? விண்கலம் வருவதையும் ,ரேடாரில் அது தெரிவதையும்  மாற்றி மாற்றி  இன்டர் கட்டில்(inter cut ) காட்டி  இருப்பாங்க அல்லவா?   என்னை பொறுத்த வரைக்கும்  இந்த implicit sceneஐ வெளிப்படையாக காட்டாமல்  பார்வையாளனின்  புரிதலுக்கே விட்டுவிடுவது தான்  படத்தின் ஓட்டத்தை விரைவு படுத்த உதவும். ஆனாலும் ஸ்பீல்பர்க்  இந்த காட்சியை அதாவது போலிஸ் அல்லது ராணுவம் வரும் காட்சியில் சிறிய தவறு செய்து விடுவார்.  கையில் டார்ச் லைட் , இடுப்பில் கைவிலங்கு மட்டும் வைத்துக்கொண்டா போலிஸ் விண் மனிதர்களை தேடி வரும்? ஆயுதங்கள் எதுவும் இல்லாமலா வரும்? ஆயுதங்கள் எதுவும் போலிஸ் அல்லது ராணுவம் வரும் சீனில் காட்டப்படாது  தவறு தானே ?  நம்ம யானைக்கே அடி சறுக்கிவிட்டது பார்திர்களா ?


சரி விசயத்துக்கு வருவோம். புவியில் தனித்து மாட்டிக்கொண்ட அந்த விண்கல மனிதன் ஒரு சிறுவனிடம் வந்து   அடைகலம் பெறுவான்.   அவனும் ,சிறுவனும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். முதல் நாள் தனக்கு காய்ச்சல் என்று ஏமாற்றும் அந்த சிறுவன் தினமும் ஏமாற்ற முடியாது அல்லவா?  அடுத்த நாள் அந்த விண்கல மனிதனையும்  ,தன் வளர்ப்பு நாயையும் வீட்டில் தனித்துவிட்டு விட்டு பள்ளிக்கு சென்று விடுவான். 


சிறுவனின்  வீடு  INT: KITCHEN: DAY 

விண்மனிதன்  குளிர்சாதன பெட்டியை திறபான். நாயிக்கும் பசி. உண்ண எதாவது கிடைக்குமா என்று எதிர்பார்புடன் அந்த மனிதனை பார்க்கும்.அதில் உள்ள உருளைக்கிழங்கு கலவையை [potato salad] எடுத்து திறந்து  நாக்கால் நக்கிபார்க்கும்.  சுவை பிடிக்காததால் அதனை  தூர எறிவான். அதனை நாய் உண்ணும். இவன் பீர் கேன் ஒன்றை எடுத்து குடிப்பான். 

பள்ளிக்கூடம் INTERCUT: SCHOOL

பள்ளியில் chairல் அமர்ந்து ஆசிரியர் கூறுவதை  கவனிக்கும் சிறுவன் பெரிய ஏப்பம்(protrud) விடுவான்.
மற்ற குழந்தைகள் இவனை திரும்பி பார்ப்பார்கள்.
( சிறுவனும் , விண்மனிதனும் ரொம்ப க்ளோஸ் ப்ரிண்ட்ஸ்  என்பதற்கு இந்த காட்சிஒருத்தன் பீர் குடித்தால் அடுத்தவனுக்கு ஏப்பம் வருது! தமிழில் இது போன்ற ஒரு படத்தை உதாரணமாக கூறமுடியும் அல்லவா? கூறுங்கள் பாப்போம்!) 

INTERCUT: KITCHEN

பீர் குடித்த போதையில் அந்த விண்மனிதன் சமையில் அறையில் தடுமாறிக்கொண்டு இருப்பான்.


INTERCUT: SCHOOL

சிறுவனுக்கும் போதை ஏறிவிடும். தலையில் கை வைப்பான்.ஆசிரியர் தவளையை இரண்டாக கட் செய்தாலும் அதன் இதயம் துடிக்கும்(beats) என்று கூறிக்கொண்டு இருப்பார். 


INTERCUT: KITCHEN

விண்மனிதன் திரும்பி வேறு திசையில் நடந்து கொண்டு இருப்பான். நாய் இன்னும் அந்த உருளைக்கிழங்கு கலவையை [potato salad] சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். 

INTERCUT: KITCHEN

அவன் திரும்பி நடந்து நடந்து கிழே விழுந்து விடுவான். 
(E.T. turns, walks, then collapses head first onto the floor.)

INTERCUT: SCHOOL

சிறுவனும் போதையில் மயங்கி chairல் இருந்து சறுக்கிவிழுந்து விடுவான். அந்த சத்தம் ஆசிரியருக்கு கேட்காது ஏன் என்றால் அந்த நேரத்தில் அவர் ஒரு தவளையின் வரைபட wall chart ஐ இழுத்து  சத்தம் ஏற்படுத்தி இருப்பார்.

(Elliott slides under his desk and falls onto the floor. The teacher doesn't
hear this because at that moment he pulls down a wall hanging which
contains pictures of a frog's anatomy.)

இப்படியாக இந்த காட்சி அங்கும் இங்கும் என்று வீட்டிலும் , பள்ளியிலும் காட்சி படுத்தப்படும்.  ....இதற்கு பெயர் தான் inter cut என்பது. ஒரே காட்சியில் ஒரு ஷாட்டை  இங்கும் , மற்றும் ஒரு ஷாட்டை அங்கும் காட்டினால் அதுதாங்க இன்டர் கட் என்பது. தமிழ் படங்களில் நாயகி வில்லனின் பிடியில் இருக்க , நாயகன் பைக்கில் வருவான் அல்லவா ? இரண்டையும் மாற்றி மாற்றி காட்டுவார்கள் அல்லவா? அது தாங்க இன்டர் கட் !


என்னுடைய கேள்வி என்னவென்றால்  இந்த சீன் தர்க்க ரீதியில் சரியானதா? E.T  பீர் குடித்தால் சிறுவனுக்கு மயக்கம் வரும் என்ற காட்சி சரியானது தானா ? E.T க்கு ஏதாவது extraordinary பவர் இருபதாக இயக்குனர்  நிறுவ பார்கின்றாரா? ஆனால் இது சிறுவர்களுக்கான படம் என்பதாலும் அந்த சிறுவனுக்கும் E.T க்கும் நட்பு மிகவும்  நெருக்கமானது என்பதாலும் இந்த சீனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நினகின்றேன்.  ஆனாலும் இது லாஜிக் இல்லாத காட்சி தான். இளம் இயக்குனர்கள் இத்தகைய காட்சிகளை தவிர்ப்பது நலம்.  இந்த காட்சியின் விடியோ கிளிப்யை கீழே இணைத்து உள்ளேன். 

https://www.youtube.com/watch?v=0xWMqsZOYWg


முழுமையான E.T படத்தை you-tubeல் பார்க்க கிழே உள்ள லிங்கை copy செய்து browserல் past செய்து பாருங்கள்.  

https://www.youtube.com/watch?v=s5Z8T6WsWy0

தொடரும்...... 



திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IX E.T penetrating into Heart IX

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IX  

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? IV 

பொதுவாகவே ஸ்பீல்பர்க் படங்களின் ஒப்பனிங் சீக்வன்ஸ் (முதல் காட்சி தொடர்) வசனற்ற  காட்சிகளாகவே இருக்கும்.  வசனம் அற்ற ஒவொரு காட்சியிலும் அவர்   கதையின் நகர்த்தலுக்கு தேவையான  சில செய்திகளை  visual ஆக கொடுத்துக்கொண்டே செல்வார். அத்தகைய visual ஷாட்கள்  பார்வையாளனின் அறிவிற்குள் உள்ளீடாக சென்று (input) அவனின் சிந்தனைமூலம் அவற்றுக்கு அவனுக்கு பொருள் கிடைக்கும்.  இத்தகைய வசனம் அற்ற visual ஆன கட்சிகளை எடுக்கும் போது பார்வையாளனின் புரிதலை  இயக்குனர் கருத்தில் கொள்ளவேண்டியது மட்டும் அல்லாமல் அதற்காக பார்வையாளனுக்கு தேவையான அளவு புரிதலுக்கான நேரத்தையும் ஒவொரு ஷாட்திலும் கொடுக்க வேண்டும்.  இத்தகைய போக்கில் non verbal but visual ஷாட்கள் சில வேளைகளில்  மந்தமாகவும், சுறுசுறுப்பு இல்லாமலும்   அமையலாம். பார்வையாளனின் புரிதலுக்காக   இயக்குனர் தேவைபட்டால்  சில மேலதிக ஷாட்களை  எடுத்து இணைத்தாலும் தவறு இல்லை. முடிந்தவரையில் வசனமின்றி , கதாபாத்திரங்களின் செயல்பாட்டின் ஊடாக, அவற்றின் எதிர்வினைகள் ஊடாக   கதையை காட்சி படுத்துவது என்பது மிக சிறப்பான   முறையே. 


INT: SPACECRAFT'S GREENHOUSE: NIGHT

The inside of the ship appears to be a greenhouse. There are sounds of
water dripping. Cone shaped objects (possibly alien plants) sit among earth
plants. Vapors flow up from the plants.

[These images all appear non-threatening. The aliens are inferred to be
collecting vegetation, and are thereby inferred to be harmless.]

[Like many of Spielberg's other films, the opening sequences contain almost
no dialogue. The story is told without verbal exposition. He forces the
audience to become engaged in the storytelling process by giving them just
bits of information that they have to piece together into the story. He
doesn't insult their intelligence.]


இது போன்ற காட்சிகள் E.T பட காட்சிகள் பார்வையாளனின் பங்களிப்பை கோரும் நிலையில் உள்ளதால்  , மேலும் அவை   பார்வையாளனின் நுண்அறிவிற்கும் கொடுக்கும்  முக்கியத்துவம் காரணமாக  காலம் கடந்து நிற்க சாத்தியங்கள் அதிகம் உள்ளன.  

தொடரும்....

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VIII E.T Pierced into Heart III

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VIII 

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? III 

அடுத்த காட்சிக்கு போவதற்கு முன்னால் E.T யின் ஒரிஜினல் DVD அய் காசுகொடுத்து வாங்கிடுங்க. இன்னும் கொஞ்சம்  செலவுகூட ஆகும். ஆமாங்க கிரீன் டீ ரூ 90 கொடுத்து வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். நாம செய்யப்போகும் காரியம் வெற்றி அடைய மூளைக்கு அதிக   antioxidant தேவை அல்லவா? மேலும் ஸ்கிரிப்ட் எழுதும் போது அல்லது எப்படி நல்ல ஸ்கிரிப்ட் எழுதுவது என்று கற்கும் போது,  நாம அதிகமா புகைக்கும் போது உடலில் ஏற்படுகிற கெட்ட விளைவுகளை தவிர்க்க  antioxidant தேவை அல்லவா? அதுக்கு தான் கிரீன் டீ. எலுமிச்சை பழமும்  கூட இருந்தால் நல்லது. ராவா கிரீன் டீயை குடித்தால் பயங்கரமா கசக்கும். எலுமிச்சை சாறு  கொஞ்ச்மா சக்கரை சேர்த்து கூட்டிக்கலாம். சரி விசயத்துக்கு வருவோம். டைட்டில் போடப்பட்டு ஆயிற்று. அடுத்தது கதாபாத்திரங்களை பற்றிய அறிமுகம் தானே என்று கேட்கின்றீர்களா ? க்தாபாத்திரங்ககளை அறிமுகம் செய்துகொண்டே நேரடியாக கதைக்குள் போவது தானே நம்ம  ஸ்டீவென் ஸ்பீல்பர்க்கின் பாணி(style). 

EXT: LANDING SITE: NIGHT

In an opening in the forest stands a spacecraft. The view of the craft is
obscured by tree branches. The atmosphere is misty, with blue lights coming
from the spacecraft.

[The opening scene is misty and diffused. This forces the audience to pay
close attention to the images on the screen. The characters are not clearly
seen. This engages the audience, as they attempt to see what the aliens
really look like.]
One creature walks up the gang blank and into the ship.

INSERT: ALIEN HAND

A strange hand, with two long and slender fingers protruding, move aside a
branch that obstructs the view.

[This concentrates the audience's attention. The creature going into the
ship is being observed by another creature. Who are they? What's going on?
This is another technique that forces the audience to focus on the action.]


மேல் உள்ள இந்த காட்சியில் ஒரு விண்கலம் அது காட்டில் உள்ள மரங்களின் கிளைகளால் மறக்கப்பட்டு உள்ளது. பனி மூட்ட சூழல். இந்த காட்சியை படமாக்க நீல ஒளி பயன்படுத்தப்பட்டு உள்ளது. மூடு பனி , காட்சிகளில் தெளிவின்மை இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? ஸ்பீல்பர்க் இந்த கட்சியை படமாகும் போது தூங்கிட்டாரா? அல்லது கேமிரா மேன் அனுபவம் அற்றவரா? எளிமையான காரணம் பார்வையாளர்களின் (படத்துக்கு வெளியில் உள்ள கதாபாத்திரங்கள்)  கவனத்தை வெளிகிரக ஜீவிகள் மீது ஈர்க்க வைப்பது தான்.பார்வையாளர்கள் அமர்ந்து உள்ள சீட்டின் நுனிக்கு வராவிட்டாலும் சற்று நிமிர்ந்து அமருவார்கள் என்பது தான் இந்த காட்சியில் உள்ள உளவியல்(psychology)


இதன் ஊடாக நல்ல திரைக்கதை ஆசிரியருக்கு   Human  psychology[ மானுட உளவியல்] கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் தானா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?  இதற்கு பதில் ஆம், இல்லை இரண்டுமே தான். உங்கள் இரண்டு வயது குழந்தையை , நண்பர்களை , உங்கள் ஆசிரியரை,  மனைவியை எந்த அளவுக்கு புரிந்து வைத்து உள்ளீர்களோ அந்த அளவுக்காவது மானுட உளவியல்  பற்றிய அறிவு கண்டிப்பாக ஒரு இயக்குனருக்கு , திரைக்கதை ஆசிரியருக்கு    இருவருக்குமே கண்டிப்பாக தேவை. அதே சமையத்தில்  டாக்டர் ஐயா ருத்ரன் அளவுக்கு எல்லாம் மானுட உளவியல் அறிவு கண்ண்டிப்பாக தேவை இல்லை. மானுட உளவியல் பற்றிய அளவுக்கு மீறிய அறிவு அனுபவம் அற்ற இயக்குனருக்கு அவரை காட்சிகளின் ஊடாக கதைசொல்வதை விட கதாபாத்திரங்களின் மன வெளிக்குள் புகுந்து  கதையில் ஓட்டத்தை சிதைத்துவிடும். உதரணத்துக்கு ராமின்  கற்றது தமிழ்திரைப்படம். படம்.  அதே நேரத்தில்   ராமின் அடுத்தப்படமான  தங்க மீன்களில்    அவர் கதாபாத்திரங்களின் மனோவெளியை  கட்டிக்கொண்டே கதையை  நகர்த்தும் போக்கு சிறப்பானதாக இருக்கும்.  

மேலும் பார்த்திர்கள் என்றால்  கட்சிகளை வடிவமைக்க  "Enter Late Exit Earlier" என்ற ஒரு கோட்பாடு (விதி அல்ல)  Hollywood  திரைக்கதைகளில் பயன்படுத்தப்படுகின்றது. அந்த கோட்பாடு இந்த காட்சியிலும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. விண்கலம் விண்ணில் பறந்து வருகின்றனது. சுத்தி சுத்தி வருகின்றது.. புகை விட்டுக்கொண்டே வருகின்றது ... மெல்ல இறங்குகின்றது என்று எல்லாம் ஸ்பீல்பர்க் காட்ட மாட்டார். ஆனால் விண்கலம்(spacecraft)  மிக எளிமையாக காட்டு மரங்களின் ஊடேபனி மூட்டத்தில்  நீல ஒளியில் அது இருபது காட்டப்படும். மேலும் ஒரு விண்வெளி மனிதன் விண்கலத்துக்குல் போவது போன்றும் அதனை வேறு ஒரு விண்வெளி மனிதன் இரண்டு விரல்களால் இலைகளை நீக்கிவிட்டு பார்ப்பது போன்றும் காட்சி இருக்கும். பார்வையாளர்களுக்கு அது என்ன  என்பது புரிந்த உடனேயே அந்த காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு ஸ்பீல்பர்க் சென்று விடுவார். (நேரம் மிச்சம்.., budget  மிச்சம் ) 


இந்த காட்சியை தமிழ் படங்களில் எப்படி எடுப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் ! 

"Enter Late Exit Earlier" என்ற காட்சிவடிவமைப்பு கோட்பாட்டை முக்கிய விதியாக கொள்ளவேண்டியது இன்றைய இளம் இயக்குனர்களின் கடமையாகவே நான் நினைக்கிறேன். இந்த காட்சியில் பார்வையாளர்களுக்கு விடுபட்ட செய்தி என்ன? யார் இவர்கள்? நல்லவர்களா? கெட்டவர்களா? என்ன நோக்கத்துடன் வந்து உள்ளார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தானே? அவை அடுத்த காட்சிகளில் ...... 

"Yes We travel along with Steven Spielberg few more chapters " 


தொடரும்

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html
http://vansunsen.blogspot.in/2015/09/e.html
http://vansunsen.blogspot.in/2015/09/viii-et-pierced-into-heart-iii.html

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VII penetrating heart E.T II

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VII 

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? II 

இன்றையடைரக்டர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்ன என்றால்  படத்தின் தலைப்பை காட்டும் போது (Title)தேவையில்லாமல் கிராபிக்ஸ் அனிமேசன் என்ற பகட்டுகளுக்கு movie budget ஐ  செலவு செய்யாதிங்க.  Hollywood படங்களுக்கு படத்தின் பெயரும் , படத்தின் முக்கியமானவர்களின் பெயரும் மட்டுமே   தான் முதலில் வரும். பிற டைட்டில்கள் படம் முடிந்த பின் தான் வரும். ஆனால்தமிழ் படங்களில் தான் பிற டைட்டில்கள்,  எழுத்தும்- இயக்கமும் வரைக்கும் முதலிலேயே வருகிறன. சரி பரவாயில்லை இதனை தமிழ் திரைப்பண்பாடாக நாம எடுத்துக்கொண்டாலும்   100%   கிராபிக்ஸ் அனிமேசன் போன்ற படத்துக்கு தேவையற்றவற்றை தவிர்த்துவிடுங்கள்.  உதாரணத்துக்கு ... E .T யின் டைட்டில் எப்படி இருக்கு என்று பாருங்கள்....

TITLES: "E.T. - THE EXTRA-TERRESTIAL"

[The letters are in soft-purple against a black background. Purple is
traditionally the color of that which is sacred.]


ஸ்டீவென் ஸ்பீல்பர்க்  எவ்ளவு அனுபவப்பட்ட டைரக்டர் ? அவரே அவரின் E.T  என்ற படத்தில்  கருப்பு நிற பின்னியில்  மென்மையான-ஊதா கலரு நிற எழுத்துக்களில்  "E.T. - THE EXTRA-TERRESTIAL" என்று டைட்டில்  போட்டு விட்டு காட்சியை அடுத்தது  காட்டுவதற்கு போய்விடுகின்றார். சரி இது தமிழ் படம் எனவே அனைத்து டைட்டில்களையும் கண்டிப்பாக காட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் முழு படத்தின் காட்சிகளையும் சுருக்கி  2 நிமிட தொகுப்பாக [montage] காட்டிக்கொண்டே  அதன்  மீது அனைத்து டைட்டில்களையும் எழுத்தும்- இயக்கமும் வரை போட்டுவிடலாம். கிராபிக்ஸ் அனிமேசன் மூலம் டைட்டில் காட்ட வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் budget பிரச்சனை மட்டும் காரணம் அல்ல. இந்த வேண்டா வேலைகள்   கதையின் மீதான பார்வையாளர்களின் கவனத்தை சிதைக்கவும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html
http://vansunsen.blogspot.in/2015/09/e.html

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் Extra-Terrestrial (Director Steven Spielberg)penetrating in to viewers Heart

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VI

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ?


நல்ல படங்கள் அது எந்த மொழியை பேசினாலும்  கண்டிப்பாக சிறிது நேரத்தை  செலவு செய்து பார்பவர்களுக்கு   கண்டிப்பாக மன உணர்வுகளை கிளறிஎழச்செய்யும். கோபம், வருத்தம், பாசம் போன்ற உணர்வுகளையும்[mood]   அவற்றின் வெளிப்பாடான முறையே கண்கள் சிவப்பது , கன்னத்தில் கைவைத்து சோர்வாய் இருப்பது,  குழந்தையை கட்டி அனைத்து முத்தமிடுவது   பேன்ற வெளிப்பாடுகளையும்  [expressions]        தின தின வாழ்வில்  நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றேம்.?  எனது நண்பர் ஐயா பேட்டைகார ஈழத்து கவி ஜெயபாலன் அவர்கள்  இதை தான் நான் சோர்வுறும் தருணங்களில் "life is not a tea party" என்று அழகாக கூறுவார். சரி இத்தகைய உணர்வுகள் திரைப்படத்தில் எப்படி பிரதான கதாபாத்திரங்கள் மூலமாக வெளிப்படும்  அவற்றுக்கு மற்ற கதாபாத்திங்க்ளின்  எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை நம்ம E.T. the Extra-Terrestrial (Director Steven Spielberg) என்ற திரைப்பட காட்சிகள் மூலமாக பார்க்கலாமா? கதாபாத்திரங்கள் மட்டும் தான் ஒரு சினிமாவை  முடிவு செய்கின்றனவா? வேறு எவரும் இல்லையா என்ற கேள்வி நம்முள் எழுமாயின் அதற்கு பதிலையும்  நாம் சிந்தித்து கூற முடியும். ஆம் பார்வையாளர்கள் , அந்த திரைப்படத்தின் பார்வையாளர்களும்  அவர்களின்  திரைப்பட காட்சிக்கான மன உணர்வுகளும் தான் திரைக்கு வெளியில் உள்ள முக்கியமான  கதாபாத்திரங்கள். [external Roles to a Movie] அந்த வெளி-கதாபாத்திரங்களின் உணர்வுகள் காட்சிகளை காணும் போது தட்டையாக இருப்பின் நாம் செத்தோம் ....அந்த திரைப்படத்துக்கு தொடர்புடைய  டைரக்டர் அல்லது திரைகதை ஆசிரியர் மூட்டை முடிச்சிக்ளுடன்  விருதுபட்டிக்கும் , கோவில்பட்டிக்கும் திரும்பி செல்லும் நிலை தான் ஏற்படும். ஆடோகிராப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சேரன் அளித்த பேட்டியில் அவரும் இதை தான் கூறினார். ['இந்த படம் மட்டும் flop ஆயிருந்தால் தான் சொந்த ஊருக்கு தான் போய் இருக்கவேண்டி இருந்து இருக்கும்']

சரி விடயத்துக்கு மீண்டும் வருவோம். கதாபத்திரங்கள் அவரின் உணர்வுகள் , உணர்வுகளின் வெளிப்பாடுகள், அதற்கு பார்வையாளர்களின் மனஉணர்வுகள் அவற்றின் வெளிப்பாடுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன என்பதை  நாம் புரிந்துக்கொண்டு இதயத்தை  துளைத்த E.T. யில் இருந்து ஒரு சில காட்சிகளை திரைக்கதை வடிவிலேயே காண்போம். 


TITLES: "E.T. - THE EXTRA-TERRESTIAL"

[The letters are in soft-purple against a black background. Purple is
traditionally the color of that which is sacred.]

EXT: NIGHT SKY: NIGHT

The black screen becomes a night sky. The camera angles lowers to show a
forest against the night sky.

EXT: LANDING SITE: NIGHT

In an opening in the forest stands a spacecraft. The view of the craft is
obscured by tree branches. The atmosphere is misty, with blue lights coming
from the spacecraft.

[The opening scene is misty and diffused. This forces the audience to pay
close attention to the images on the screen. The characters are not clearly
seen. This engages the audience, as they attempt to see what the aliens
really look like.]

One creature walks up the gang blank and into the ship.

INSERT: ALIEN HAND

A strange hand, with two long and slender fingers protruding, move aside a
branch that obstructs the view.

[This concentrates the audience's attention. The creature going into the
ship is being observed by another creature. Who are they? What's going on?
This is another technique that forces the audience to focus on the action.]

INT: SPACECRAFT'S GREENHOUSE: NIGHT

The inside of the ship appears to be a greenhouse. There are sounds of
water dripping. Cone shaped objects (possibly alien plants) sit among earth
plants. Vapors flow up from the plants.

[These images all appear non-threatening. The aliens are inferred to be
collecting vegetation, and are thereby inferred to be harmless.]

[Like many of Spielberg's other films, the opening sequences contain almost
no dialogue. The story is told without verbal exposition. He forces the
audience to become engaged in the storytelling process by giving them just
bits of information that they have to piece together into the story. He
doesn't insult their intelligence.]

தொடரும் .......


 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html

Thursday, September 17, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் V scene sequence screen play technology V

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் V 

சீன் சிக்வன்ஸ் [காட்சிகளின் தொடர்சி  Raja Rani Tamil Movie Case Study ]

சமிபத்தில் வந்த திரைப்படங்களில்  பாசாங்கு இல்லாத கதை, தெளிவான திரைக்கதை,  தவறில்லாத ஷாட் ,கேமிரா கோணங்கள் , எடிட்டிங் என்று பார்த்தால் அட்லியின்  ராஜா ராணி படத்தை கூறலாம். இந்த படத்தின் முதல் சீன் சிக்வன்ஸ் என்பது நயந்தரவுக்கும், ஆர்யாவுக்கு நடக்கும் திருமணம். அதனை  டைரக்டர் அட்லி கீழ் வருமாறு காட்சிகளாக பிரித்து இருப்பார். இந்த சீன் சீக்வன்ஸ் சரியாக 5 ல் இருந்து 6 நிமிடங்கள் திரையில் காட்சிப்படுத்தப்ட்டு உள்ளது.

படம் :ராஜா ராணி
டைரக்டர் : அட்லி

சீன் சிக்வன்ஸ் 1 : திருமண நிகழ்வு

கிருஸ்துவ தேவாலையம் [வெளி -உள் ]
[s1 ] மனமகனை காணமல் சந்தானமும் அவரின் நண்பர்களும் தேடுதல்.

[s2]தம் அடிக்கப்போன மணமகன் திரும்பி வருதல்

[s3] மணமகளும் அவளின் தந்தையும் காரில் வருதல்

[s4]மணமகளும் அவளின் தந்தையும் கிருஸ்துவ தேவாலையம் உள் நடந்து செல்லுதல்

[s5]பாதிரியார் திருமண ஏற்பாடுகளை செய்தல் [மணமகன்
திருமணத்துக்குசம்மதம் கூற நிறைய யோசிப்பான்..., மணமகள் சூரியா என்று வேறு பெயரை கூறி தடுமாறுவாள்]
[s6] திருமணம் முடிந்து இருவரும் வெளியே வருதல்.


இந்த சீன் சிக்வன்ஸ் ரசிகனுக்கு கூறும் விவரங்கள் என்ன? காட்சி 2 ல் திருமணம் நடக்கும் நேரத்தில் தம் அடிக்க செல்லும் ஆர்யாவின் மனநிலை..., காட்சி 5 ல் பாதிரியாருடன் திருமணத்துக்கு சம்மதம் கூற தயங்கும் ஆர்யாவின் மனநிலை..., அதே காட்சியில் வேறு ஒருவனின் பெயரை கூறும்  நயன்தாராவின் மனநிலை...., இவை எல்லாம் சேர்த்து இருவருக்குமே திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை காட்டுகின்றது அல்லவா?


இருவருக்குமே திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் என்ன காரணமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை  ரசிகன் தன் மனதில் எழுப்ப முடிகிறது அல்லவா? அது தானே இந்த சீன் சிக்வன்சின் வெற்றி!

இந்த படத்தின்  பிற முக்கிய சீன் சிக்வன்ஸ்களை பற்றியும் ஆராய ஆர்வம் வந்து விட்டதே! நான் என்ன செய்ய? சரி  ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இன்னும் ஒரு Hollywood படத்தை பற்றி (எல்லாருக்கும் தெரிந்த படம் தான் )  அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாமா?

தொடரும்

 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IV screen play is not an art but technique IV

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IV 

சீன் சிக்வன்ஸ் [காட்சிகளின் தொடர்சி]

காட்சிகளின்  தொடர்ச்சி தான் சீன் சிக்வன்ஸ்சா ?

 ரொம்ப எளிய தெரிந்த உதாரணத்துடன் சீன் சிக்வன்ஸ் பற்றி பேசிப்பார்ப்போம்.

காட்சி 1: ஒரு மாணவி தன் கல்லூரியில் நடைபெற உள்ள  தன் துறை சார்ந்த போட்டிக்கான விளம்பரத்தை அறிவிப்பு பலகையில் காண்கின்றாள்.

காட்சி 2:அவளின் வகுப்புஆசிரியரை சந்தித்து  போட்டிக்கான விதிகளை கேட்டு தெரிந்து கொள்கின்றாள்.

காட்சி 3:அந்த போட்டி குழுவாக பங்கு எடுத்துகொள்ளவேண்டியது என்பதால்  தன் நெருங்கிய சிநேகிதிகளை  சந்தித்து  குழு அமைக்கின்றாள்.

காட்சி 4: நூலகம் சென்று தேவையான தகவல்களை சேகரிக்கின்றாள்.

காட்சி 5:போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெறுகின்றாள்.

மேல் உள்ள நிகழ்வுகளை  காட்சி படுத்தும் போது அதில் பொருள் பொதிந்த தொடச்சி  இருக்கும் அல்லவா?     மேல் உள்ள தொடர் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட பாகத்தை  கதையில் நடத்திக்காட்டுகின்றது அல்லவா? அது தான்  காட்சிகளின் தொடர்சி அல்லது    சீன் சிக்வன்ஸ்  என்பது ஆகும்.

அடுத்த காட்சிகளின் தொடர்சி [சீன் சீக்வன்ஸ்]என்பது அந்த போட்டியில் தோல்வி அடைந்த அதே வகுப்பை சேர்ந்த   வேறு ஒரு மாணவனின்  எதிர்வினையாக கூட இருக்கலாம். அவன் கதையின் நாயகனாகவோ அல்லது   வில்லனாகவோ கூட இருக்கலாம்.  அவர்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கான எதிர்வினைகள்  என்னவாக இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.

வில்லன் தோல்வி அடைந்து இருந்தால் :

[1] நண்பர்களுடன் மது அருந்த செல்கின்றான்

[2] டாஸ்மாக் பாரில்  அமர்ந்து தன் நண்பர்களுடன் வெறுப்புடன் பேசிக்கொண்டு இருக்கிறான்.

[3]டாஸ்மாக் பாரை விட்டு வெளிவந்த உடன் அவனின் நெருங்கிய நண்பனுடன் ரகசியமாக என்னமோ பேசுகிறான்.

[4]அடுத்தநாள் வெற்றி பெற்ற மாணவியின் இரு சக்கர வண்டியின் பெற்ரோல் டேங்கில்  சக்கரை கொட்டப்பட்டு  அந்த வண்டி பழுதாக்கப்படுகின்றது.

கதாநாயகன் தேல்வி அடைந்து இருந்தால் :

[1] அந்த மாணவி செமினோர் எடுத்தபோது அவளின் முக பாவனைகளை ,பேசும் அழகை யோசித்து பார்க்கின்றான்.  [அவள் பேசிய காட்சிகள் காட்டப்படுகிறன.]

[2]அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும் அவளை பார்த்து புன்னகை செய்கிறான்.

[3]வகுப்பு அறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது அவள் நோட்ஸ் எடுக்கும் அழகை ரசிக்கின்றான்.

[4] அவளிடம் அவளின் ஈமெயில் ஐடியை கேட்டு வாங்கிக்கொண்டு செல்கிறான்.

[5] அவன் வீட்டில் இருந்து  அவளுக்கு காதல் கடிதம் அவளுக்கு அவளின் ஈமெயில் ஐடிக்கு   அனுப்புகின்றான்.    


மேல் உள்ள கதாநாயகனின்/வில்லன்  எதிர்வினைகள்  கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதுடன்   ஏன் ,எதற்கு , எப்படி என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே ஒரு கருத்தாக்கத்தை கதையில்  கொடுகிறது அல்லவா? அதனால்  அடுத்தது என்ன என்ற கேள்வி தவிக்க இயலாதது அல்லவா? அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பாத காட்சி தொடர்கள் [சீன் சீக்வன்ஸ்]மூலம் எந்த பயனும் திரைக்கதையின்  முன்னேற்றத்துக்கு உருவாகாது. அடுத்த அத்தியாயத்தில் ராஜா ராணி படத்தின்  சீன் சீக்வன்ஸ் பற்றி சிந்தித்து பார்த்து இந்த சீன் சிக்வன்ஸ்சை  முடித்துக்கொள்ளலாம்.


தொடரும் .......

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் III Screen play is not an art but Technology III

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் III 

பேசும் வசன-பட காட்சி எப்படி இருக்கும் ?


முந்தைய  அத்தியாயத்தில்  "IIM-B கல்லூரி  வளாகத்துள் விடுதியில் வாழும் கார்திக் அதே கல்லூரி வளாக பெண்கள் விடுதியில் வாழும் அவனது சினேகிதியை காலையிலேயே காண விரும்புகிறான். " அதனை ,அந்த காட்சியை வசனம் இன்றி  திரைக்கதையாக்கினோம் அல்லவா? அதே காட்சியை  எம் ஜி ஆர் ,சிவாஜி காலத்து   டைரக்டர்கள்  காட்சி படுத்தினால் எப்படி இருக்கு என்று பார்ப்போமா? 

காட்சி 1 வெளி காலை 
Fade In 

[1]கார்திக் காலையில் கல்லூரி வளாக ரோட்டில் நடந்து வருகிறான். செல்போனை எடுக்கிறான்.சினேகிதியை அழைக்கிறான்.....ரிங்டோன்... மீண்டும் மீண்டும் செல்போனில் அழைகின்றான்.   [லாங் ஷாட் ] 

[2] சிநேகிதி போனை எடுத்தஉடன்  போனில் [மிட்லாங்ஷாட்]

              கார்திக் : ஹாய் சிவசங்கரி குட்மார்னிங் ... எப்படி இருக்க? 
             
[3] இண்டர்கட் பெண்கள் விடுதி அறையில் 
              சிவசங்கரி: குட் மார்னிங் கார்திக்... எழுந்திட்டேன் ... 5 மினிட்ஸ் பா வெயிட் பண்ணு 

[4] இண்டர்கட் சாலையில் 
            கார்திக்  : நேத்து டான்ஸ் புரோகிராம் டயர்ட் ஆ... இன்னும் தூக்கமா? 

[5]   இண்டர்கட் பெண்கள் விடுதி அறையில்                     
             சிவசங்கரி: இல்ல கார்திக் இதோ வந்துட்டேன்....

[6] அதிகாலைக்காண சூரியன், மீண்டும் பணி மூட்ட காட்சி ,மரம் செடி கொடிகள் [ஜூம் செய்யபடும் ஷாட்கள்]

Dissolve 


பேசி பேசியே பழகிப்போன தமிழர் ரசிக்க  மனதுக்கு  சினிமாவிற்கான மொழியை ,காட்சி படுத்தும் கலையை, பழகிக்கொள்ள  சில கால அவகாசம்    தேவைப்படும் என்பது உண்மையாயினும்  , அத்தகைய நிலைக்கு ரசிகர்களின் மனம் தள்ளப்படுதவற்கு  டைரக்டர்களின் பங்கும்,   பயிற்றுவிப்பும் மிகவும் முக்கியமானது. ஒரு காட்சியை திரைக்கதையாக எழுதும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் எழுதிப்பார்ப்பது என்பது சிறந்த திரைக்கதை எழுதுவதற்கான முறையாகும். சமிபத்தில் எனது  அபிமான டைரக்டர் பார்திபனின் ஒரு பத்திரிக்கை செய்தியில் " இப்போது இணையத்தில் அருமையாக திரைக்கதையை எழுதிக்கொண்டு இருகின்றார்கள்..... நான் கூட எனது  திரைக்கதையை எழுதி எழுதி கிழித்து கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும்  சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். " என்று கூறியதன் அர்த்தம் என்ன? செந்தமிழும் நா பழக்கம்   நல்ல திரைக்கதையும் கை பழக்கம் என்பது தானே?    

தொடரும் .....

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html

           


      

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் II screen play is not an art but technology II

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் II 

பேசும் படமா அல்லது பேசா படமா?

வசனங்களின் தேவை இல்லாத  காட்சிகளாக உங்கள் கதையின் காட்சிகளை சிந்தித்து பாருங்கள். இது சத்தியமா?  இன்றும் நம் ரசனைக்கு உரியதான சார்லி சாப்ளினின்  நகைசுவை திரைப்படங்களில் பெரும்பாலானவை  வசனங்கள் அற்ற  சாட்சிகளின் தொகுப்பாக இருக்க நாம் என் அந்த வழியில் முயற்சிக்கக்கூடாது. தக்க பின்ண்ணணி இசை இந்த வசனமற்ற காட்சிகளை  உயிரூட்டும் அல்லவா? ஒரு உதாரணத்தை பார்ப்போமா? IIM-B கல்லூரி  வளாகத்துள் விடுதியில் வாழும் கார்திக் அதே கல்லூரி வளாக பெண்கள் விடுதியில் வாழும் அவனது சினேகிதியை காலையிலேயே காண விரும்புகிறான். எப்படி காட்சி படுத்தலாம்?

காட்சி 1 வெளி காலை
Fade In

[1]காலையில் பெங்கலூரூ  பனிமூட்டட்தில்  கல்லூரி சாலியில் நடக்கும் கார்திக் தெளிவற்ற உருவம்.......[லாங் ஷர்ட்]

[2] நடந்து வரும் கார்த்திக் -கையில் போக்கேயுடன்..., காலை உடற்பயிற்சிக்கான  உடை, காலணியுடன் [மிட்லாங்ஷாட்]

[3]ஒற்றைகாலை பின்பக்கமாக மரத்தின் மீது ஊன்றி நின்று கொண்டு போக்கேவை இடது கைகளால் அணைத்துக்கொண்டு  செல்போனில் "I am waiting" என்று sms தகவல் அனுப்புவது.[மிட் ஷட்]

[4] கார்திக்கின் view வில் இருந்து  பெண்கள் விடுதியை கேமரா பார்ப்பது.  [லாங் ஷாட்]

[5]கார்திக்கின் செல் போன் "coming soon wait karthik " என்று இசையுடன் மின்னுவது.[மிட் ஷாட்]

[6] சினேகிதியை காண ஆவளுடன் இருக்கும் கார்திக்கின் முகம் [க்ளோசப் up ]

Dissolve

எதேனும் வசனம் இங்கு பேசப்பட்டு உள்ளதா?


வசனமே இல்லை என்றால் டைரக்டருக்கு என்ன வேலை கமிரா மேன் அவர்களே படத்தை எடுத்து விடலாமே என்று  நீங்கள் நினைக்கலாம்.  ஆமாம் எந்த ஒரு சிறப்பான திரைக்கதையும் டைரக்டர் அவர்களின் வேலையை  மிகவும் எளிமைப்படுத்தும். திரைக்கதை என்பது ஒரு நேர்மையான கல்லூரி ஆசிரியர்  தன் மாணவர்களுக்காக நேரத்தை செலவு செய்து  அடுத்த நாள் வகுப்புக்கு  தயாரிக்கும் பாடம் போன்றது. ஒரு மணி நேர வகுப்புக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது தயாரிப்புக்கு  அந்த ஆசிரியர்  செலவு செய்வார் எனில்  பாடத்தை எப்படி மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும்?  என்னை முதலில் கூரவேண்டும் எந்த எந்த கேள்விகளை இடை இடையே கேட்கவேண்டும் என்று முடிவுடன் வகுப்புக்கு செல்வார் எனில் அந்த வகுப்பு அவருக்கும்  மாணவர்களுக்கு நிறைவு தரும் அல்லவா?   அது போன்றது தான் திரைக்கதையின் ஒரு  பகுதியான குறிப்பிட்ட காட்சியை தயாரிப்பதும். திரைக்கதையை ஒரு முழுமையான பாடத்துக்கு [ex Operating System subject] உதாரணமாக கொண்டால்  காட்சியை அந்த பாடத்தில் உள்ள உட்பிரிவிற்கு [ex  Evaluation ஒப் Operating System ]  உதாரணமாக கொள்ளலாம்.


வசனமே இல்லாத இந்த காட்சியை பின்னணி இசை மேலும் மெருகூட்டும்  என்பதனை மறவாதிர்கள்.


தொடரும் ...


Previous Chapter:

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
    
திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் I

சில அடிப்படைகள் :

கதையை காட்சி படுத்துகின்ற சினிமா என்ற வெகுசன கலையின் ஆதார அம்சம் திரைக்கதை எழுதுவது. ஒரு சாதாரண கதை பலவாறாக பலராலும் திரைக்கதையாக்கப்பட்ட முடியும்.  ஆனால் அவை அனைத்துமே வெற்றிகரமான சினிமாவாக்கப்பட்ட  முடியமா என்பது சந்தேகத்துக்கு உரியதே. நாடகக்கலை அனுபவம் உள்ள ஒருவர் அந்த கதையை    திரைக்கதையாக்கும் போது  என்ன செய்வார்? உதாரணத்துக்கு கலைஞனின்  பராசக்தியையும் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.  1950களில் இருந்து  நாடகங்களில் ஆழ ஒன்றியிருந்த  தமிழ் மக்களுக்கு சிவாஜி கணேசனின் பராசக்தி வசனங்கள்  கண்டிப்பாக மெய் சிலிர்க்க வைப்பதாக தானே இருந்து இருக்கும்?  அதுவும் அந்த படம்  சிவாஜி கணேசனின்  முதல் திரைப்படம் என்று நினைக்கின்றேன்.  முதல் படத்திலேயே  தமிழக மக்களை கவர்ந்து இருக்கும்  அவரின்  நடிப்புக்கு காரணம் சிறப்பான நாடகத்தன்மைவாய்ந்த வசனங்களே என்று கூறினால் அது மிகையாகாது.  அதே நேரத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான  ரஜனி , தொடர்ந்து  மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்த்தில் நடித்த ரஜனியின் நடிப்பு என்பது சிறப்பானதாக இருந்ததற்கு  காரணம் நாடகத்தன்மை  வாய்ந்த வசனங்களா அல்லது கதை காட்சி படுத்தப்பட நவீன முறையா?  50களுக்கு  70களுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ் சினிமா என்பது  பழைய நாடக-வசன  திரைக்கதை முறைக்கும்  நவீன காட்சி படுத்தும் திரைக்கதை முறைக்கும் இடையே பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது என்பதனையும் நாம்   யூகிக்க முடிகிறது.  50களில் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு  வந்த  சிவாஜியின்  வசன உசரிப்பு , நடிப்பாற்றலையும் மீறி தமிழ் சினிமா பரிணாமவளர்ச்சி அடைந்து  உலக திரைப்படங்களுடன்  இயைந்து பயணித்ததை நம்மால் உணர முடிகின்றது அல்லவா?  நடிப்புலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் தொடந்து    நாடக-வசன  திரைக்கதைகளில் நடித்து வந்தாலும்  அத்தகைய திரைக்கதை  வடிவம்   காலத்தாலும் , கலை அம்சத்தாலும் , தொழில் நுட்பத்தாலும் மிகவும் பின்தங்கிய ஒன்று தான் என்பதை  இறுதி காலங்களில் அவர் நடித்த இருபடங்கள் கமலின் தேவர் மகன்  மற்றும்  பாரதி ராஜாவின்  முதல் மரியாதை ஆகியவை நிருபித்துவிட்டன அல்லவா? எனவே 50களில் இருந்து 70களுக்கு தமிழ் சினிமா  நாடக-வசன முறை திரைக்கதை முறையில் இருந்து காட்சி படுத்துதலுக்கு  உரிய ஊடகமாக மாறியது என்பதை நாம் உறுதியாக கூறமுடியும்.


தொடரும் 

Sunday, September 13, 2015

ஏன் இப்படி ஆனார்கள் ? Why did they behave like this?

ஏன் இப்படி ஆனார்கள் ? 

ஏன் இப்படி ஆனார்கள் ? நவீன இலக்கியம் படைக்கும் நோக்குடன் கதை ,சிறுகதை எழுதும் எழுத்தாளர்கள் சாதிய பிரச்சனைகளை கையாளும் போது தடம் மாறி போகின்றார்கள். ஈழத்து எழுத்தாளர் ஜெயபாலன் [ஆடுகளம் பேட்டைகார நடிகர்]அவர்கள் தன் புனைவில் [ அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது குறுநாவல்] தன் சக மனுசியை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறுமை படுத்தி திரைஅரங்கின் இருட்டில் சல்லாபிக்கின்றார். கதையின் போக்கில் தன்னை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவராகவும், தம் சினேகிதியை,காதலியை மேல் சாதி பெண்ணாகவும் கதாபாத்திரங்களை கட்டமைத்த அவர் சாதிய பிரசனைகளை கதையின் ஊடே பேசும் போக்கை ஒரு புறமும் , அந்த பெண்ணை சல்லாபிக்கும் போக்கை மறுபுறமும் கதையை கொண்டு செல்ல முனைகின்றார்.
இங்கு தமிழ் நாட்டில் தென்னாற்காடு வட்டார வழக்கில் எங் கதெ என்ற குப்பையை நாவலை எழுதியுள்ள இமையம் அவர்கள் ஆணின் பார்வையில் கதையின் போக்கை கொண்டு செல்கின்றேன் என்ற நோக்கத்துடன் , பெண்ணிய நியாங்களை மூடி மறைத்து விட்டு அவளை ஊமையாகி , வார்த்தைகளை எண்ணி பேசும் சிக்கனவாதியாகி [தஞ்சாவூரு பொண்ணு பேசாமலா இருக்கும்?] அவள் பக்க நியாயங்களை மறைத்து விட்டு எந்தளவுக்கு அவளை சிறுமை படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சை படுத்தி அவளை வேசியாக்கி அழகு பார்கின்றார் இமையம் அவர்கள்.
வர்க்க அமைப்பில் மேல் சாதியில் உள்ள ஆண்டான்களின் மேல் உள்ள கோபத்தை காட்டவேண்டுமானால் அந்த கால தஞ்சை பகுதி நக்சலைட்டுகள் போல ஆண்டான்களை அழித்தொழிப்பு செய்து சிறைக்கு போவதை விட்டு விட்டு அந்த மேல் சாதி பெண்களின் உடையை வக்கிர மனதுடன் அவிழ்த்து பார்க்கும் மன நோய் தனம் இவர்களுக்கு எதற்கு?

எங் கதெ ஒப்பாய்வு விமர்சனம் : Comparative Critic about Imaiyam and Tanjai Prakash writtings

எங் கதெ ஒப்பாய்வு விமர்சனம் :

இமையத்தின் கலவாடிய  லும்பனும்  தஞ்சை பிரகாஸின்  உழைத்து கொடுத்த கள்ளனும் 


நேற்றும் முன்தினமும் இமையம் எழுதிய எங் கதெ  என்ற சிறு நாவலை படிக்க நேரம் கிடைத்தது.  கணவனை இழந்த கமலா என்ற பெண்ணுக்கும் அவளை மோகிக்கும் ஒரு லும்ப்னுக்கும் இடையிலான உறவை பற்றிய பதிவாக இந்த கதையை பார்க்கலாம். 110 பக்கங்கள்  கொண்ட இந்த கதையில் இவர்கள் இருவருக்கும் இடையிலான கூடல் ஊடல் தான் முதன்மை பெற்று விளங்குகின்றது. "கொள்கைகளை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அவற்றை பிரச்சாரம் செய்யவோ எழுதப்படுபவை இலக்கியம் அல்ல. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் அல்ல " என்று கூறும் இந்த கதையாடிக்கு  மகஇக போன்ற முற்போக்கு இயக்கங்கள் எல்லாம் முற்போக்கு பட்டம் கொடுத்து புல்லரித்துக் கொள்கின்றன.

கதையின் இறுதியில் லும்பன் ,கமலாவை கொல்லும் வெறியுடன் பிளேடு உடன் அவள் வீட்டுக்கு வருவான். கமலாவுடன் கலவாடும் போது அவளை கிழித்துக் கொல்ல நினைப்பான். நினைத்தது போன்றே அவளின் மூக்கை பிளேடால் கீறி  அதனை நெகக்கீரல் என்று சாதிப்பான்.தன் கொலைவெறியை ஆற்றுப்படுத்திக்கொள்கின்றவன்  அவளை விட்டு விலகி யார் கூடவேண்டுமானாலும் நீ வாழ்ந்துகொள்  என்று கூறி பிரிவான். இந்த கதையை படிக்கும் பொது தஞ்சை பிரகாஸ் அவர்கள் எழுதிய மற்றுமொரு கதை மனதுள் அலையாடியது. கணவனை இழந்த பொண்ணின் குடும்பத்தை தன் உழைப்பால் சுமப்பவன் கதை அது.  இறுதியில் அவன் அந்த பெண்ணின் மீது தனக்கு உள்ள அன்பை கூறுவான்.   எவர் படித்தாலும் மறக்க இயலாத கதை அது . எதுவென்று தேடி பாருங்கள் !

கலை இலக்கியங்கள் எல்லாம் சமுகத்தை ஒரு அடியாவது முன்னோக்கி நகர்த்தவில்லை என்றால் அப்படி பட்ட இலக்கியம்  என்ன மயிதுக்கு ஆசிரியர் இமையம் அவர்களே!? 

அயிலான் கவிதை II - பயணம் Refugee Ayelan Poem II Refugee Travel

அயிலான் கவிதை II -  பயணம் 

தேசம் கடந்து கடல்மிதந்து

சென்றாலும் கிடைத்தது என்ன?

மீன்கள் சுறாக்களுக்கு இரையாக

மான்கள் புலிகளுக்கு உணவாக

நான் சர்வ தேச சதிகளுக்கு

காவு ஆனேன்.

அயிலான்

அயிலான் கவிதைகள் I - நாங்கள் Refugee Ayelan Poem 1 WE

அயிலான் கவிதைகள்  I  - நாங்கள் 

என் பெயர் :

சிரியாவில் அயிலான்

ஈழத்தில் பாலா

ஈராக்கில் யாரோ

சூடானில் யார் யாரோ

ஆனாலும் எங்கள் அம்மா அப்பா

இந்த உலகத்தவரே !

அயிலான்

Friday, August 7, 2015

அறிவிப்பு : திரைபடம் சிவகார்திகேயன் Announcement : Movi SivaKarthikeyan

அறிவிப்பு :
திரைபடம் சிவகார்திகேயன் 


எம் இணைய வெளியில் [ப்ளாக்] எம்மால் எழுதப்பட்டு  கொண்டு உள்ள சிவ-கார்திகேயன்  திரைக்கதைக்கு நடிகர் தனுஷ் அவர்களை விட்டால் வேறு நடிகர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று உணருகின்றேன். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து கூட இக்கதைக்கு  நடிகர் தனுஷ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதை நான் உணருவதால் ,இக்கதையின் இன்னும் வரப்போகின்ற காட்சிகளை நடிகர் தனுஷ் அவர்களை  மனதில் வைத்தே வடிவமைக்கப்போகிறேன்.

இதுவரையில் எழுதப்பட்ட காட்சிகளை வாசிக்க ......

http://vansunsen.blogspot.in/2014/09/screen-play-for-movi-siva-karthikeyan.html
அன்புடன் ,

K.S.Kumaran  

Friday, July 24, 2015

பிணவாடையில் மனிதம் Death smell and humanity

பிணவாடையில் மனிதம் :

பிப் 2009 தமிழ் ஈழத்து உயிர்களின் கருக்கள்கள் தமிழ் நாட்டில் வாடை அடித்துகொண்டு இருந்த கொடுர தருணங்கள் அவை. அடையாறு ,சென்னையில் கணினி பயிற்று நிறுவனத்தில் என் பிழைப்பு சி ,சி++,ஜாவா என்று பேசிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது. தினம் தினம் படிக்கும் மாலை பத்திரிக்கைகளின் ஈழத்து கொலைகளின் தாக்கம்  எனக்கு  மரண வேதனையை அளித்துக்கொண்டு  இருந்து. ஈழத்து பெண் சிறுமி 17 அல்லது 18 வயது இருக்கும் ., எனது கணினி பயிலும் மாணவியாக வந்து சேர்ந்தாள். குறைந்த நேரத்தில் அதிக மென்பொருட்களை பயின்றாள். எனக்கு ஏனோ எம் அண்ணன் பிரபாகரனின் மகளையே இவளும் அடிக்கடி எனக்கு நினைஊட்டினாள். மேலும் அடையாரில் உள்ள நாட்டிய பள்ளியிலும் பயின்று கொண்டு இருந்தாள். 

மார்ச் மாத முதல் வாரங்கள் , எனக்கு ஈழத்து போர் முடிவுகள் புலப்பட தொடங்கிய தருணங்கள் அவை. எனக்குள் அளவில்லாத வேதனை ., மனதில் கடுங் கோபம் .. , உக்கிரம் .., அறிவை அழிக்கும் வெறி.., இத்தகைய தருணத்தில் அண்ணன் பிரபாகரன் எதிரியின் மகள் மீது என்ன முடிவெடுப்பார் என்று   சிந்திதேன். 
அன்று உடல் சுகமற்று கணினி கற்க வந்து இருந்தாள். உன்னை சிங்கள பெண் என்று இங்கு சென்னையில் யாரிடமும் வெளிகாட்டிகொள்லாதே என்று ஆங்கலத்தில் கூறினேன். மார்ச் மாத இரண்டாவது வாரத்தில் கணக்கியல் கற்க அவள் ஆஸ்திரேலியா சென்று விட்டாள் . எனக்கு ஏனோ அப்போது தான் மனதுள் நிம்மதி. தமிழனாய் தோற்று விட்டாலும் அண்ணன் வழியில் நானும் மனிதனாய் நிமிர்ந்து நிற்பதாக உணர்ந்தேன். 

Friday, March 13, 2015

நெடுங்கதை – துல்லிய தேசம் அத்தியாயம் 4 Henry Ford Story

நெடுங்கதை – துல்லிய தேசம்
அத்தியாயம் 4
எதோ சொல்லனும் என்று நினைத்தது மறந்து விட்டது . உம் நினைவுக்கு வருது. எனக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகுது. என் வீட்டுக்காரர் என் சொந்த ஊரு கீழகரனைக்கு இது வரைக்கும் 3 முறை தான் வந்து இருக்காரு. இத்தனைக்கும் மறைமலை நகரில் இருந்து 4கிலோ மீட்டர் தொலைவு தான். கடைசியா என்னோட பெரியப்பா சாவுக்கு ஆட்டோவில் மாலையும் கையுமா போயிருந்தோம்.ரோடு சரியிலாததாலே ஊர் கோவில் திருப்பதில் ஆட்டோவை விட்டு எறங்கியவரு ரோட்டோர ஹென்றி போர்ட் கட்டிய கோட்டைச்சுவரை பார்த்து
“இவனுங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு போயி திருநெல்வேலி விச்சருவாளால் கொண்டு வெட்டணும் வானதி. உங்க ஊருக்கு வந்தாலே மனசு பதறுது. அது தான் வரது இல்லை ”
என்று சொன்னாரு.
சாவு வீட்டுக்கு இன்னும் 5 நிமிட நடை இருந்ததாலே நானும் அவருக்கு தெளிவா பதில் சொன்னேன்.
” இவனுங்களை ,அமெரிக்க மொதலாளிகளை வெட்டி சாச்சா பிரச்சனை தீர்துடுமா ? இந்த ஊருக்கு வாக்கப்பட்ட உங்களுக்கே இவ்வளவு வருத்தம் இருக்கும் போது இந்த ஊரிலேயே பிறந்து வளந்த எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும் . என்ன செய்ய ஊரு மக்களை அரசாங்கம் பொய்யா வேலை கொடுக்கின்றேன் , வேறு இடம் கொடுக்கிறேன் என்று வாயாலேயே மொழம் போட்டு ஏமாத்திட்டாங்க. விஎஒ-வில் இருந்து அன்னிக்கு இருந்த காஞசிபுரம் கலைக்டர் வரைக்கும் இப்படி பேசியே எங்களை கொண்ணுட்டாங்க. நாம ,நாங்க எதிர்த்து போராட வேண்டியது எங்க நிலத்துக்கு புரோக்கர் வேலை பாத்த அரசாங்கத்தை எதிர்த்து தான் ”
அதுக்கு அப்புறம் சாவு வீடு வந்ததாலே பேச்சை நிறுத்திட்டு வீட்டுகுள் போனோம்.
பெரியப்பா சாவுக்காண காரணத்தையும் அவரு சாவுக்கு வந்து இருந்த நொடிஞ்சு போன விவசாயி சீத்தா லச்சுமன நாயுடு கதையையும் அப்புறமா சொல்லுறேன்.
தொடரும்

நெடுங்கதை – துல்லிய தேசம் அத்தியாயம் 3 Henry Ford Story

நெடுங்கதை – துல்லிய தேசம்
அத்தியாயம் 3
நேற்று கூட ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்து வெளியேற்றப்பட்ட ஒரு தம்பியை பார்த்து பேசினேன். வாடிய முகத்துடனும் , சவரம் செய்யப்படாத முகத்துடனும் இருந்தாரு. மறைமலை நகரில் நாங்க வாடகைக்கு இருந்த வீட்டுக்கு பக்கத்தில் தான் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி போர்டில் வேலைக்கு போய்கொண்டு இருந்தாரு. என்னுடைய கணவருக்கு அவர் நல்ல அறிமுகம் ஆனவரு. நாங்க வீடு கட்டி கரும்பூருக்கு வந்த பின்னால அவரை பார்த்தது இன்று தான். அவரிடம் நான் மறைமலை நகர் நூலகத்தில் பேசிய பேச்சின் சாராம்சம் இது தான் …
” மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் 10%க்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். மீதி இருக்கிற தொழிலாளர்கள் எல்லாம் ஒரு வருட அக்ரிமண்டில் வேலையில் இருகின்றவங்க. அதுவும் மாத சம்பளம் ரூ 7,500 மட்டும் தான் ஒரு வருடம் கழித்து மீண்டும் வேற வேலை தேடியாகனும். அல்லது சொந்த ஊரு தேனிக்கே போயாகனும். ”
மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்யும் தம்பி ,தங்கைகளை அவர்களின் நீல நிற சீருடையில் நான் பார்த்த போது எல்லாம் ஒரு காலத்தில் பெருமை பட்டுக்கொள்வேன். ஆனா இப்ப இவரு சொல்லும் ஒரு வருட அக்ரிமண்ட் ,ரூ 7,500 மாத சம்பளம் என்பதை கேட்டபின்னால மனசு கொதிச்சு போச்சு. நினைத்து பார்த்தாலே ஒருபக்க தலை வலிதான் வருது . நாம மருந்து கம்பெனி கட்டிஇருந்தா கூடகுறைந்த சம்பளமாக ரூ 10,000கொடுத்து இருக்க முடியும். ஆனா ஹென்றி போர்ட் கார் கம்பெனி மொதலாளிங்க இப்படி அடிமாட்டு சம்பளம் கொடுத்து நம்ம மக்களை தத்தளிக்க விடறாங்களே !மனசுக்குள்ள இவனுங்களை, அமெரிக்க மொதலாளிகளை திட்ட நெறைய கெட்ட கெட்ட வார்த்தையா வருது. ஆனா பொம்பள பிள்ளை இல்லையா வெளியே எப்படி சொலுவது. தூத்தேரி ஒருநாளைக்கு அமெரிக்காவில் $120 சம்பளம் கொடுக்கும் இதே கம்பெனி, ஆனா $4 சம்பளம் தான் இந்தியாவில் கொடுகிராங்க . என்ன கொடுமை இது ? ஒரு நாள் சம்பளம் ரூ 250 ல் என்ன செய்வாங்க நம்ம பிள்ளைகள் ?
தொடரும்

நெடுங்கதை - துல்லிய தேசம் அத்தியாயம் 2 Henry Ford Story

நெடுங்கதை - துல்லிய தேசம் 

அத்தியாயம் 2

நான் இந்த கதையிலே அரசியல் பத்தியெல்லாம் பேச போறது இல்லைங்க. ஆனா கதையில் அரசியல் பத்திய உள் செய்திகள் வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லைங்க. கார் கம்பெனிக்கு யாரு கீழக்கரனை நிலத்தை எல்லாம் எடுத்தது ,யாரு கம்பெனி கட்டியபின்பு தொறந்து  வைத்தது என்று கூறும் போது அதுல அரசியல் வருமே நா என்ன செய்ய ?கார் கம்பெனியை  தொறக்க டாகடர் கலைஞர் வந்ததாகாவும் அவரை பொத்தேரி அருகில் அன்னிக்கு பார்த்ததாகவும் என் வீட்டுக்காரர் சொல்லி இருக்காரு. அம்மா ஆட்சியில் தான் கீழக்கரனை நிலத்தை எல்லாம் கவர்மண்டே தரகராக இருந்து கார் கம்பெனிக்கு வாங்கி தந்ததாக அப்பா கூறியதாக நினைவு. எதுக்கு என் நிலத்தை ஹென்றி போர்டுக்கு வாங்கி தர தமிழ்நாடு கவர்மெண்டு புரோக்கர்-தரகு  வேலை செய்யணும் ?  எவ்வளவு கமிசன் யாரு வாங்கினாங்க ? வினவு இணைய தளத்தில் படித்த போது புதிய பொருளாதார கொள்கை ,அந்நிய செலவாணிக்கான முதலீடு என்று என்ன என்னமே காரணத்தை செல்லுறாங்க! அதை பத்தியெல்லாம் எங்க   கீழக்கரனை விவசாய மக்களுக்கு என்ன தெரியுங்க ? நா அப்ப ரொப்ப சின்னவ , பள்ளிக்கூடத்தில்  எழாவது தான் படிச்சிட்டு இருந்தேன். அதனால என்னால ஒன்னும் செய்ய முடியல. இனியாவது தெரிந்துக்கொண்டு மத்த ஊரையாவது ஹென்றி போர்ட் மாதிரியான ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்தலாம் இல்லையா ? அதுக்கு தான் இந்த உண்ம கதையை எழுதுறேன்.


தொடரும்



நெடுங்கதை - துல்லிய தேசம் Henry Ford Story

நெடுங்கதை - துல்லிய தேசம் 

அத்தியாயம் I 

கரும்பூர் கிராமம் ,அருகாமையில் மறைமலைநகர் நகராச்சியில்  , செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்கின்ற ஊரில் வாழும் வானதி சரவணனாகிய நான் கூறுவது யாது எனில்

"

எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள உலகில் விலையுயர்ந்த கார் கம்பெனியின் கிடங்கின் நீலநிற உலோக கூரைகள், அதன் பக்க தடுப்புகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. முன்பொரு  காலம் இப்படி தான் நெல்லும் ,கருனைகிழங்க்கும் விளைந்த கீழக்கரனை நிலம்   எங்களை துரத்தியது..., வாழ்விழந்து போனோம். நான்கு ஏக்கர் நன்செய் நிலமும் ,கிணரும் , பம்பு செட்டும் கைவிட்டு போனது.சுதந்திரத்துக்கு முன் வெள்ளைக்காரன் எங்களை போன்ற ஏழை பாழைளுக்கு  ,தலித் மக்களுக்கு விவசாயம் செய்ய கொடுத்த      நத்தம் புறம்போக்கு நிலமெல்லாம் நாம சுதந்திரம் அடைந்து சரியாக அம்பதாவது வருடம் வெள்ளைக்கார ஹென்றி போர்டு  கம்பெனிக்கே ரொம்ப கொரஞ்ச விலையில் பறிபோனது.அந்த மண்ணின் மீது எனக்கென்று ஒரு ஆசையும் இருந்தது. அப்பாவுக்கு வரும் பங்கில் நான் படித்த மருந்தாளுனர் B.Pharm  படிப்பை வைத்து கவர்மண்ட் லோன் வாங்கி சின்னதா இரும்பு சத்து டானிக் செய்யும் கம்பெனி ஆரபிக்கலாம் என்று பிளான் செய்தேன். ஹும் என்ன செய்ய இப்ப எல்லாம் போய் பிரஞ்சுகாரர் நடத்தும் இரும்பு சத்து கம்பெனியிலேயே  தர கட்டுப்பாட்டு அதிகாரியா வேலை செய்துகிட்டு இருக்கேன். ஆமாம் நம்ம கனவெல்லாம் கறைக்கப்பட்டாலும் , வாழ்வே நடுத்தெருவுக்கு வந்தாலும் ஏதோ வாழ்ந்து தானே ஆகணும். என் வலிகளை எல்லாம் குறைக்க ஒரு கவிதையாவது எழுத எனக்கு உரிமையுள்ளது அல்லவா ?

"வானத்து மீன்களாய் நாங்கள்" 

அன்று விண்மீன்கள் உலவும் இரவில் 

நிலவொளியில்  எங்கள் கழனிக்கு அருகில் 

ஓடையில்  சலசலக்கும் மீன்களை 

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று  ஹென்றி போர்டின்  தொழில்சாலை இட்ட 

முற்றுகை சுவரின் தாகத்தில் 

கீழக்கரனை கிராமத்தில் முள்ளிவாய்க்காலாக 

முடங்கி போனோம் "





"

தொடரும் 

Monday, February 2, 2015

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 8

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 8




சாருவை பற்றிய பெருமாளின் மிக பழைய கருத்து பின்நவினத்துவ ஐரோப்பிய இலகியங்களை காப்பி அடிக்கின்றார் என்பது. பெருமாளை பற்றிய சாருவின் கருத்து : பெருமாள் முருகன் மானிடவியலை ஆய்வு செய்து புத்தகம் எழுதியதாக கூறினார். நான் படித்தவரையில் அப்படியொரு ஆய்வு எதுவும் நடத்தி எழுதியதாக தெரியவில்லை’’ என்று. மேலும் பெருமாள் முருகன் ஏதோ அவருக்கு தெரிந்த்தி எழுதிவிட்டார். அது உலக பிரச்னையாக மாறி வருகிறது. அந்த புத்தகத்துக்கு புக்கர் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தஸ்லிமா நஸ்ரின் என்பவர் எழுதிய லஜ்ஜா என்ற குப்பைக்கும் விருது கிடைத்தது என்று.


பின்நவினத்துவ எழுத்தளர்களான இருவருமே ஒருவரை ஒருவர் ஒளிவு மறைவு இன்றி விமர்சனம் செய்து கொள்வது என்பது தமிழ் இலக்கிய உலகில் புதியது ஒன்றும் அல்லவே ! இலாப நோக்கத்துடன் இயங்கும் எழுத்தாளர்கள், குழுக்களாக பிரிந்து இருக்கும் சூழலின் வெளிப்பாடும் அவர்கள் தம்மை இணைத்துக்கொண்ட பதிபகங்களின் தேவைக்கும் அவற்றின் அரசியலுக்கும் ஏற்ற முறையில் காய்களை நகர்த்துவது என்பது தொடர்சியாக நடந்துகொண்டு தான் இருக்கும் .. இது இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவை ஒட்டி எளிய வாசகனும் அறிந்து கொண்ட நிகழ்வு. போன ஆண்டு அகடமி விருது பெற்ற காலச்சுவடு பதிப்பகத்தின் நாவல் போன்று இந்த ஆண்டு அகடமி விருது பெற்ற பூமனியின் அஞ்சாடி[க்ரியா பதிப்பகம் ] விற்பனை ஆகாதது தான் பெரிய சோகம் ! அடுத்த ஆண்டு அதிக விற்பனைக்கான திரைமறைவு காய் நகர்த்தல்களை அகடமி விருது பெருவதற்கான முயற்சிகளுடன் இப்போதே தொடங்கி இருப்பார்கள் !


முற்றும்

Sunday, February 1, 2015

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 7



பின்நவினதத்துவத்தை புரிந்துகொள்வது எப்படி ?மனிதன் தன்னை உள்நோக்கி பார்த்தல். அந்த உள்நோக்களில் நாம் உலகை எப்படி கான்கின்றோம் என்ற பார்வையை மனிதனுக்கு கொடுக்கும் முறை. தேகம்-தர்மா வின் பார்வையும் அப்படி பட்ட பாவையே ! அவன் மனம் கூறும் நியாயங்கள் /அநியாயங்கள் அனைத்துமே அவன் உள்உணர்வு சார்ந்ததே ! பின் நவினத்துவம் என்ற போக்கு மனிதனின் பார்வையை உள் உணர்வுகள் அடிப்படையில் சாதி சார்ந்தும் ,மதம் சார்ந்தும் வெளி உலகை நோக்கிய தேடலை கொடுக்கும் போது அது தேகம்-தர்மாவின் செயல்களிலும் அவன் பிறரை செய்யும் வதைகளிலும் பிரதி எடுக்கின்றது. பின்நவினதத்துவத்தின் ஒரு முக்கிய கூறான தொடச்சி அற்ற தன்மை தேகம்-தர்மாவின் கதை ஓட்டத்திலும் எதையும் முடிக்காமல் அங்கங்கே தாவிசெல்லும் போக்கில் இருந்து காண முடியும்.பின்நவினதத்துவத்துவம் இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது என்பதை தேகம்-தர்மாவின் செயல்கள் மூலம் காணமுடிகின்றது. ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகனையும் காடை எனும் தாதாவையும் வதைக்கும் அதே தர்மா தான் பின்னொரு இடத்தில் ஒரு நாயை கல்லடித்ததற்காக ஒரு சிறுவனையும் வதைக்கிறான். ஒரு பெண்ணை கற்பழிப்பதும் நாயை கல்லடிப்பதும் ஒரே மாதிரி குற்றங்களா? பின்நவினதத்துவத்துவம் எல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை என்று கூறுகின்றது. தேகம்-தர்மா செலின் என்ற காதலியை நிறைவாய் புணராமல் மறைமுகமாய் அவளை வதைக்கிறான்.அடுத்து நேஹா என்றொரு காதலி. அவளை மேலும் நுட்பமாக தனது விலகலின் மூலம் உளவியல் ரீதியாக வதைக்கிறான். அவள் பைத்தியம் பிடித்து சாகிறாள். கடைசியாக அவன் மீனா என்றொரு “மிடில் கிளாஸ்” பெண்ணை மணந்து கொள்கிறான்.


எது எப்படி இருந்தாலும் தன்னை பின் நவினத்துவ முதல்வன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு எழுத்தாளன் தேகம்-தர்மாவை போன்று பின் நவினத்துவமாக வாழாமல் தர்மாவின் வாழ்க்கையை எழுத்தில் வடித்து இருக்க முடியாது.


பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்ற பின்நவினத்துவ கூறுகள் உள்ள வரலாற்று புனைவில் சமுக அழுத்தம் காரணமாக குழந்தை பேறுக்காக மாற்று முறையில் முனையும் பெண்ணின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் ? பாலியல் விடுதலையை மையம் கொண்டதாகவா ? அல்லது வலியுடைய தேடலாகவா ? இந்த இடத்தில் பொன்னாவின் மன் உணர்வுகளை வெளிகாட்டுவதில் பெருமாள் தன் நிலை இழகின்றார். வருனனைகளுடன் வேறுவிதமான தேடலை காட்சி செய்கின்றார் ! மானுட விடுதலையே பாலியல் தேடலில் தான் உள்ளது போன்று தன் பின் நவினத்துவ trend ,வாலை ஐ அவிழ்த்து விடுகின்றார் ! எத்தகைய பின் நவினத்துவ கூறுகள் இதில் பதிந்து உள்ளது என்றால் வரலாற்றை மீண்டும் எழுதும் முறையாகிய [மெடபிக்‌ஷன்] முறையாகும் .


தொடரும் .....

How to write like Saru? தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 6

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 6

நவினத்துவ எழுத்தாளர் திரு ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் என்ற கதையை மீள்வாசிப்பு உட்படுத்திய போது இந்த பின் நவினத்துவ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தூய நதியில் கலக்கும் சாக்கடை நீர் போன்று இலக்கியத்தில் கலந்த கசடுகளாகவே காட்சி அளிக்கின்றன. 1966களில் எழுதப்பட்ட அக்கினிப் பிரவேசம் என்ற கதையாடல் திடீர் என்று ஒருவனின் பாலியல் தேவைக்கு ஆட்படும் ,உட்படும் இளம்பெண்ணை அவளின் அம்மா தூய்மை படுத்துவது என்ற கருத்தை மையம் கொண்டது. இக் கதையில் JK அவர்கள் நினைத்து இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பாலியல் நிகழ்வுகளை வருனனையுடன் காட்சி படுத்தி இருக்க முடியும். ஆனால் அவரின நோக்கமும் ,கதையின் போக்கும் ஆண் ஒருவனின் பாலியல் தேவைக்கு ஆளாகும் ஒரு சிறுபெண்ணை எப்படி மீண்டும் வாழ்வின் எதார்த்த போக்கில் கொண்டு செலுத்துவது என்பதையே முதன்மையாக கொண்டதாக இருந்தது.

சாருவின் போதைக்கு வருவோம். தனக்கு அறிமுகம் ஆன பெண்களுடன்[காதலிகள் என்று கூற மாட்டேன்] பாலியலில் ஈடுபடும் தேகம்-தர்மாவின் நடவடிக்கைகள் அதனை பற்றிய சாருவின் வருனைகள் மிகவும் விகற்பமாகவும் , தன்னை மிஞ்சி எவரும் காமத்தை காட்சி படுத்த இயலாது என்ற திமிர் போக்கிலும் , காமத்தில் ஈடுபடும் போது கூட அதனை முழுமையாக பகிராமல் பெண்களை உணர்ச்சி வெளியில் சிறுமை படுத்த முடியும் என்ற கருத்தையும் தெளிவாக தன் தர்மாவின் சிந்தனையில் இருந்து visual செய்கின்றார் சாரு.

மாதொருபாகனின் பொன்னா 14 ஆம் நாள் திருவிழாவுக்கு போன முடிவில் இருந்து தொடங்கும் இரு நாவல்களில்[அர்த்தநாரி ,ஆலவாயன்] காளி மரணம் அடைந்தால் .....,காளி மரணம் அடையாமல் இருந்தால் என்ற இரு விதமான வாழ்வியல் சூதாட்டங்களை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி எழுதித்தள்ளிய பெருமாள் முருகன் இலக்கியத்தில் புதிய வகைமையை கொடுத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு நிற்கின்றார் !

என்ன இருந்தாலும் JK என்ற இலக்கிய ராசா...., ராஜா தான் !

தொடரும் .....

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 5

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 5


               பின் நவினத்துவ எழுத்து என்றால் இன்றைய எழுத்தளர்களுக்கு அலாதியான பிரியம். ஏதும் வரைமுறை இன்றி தறிகெட்ட எழுத்து எழுதுவதை தானே இவர்கள் தமது சிந்தனை வெளியின் உள்நோக்கிய சிதறல் என்று பெருமைபடுகின்றார்கள். தேகம் நிகழ்கால வாழ்வை பின் நவினத்துவ வடிவத்துடன் இணைகின்றது என்றால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் வரலாற்றை பின் நவினத்துவ கூறுகளுடன் சங்கமம் செய்கின்றது. எது எப்படியாயினும் சாரு மற்றும் பெருமாளில் எழுத்து வெளி அவர்களை பொறுத்தவரை மிகவும் தெளிவானது. அந்த தெளிவில் இருந்து தானே அவர்கள் வாழ்க்கையை பயில்கின்றார்கள். பெருமாள் காட்டும் 14 ஆம் நாள் திருவிழா நிகழ்வுகள் உண்மையாக இருப்பினும் அதை நோக்கிய பொன்னாவின் மகப்பேறுக்கான பயணம் மிகவும் செயற்கையானது. “மாதொரு பாகன்” நாவலில் திருவிழா ஒன்று கூடலை படிமப்படுத்தும் நாவலாசிரியர் “ஆதி மனிதன் தன்னைக் கண்டடைகிறான்” என்று குறிப்பிடுகிறார். திருவிழாவிற்கு கூட வந்த அம்மாவை பிரிந்த பிறகு தனக்கென இணை தேடுகிறாள் நாயகி பொன்னா. பின்நவீனத்துவத்தின்படி இந்த ஒன்று கூடல் பல்வேறு மக்கள் குழுக்களில் இருந்த, இருக்கும் ‘கார்னிவல்’ கொண்டாட்டம். அடக்கப்பட்ட பாலியல் உறவுகளில் வெந்து நோகும் மக்கள் தணித்துக் கொள்ளும் ஒரு கலாச்சார நடவடிக்கை. இந்த பார்வை சரியானது தானா ? பெருமாள் அப்படியே இருக்கட்டும் ! தேகத்துக்கு வருவோம்.


                சாருகாட்டும் பாலியல் சார்ந்த மனிதனுக்குள் நிகழும் உயிர் வேதியல் நிகழ்வுகள் மிகவும் எளிமையாக தேகத்தில் காட்சிபடுத்த படுகின்றது."உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது." என்ற எழுத்துக்கள் எல்லாம் எனக்கு எதனை நினைவுபடுத்துகின்றது என்றால் பெருமாளின் “மாதொரு பாகன்” பின்நவினதுவத்தை விவரிக்கும் கோனார் நோட்ஸ் என்றால் சாருவின தேகம் அதே வேலையின் தென்றல் நோட்ஸ் போன்றது தானே ?


தொடரும் .....

Saturday, January 31, 2015

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 3




தன் வாழ்க்கையையே குடிப்பது ,பிச்சைபெற்றும் குடிப்பது ,பிச்சைபெற்றும் வெள்ளைக்காரன் சரக்கை மட்டுமே குடிப்பது அதன் பின் இணைய உரையாடலில் பெண்களுடன் வக்கிரமாக புணர்வது என்ற உன்னதமான கொள்கைகளுடன் வாழும் வக்கிர எழுத்தாளனுக்கு ,வாழ்க்கையை தினம் தினம் சிரித்துக்கொண்டே ஆனால் கடின உழைப்புடன் கழிக்கும் ,12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் தேனீர் கடை சிறுவனின் வாழ்க்கை எல்லாம் எச்சமாகத்தான் தெரியும். எனக்கு ஏனோ கற்றது தமிழ் படத்தில் திரு ராம் காட்சி படுத்தும் ஒரு உணர்வு பூர்வமான காட்சி தான் சாருவை நினைக்கும் போது நினைவுக்கு வருகின்றது. இரவு வரும் காரை வழிமறித்து கற்றது தமிழ் பிரபாகரன் BPO ஊழியரிடம் போசும் காட்சித்தான் அது.


தொடரும் .....

How to Write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2




விளிம்புநிலை மனிதர்கள் குற்றவாளிகளாக தான் இருப்பார்கள் என்று தமிழர்களின் பொது சிந்தனைக்கு காட்சி படுத்திய பெருமை சாருவையும் ,செல்வராகவனையுமே சேரும். விளிம்பு நிலை மக்களும் உழைப்பாளிகள் தான் என்று போன தலைமுறை இலக்கியத்திலேயே காட்சி படுத்திய ஜெயகாந்தன் போன்றவர்கள் சாருவுக்கு கோமாளிகளாகவே தெரிவார்கள். வழக்கு எண் 18/9 என்ற படம் காட்டும் படிமங்களும் ,தேகம் காட்டும் விகற்பங்களும் நேர் எதிரானவை. முன்பே கூறியது போன்று தேகமும் ,புதுப்பேட்டையும் வக்கிர இலக்கிய கூட்டாளிகள் என்றால் JK வின் படைப்புகளும் ,பாலாஜியின் வழக்கு எண் 18/9 என்ற படமும் வாழ்வின் உன்னதமான ஆனால் வலிமிகுந்த ஏடுகளை காட்சிபடுத்தும் இலக்கிய வகைமைகளை சாரும் அல்லவா சாரு?


தொடரும் .....

How to write Novel Like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1



பின்நவினத்துவம் ஆராதிக்கும் விளிம்புநிலை மனிதர்களை [குற்றவாளிகளை] பற்றி நாவல் எழுதவது எப்படி என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்த பதிவுக்கு செல்வதற்கு முன்நிபந்தனையே தனுஷ் ரவுடியாக நடித்த செல்வராகவன் படமும் ['புதுப்பேட்டை'] பாலியல் சார்ந்த கெட்டவார்த்தைகளை பற்றிய அறிவின் அறிதலுமே ஆகும். தேகத்தை புதுப்பேட்டையின் மற்றும் ஒரு பிரதி என்றால் சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் நம்புவீர்களா ? என்ன செய்வது குமுதத்தில் உள்ள ஆறு வித்தியாசத்தை போன்றே 69 [பாலியல் குறியீடு ] ஒற்றுமைகளை எம்மால் சாருவுக்கு சமர்பணம் செய்ய முடியும் ! மேலும் இரண்டாம் நிபந்தனையாக தேவை படுவது என்னவென்றால் மின்னஞ்சல், காதல் கடிதங்கள் , இணைய பில்கள் , EB-பில்கள் போன்றவையே !


குறிப்பு : தேகம் நாவலை படிக்க கொடுத்த நண்பன் சாருவிடம் வதைபடுவானாக!


தொடரும் ......

Friday, January 23, 2015

சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 20th Jan,2015

சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 20th Jan,2015

தலைகீழான நூழைவில் நான் மாட்டிக்கொண்டது காலச்சுவடு மற்றும் பெருமாள் முருகனிடம் . புத்தகம் வாங்க வைத்து இருந்த பணம் எல்லாம் கீழ்கண்ட புத்தகங்கள் வாங்கியதால் கரைய பட்டிக்காட்டார் மிட்டாய் கடையை வேடிக்கை பார்ப்பது போன்று மீதி கடைகளை வேடிக்கை பார்த்தபடியே சென்றேன் .

[1] ஆலவாயன் நாவல் -பெருமாள் முருகன்
[2] அர்த்த நாரி நாவல் -பெருமாள் முருகன்
[3]ஏறுவெயில் நாவல் -பெருமாள் முருகன்
[4]நிழல்முற்றம் நாவல் -பெருமாள் முருகன்
[5]கூளமாதாரி நாவல் -பெருமாள் முருகன்
[6]சாதியும் நானுன் கட்டுரை -பதிப்பாசிரியர் பெருமாள் முருகன்
[7] கெட்ட வார்தை பேசுவோம் கட்டுரை – பெருமாள் முருகன்
[8]தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததி
[9] இராஜாராஜா சோழனின் காந்தளூர் சாலை போர் பற்றிய ஒரு நூல் 

என்ன தான் பெருமாள் முருகனின் தீவிர வாசகராக நான் இருந்தாலும் என்னை மிகவும் ஈர்த்து கிழைக்காற்று கடையில் வாங்கிய தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததி புத்தகமும் ,வேறு ஒரு கடையில் வாங்கிய இராஜாராஜா சோழனின் காந்தளூர் சாலை போர் பற்றிய ஒரு நூலும் தான்.

Monday, January 19, 2015

Tholkuti E-Publishing பதிப்பகம் : எமது கன்னி முயற்சி

பதிப்பகம் :  எமது கன்னி முயற்சி 

தமிழ் கூறும் உலக தமிழ் மக்களுக்கு எனது வணக்கங்கள். இன்றைய  அரசியல்,சமுக ,பண்பாட்டு சூழலில் எழுத்துலகின் பங்கு எம்மை  சிந்திக்க வைக்கின்றது. தமிழ் உலகில் எழுத்து எழுத்து போதுமானது தானா?  ,சமுக சிக்கல்களை எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமானது தானா? ,என்று எல்லாம் யோசிக்கையில் நாமே நல்ல எழுத்துகளை பதிபித்தால் என்ன என்று தோன்றியது. பதிப்பகம் என்றால் அலுவலகம் ,அச்சு இயந்திரம் ,பணி ஆட்கள் போன்ற விடயங்களுக்கு அதிக பொருள் செலவு ஆகுமே என்று பயப்பட தேவை ஏதும் இல்லாத மின் பதிப்பகம் போன்ற அமைப்பு எமக்கு கைகொடுக்கும் என்று நினைக்கின்றேன். பேப்பர் ,மை செலவு இல்லாத ,மார்க்கெட் செய்வதற்கு  விளம்பர செலவு செய்ய தேவை இல்லாதா மின் பதிப்பக[e-publishing] முயற்சி இது.

என்ன பெயர் வைக்கலாம் பதிப்பகத்துக்கு ? என்ற கேள்வியுடன் தினம் தினம் வாழ்வை நகர்தியவன் இன்று பெற்ற பதில் தான் "தொல்குடி மின்  பதிப்பகம்"[Thol kuti   e-publishing].  புத்தகங்களை வாசகர்களுக்கு அனுப்பும் முறை மிக எளிதானது. புத்தகம் வேண்டுவோர் எமது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் புத்தகம் உடனே ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 விரைவில் நூல் வெளியீடு இணையத்தில் !


அன்புடன் ,

தொல்குடி மின் பதிப்பகம் சார்பாக 
கி.செந்தில்குமரன்  
19, January 2015
Chennai

Tuesday, January 13, 2015

எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக [Regarding Writer Perumal Murugan Announcement ]

எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக :



மனிதன் இயற்கையில் தனியானவன் கிடையாது. சமுகமயம் ஆக்கப்பட்டவன். IT துறை சார் ஊழியர்கள் வேலை இழக்கும் போது அடையும் மன நெருக்கடி , பெமு இன்று உணரும் தனிமை இதற்கு எல்லாம் மூல காரணம் இன்றைய நாகரிக மனிதர்கள் தம்மை தனிமை படுத்திக்கொண்டு தீவுகளாக வாழ்வது தான் . Let them socialize ! அப்படி என்ன தவறாக இறைவனை பற்றி எழுதப்பட்டு உள்ளது மாதொருபாகனில் ? நாவலை முழுமையாக படிப்பவருக்கு , அத் தம்பதிகள்[காளி-பொன்னா] குழந்தை பேறுக்காக அபாயகரமான சுற்றுதலை தி.கோடு மலையில் செய்யும் போது அடையும் மன உணர்வுகள் காய்நத மனதையும் ஈரமாக்குமே ! நான் கதையில் உள்ஆழ்ந்தபோது காளி-பொன்னா ஆகியவர்கள் இருவரையும் சிவனும் -சக்தியுமாகத்தான் நான் சிந்தனை செய்தேன் . நாத்திகனாக் இருந்த என்னை சிவன் மீது பக்தி ஏற்பட செய்தது இந்நாவல் [மாதொருபாகன்] தான் .சிவனுக்கும் ,சக்திக்கு பிறந்த முருகனின் பிறப்பு இயற்கையில் நடைபெறாதது , முருகனின் கருபிண்டத்தை கார்திகை மகளிர் புவியுலகில் பெற்று கொண்டது , பின்பு சக்தி அக்கருபிண்டங்களை ஒருங்கினைத்து ஆறுமுகனாக மாறியது இவை எல்லாம் அந்நாவல் காட்டிய ஆனால் நாவலில் வெளிப்படையாக இல்லாத படிமங்கள். என் தனிப்பட்ட வாழ்வில் சிவனின் மீது பற்றுடன் மதசார்பற்ற ஹிந்துவாக வாழ்வதே இன்று கேள்விக்குறியாவதால் , இனி என்ன மனதில் உள்ள சிவனையும் ,எதார்தத்தில் ,உண்மையில் சிவனின் புகழ் பாடும் இந்த மாதொருபாகன் நூலையும் எரிக்கத்தான் போகின்றேன் திருசெங்கோடு மலை ஏறிச்சென்று.

pk என்ற திரைபடத்தில் வெளிகிரகவாசியாகிய நாயகன் கேட்பது போன்று கூட கடவுள் மீது எக் கேள்வியும் எழுப்பாத இன் நாவலில் உள்ள ஒரே குறைபாடு திருச்செங்கோட்டை களமாக கொண்டு பதினான்காம் நாள் திருவிழாவையும் [ carnival ]சமுகத்தில் நடைபெறும் விதிவிலக்கான இருதி காட்சிகளையும் கதையாசிரியர் நிகழ்தியதே ![[கள்ளக்காதல் மற்றும் பிற பாலியல் குற்றங்கள் நிகழாத  ஊராக அவ்வூர் இருக்க எனது வாழ்த்துக்கள் ]   ஊர் ,சாதி பெயர் இன்றி எழுதப்பட்ட ஆனால் வலிமையான் பூக்குழி நாவல் போன்று பொதுமைபடுத்த பட்டு இருப்பின் நன்றாக இருந்து இருக்கும். பிரச்சனையில் நகைமுரண் என்னவென்றால் இக்கதையில் நான் சென்சார் செய்யபட்ட வேண்டிய காட்சிகள் என்று உணர்ந்த பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கபட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யபட்டதே ! இனி பெருமாள் முருகனே நினைத்தாலும் இந்நாவலை மட்டும் அல்ல ,அவரின் என் நாவலையும், எந்த எழுத்தையும் வாசகர்களிடம் இருந்து நீக்கவோ ,தடை செய்யவோ முடியாது. எழுத்து எழுதப்பட உடன் அதன் எழுத்தாளன் மரணிக்கின்றான் அவன் எழுத்து மட்டுமே வாழும் எனற நவினத்துவ கருத்தாக்கதிற்கு ஏற்ப இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பெமுவின் எழுத்துக்கள் உயிர் வாழும் . ஒரு பிரதி கூட மிஞ்சாமல் அனைத்து பிரதிகளையும் எரித்து நூலின் கருத்துகளை மறைக்க இது ஒன்றும் சமண மத சுவடிகள் அல்ல !