Thursday, September 18, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி 16 பின்னணி காட்சிக்கான பாடல் Song for scene #16 Flashback Scene XII

காட்சி #16: பின்னணி காட்சிக்கான பாடல்
[இளையராசாவின் "How to Name it " போன்ற பின்னணி இசையுடன் பாடல் காட்சி தொடங்குகிறது. அடுத்து மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்றான ஹம்சானந்தி மற்றும் பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி ராகங்களின் கலவையாக "நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்" போன்ற நா. முத்துக்குமார் பாடல் தொடங்குகின்றது
http://fileraja.com/Tamil/01/7G_Rainbow_Colony_160kbps/Ninaithu_Ninaithu_Parthal-VmusiQ.Com.mp3
]
மாதிரி பாடல் [Template Song]
கதைத்து கதைத்து பேசினால்
காலம் எல்லாம் உன்னுடன் இருப்பேன்
நம்மால் தானே பூக்கள் பூக்கின்றன ஓ......
என்னில் இன்று உன்னை காண்கிறேன்
தொட்டுச்சுட்டு அறியும் முன்னே
தெரியும் காதல் உனக்கு தானே
நம்மால் தானே பூக்கள் பூக்கின்றன ஓ......
என்னில் இன்று உன்னை காண்கிறேன்

நடந்து போகும் பாதையின் சுவடும்
எனது காதலை நாளும் கதைக்கும்
நெகிழ்ந்து போன உடையின் துயரமா
நாவில் சுவைத்த தேனீர் சுவையை
நாள் தோறும் மேசைகள் கதைக்கும்
நொறுங்கி போன மனதின் வருத்தமா
பிஞ்சுநெஞ்சில் இன்பம் சேர்க்கும்
இறகுகள் உந்தன் மனதில்
களத்தில் நின்று சண்டைகள் போட
நமது ஊழில் சாத்தியம் இல்லை
கன்னி சண்டை போதுமே நண்பா கோபம் துறந்திடு

கடந்து போன காட்சிகள் எல்லாம்
எனது மனதில் உயிரோடு உலவும்
காலம் அழியும் கனவுகள் அழியுமா
சிரித்து பேசிய உணர்வுகள் எல்லாம்
இன்றும் என்றும் என்னுடன் வாழும்
எந்தன் நெஞ்சம் உன்னை மறுக்குமா
முறிந்து போன உறவின் சாட்சி நின்று நின்று பார்க்கும்
மறைந்து போன வலிகள் என்றும்
மீண்டு வருவாய் நீயும்
என் நொடியும் வெப்பம்
தகிக்க என்னுள் இருக்கிறாய்

(கதைத்து கதைத்து பேசினால் ....)

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #16 பின்னணி காட்சி XII Screen Play for the Movie Siva-karthikeyan scene #16 Flashback Scene XII

காட்சி #16: பின்னணி காட்சி காட்சி X I I : பகல் மணி 8 மணி EXT , INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை, விடுதிக்கு வெளியே ,சாலை ,காண்டீன்,வகுப்பறை,gum ,நடனமேடை

கார்திகேயனுக்கு செல்போனில் சிவ சங்கரி அழைப்பு விடுக்க அவன் கால்-ஐ கட் செய்கின்றான்.
[தொடர்சியாக 3 முறை இது நடக்கிறது ]

[இளையராசாவின் "How to Name it " போன்ற பின்னணி இசையுடன் பாடல் காட்சி தொடங்குகிறது. அடுத்து  மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்றான ஹம்சானந்தி மற்றும் பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி ராகங்களின் கலவையாக "நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்" போன்ற நா. முத்துக்குமார் பாடல்தொடங்குகின்றது
]

மாணவிகள் விடுதியை விட்டு வெளியே வருகின்றாள்.

அவன் ஒத்தை காலில் நின்று காத்து இருக்கும் மரத்தை காண்கின்றாள். அவன் போக்கேயுடன் 'அன்று' நின்ற உருவமும் தெரிகின்றது பழைய நினைவுகள்[கற்பனையாக]

சாலையில் நடக்கின்றாள்....

கார்திகேயனும் அருகில் நடப்பது போல [கற்பனையாக]

காலையில் breakfast சாபிடாததால் காண்டீன் செல்கின்றாள்......

அவன் டீ வாங்கி வந்து பரிமாறும் பழைய நினைவுகள்[கற்பனை].

தனிமையில் அமர்ந்து டீ குடிக்கின்றாள்....

அவள் பின் அவன் அமர்ந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றான் ....

வகுப்பறையில் ஒருவருடன் மற்றவர் பேசிக்கொள்ளவில்லை .......

இடைவேளையில் இவர்கள் இருவர் இருந்தும் பேசிக்கொள்ள வில்லை .....

இருவரும் நட்புடன் பேசிக்கொள்ளும் பழைய நினைவுகள் [கற்பனையாக]

பெஞ்சில் முகம் புதைத்து தன் அழுகையை மறக்கின்றாள் ....

ஏதும் நடக்காதது போல அவன் தன் lap top ல் முழ்கி கிடக்கின்றான் ......

அன்று மாலை வகுப்பு முடிந்து கூட்டமாக மாணவர்கள் வெளியே செல்லும் போது சிவசங்கரியும் செல்கின்றாள்

அவன் தன் இருக்கையில் அமர்ந்தவாறே "சிவா " என்று அழைக்கின்றான்.

அவன் குரல் காற்றில் ,இரைச்சலில் கரைய .... சிவசங்கரி அவன் அழைத்ததை அறியாமல் செல்கின்றாள்.

இருவரும் ஒன்றாய் வகுப்பு விட்டு செல்வது போல [கற்பனையாக]

கோபத்தில் தன் lap top shout down செய்யாமல் மூடும் கார்திகேயன் ....

தன் கோபத்தை குறைக்க Gim ல் கார்திகேயன் வியர்வை வழிய ஆவேசமாக exercise செய்யும் காட்சி ....

தன் சோகத்தை மறக்க சிவசங்கரி நடனமாடும் காட்சி .....

[பாடல் முடிகின்றது ]

காட்சி #16: பின்னணி காட்சி காட்சி XI I முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #15 பின்னணி காட்சி XI Screen Play for the Movie Siva-karthikeyan scene #15 Flashback Scene XI

காட்சி #15: பின்னணி காட்சி காட்சி X I : இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran

அழுது அழுது களைத்துப்போன சிவ சங்கரி ஆழ்ந்து தூங்குகின்றாள். சொல்போன் ஒலிக்கின்றது. செல்போன் திரையில் தாமரை என்று மின்னுகின்றது. பார்த்தவள் முகம் கழுவ செல்கின்றாள். முகம் துடைக்கும் சிவ சங்கரியின் கண்கள் அழுது அழுது சிவந்து உள்ள close up காட்சி.

போனை எடுத்து தாமரைக்கு அழைப்பு செய்கின்றாள். ரிங் டோன்......

[இன்டர் கட் ]

மறு முனையில் போனை எடுக்கும் தாமரை "என்ன சிவா படிக்கிறியா ..., disturb செய்யறேனா.., சாரி பா" என்றவாறே "பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை" மூடுகின்றாள்.

[இன்டர் கட் ]

"இல்ல தாமர தூங்கிட்டேன்..., பிரியா தான் இருக்கேன் ...,என்ன செய்துகிட்டு இருக்க பா " என்றவாறே படுக்கையை சிவ சங்கரி சரி செய்கின்றாள்

[இன்டர் கட் ]

"எங்க intercaste marriage கதை மாதிரியே ஒரு நாவல் படித்துக்கொண்டு இருக்கேன்" என்னும் தாமரை [ பூக்குழி புத்தகம் front page close up ல் காட்டப் படுகின்றது.]

[இன்டர் கட் ]

"என்ன professor என்னுமா வரலை ? " என்ற சிவ சங்கரி " ரிலேசன்ஸ் எல்லாம் கம்ப்ரமிஸ் ஆகிட்டாங்கலா ? என கேட்க....

[இன்டர் கட் ]

"நீவேற சிவா இது தமிழ்நாடு பா ...., இங்கு தமிழ் உணர்வை விட cast பீலிங் தான் அதிகமிருக்கும் நம்ம மக்களுக்கு" என்று கூறி தாமரை சிரிக்கின்றாள். [ பூக்குழி நாவலின் பின் அட்டையில் உள்ள பெருமாள் முருகனின் படமும் அதில் உள்ள நாவல் பற்றிய சிறு விமர்சனமும் tight close up ல் காட்ட படுகின்றது ]

[இன்டர் கட் ]

"ஏன் என்னைய நா பாத்த சாதிபார்க்காத தமிழச்சியா தெரியலையா உனக்கு .... நான் இருக்கும் வரை எதுக்கும் கவலை படாதே கண்ணு " என்றவாறே சோகமான மன நிலையிலும் சிரிக்கின்றாள் சிவ சங்கரி

[இன்டர் கட் ]

"thanks lot சிவா ..., marriage ஆகாம கூட கருமுட்டையை தானம் செய்ய எப்படி பா தோணுச்சி ? " - தாமரை

[இன்டர் கட் ]

"நீ எனக்கு friend மட்டுமா டி? அதுக்கும் மேல என் உயிர் டி ! இது வரைக்கும் நீ தான் எல்லா உதவியும் எனக்கு செய்யுரே அதான் நீ கேட்ட உடன் எதையும் யோசிக்காம சரினு செல்லிட்டேன்"

[இன்டர் கட் ]

"வீட்டில் சொன்னியா பா " - - தாமரை

[இன்டர் கட் ]

"இல்லை தாமரை சொல்லலை [pass] ...... யாருக்கோ முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா கொடுக்கின்றேன். உனக்கு தானே பா ? குழந்தையை நல்லா படிக்க வை என்ன ?" - சிவ சங்கரி

[இன்டர் கட் ]

" ஆமாம் சிவா... உன்னை மாதிரியே அழகான ,அன்பான ,அறிவான குழந்தை பிறக்கும் இல்லையா பா ? அதை  நல்லா படிக்க வெச்சி நீ படிக்கிற I I M ல் சேர்கின்றேன் பா " - தாமரை

[இன்டர் கட் ]

"குழந்தைக்கு உரிமை கோரி எல்லாம் வர மாட்டேன் தாமரை பயப்படாதே .... கன்னத்தில் முத்தமிட்டால் படம் மாதிரி துர இருந்து சந்தோசபடுவேன் பா ....... "என்று கூறிய சிவ சங்கரி சோகமாக சிரிகின்றாள்
"சரி dinner க்கு late ஆகுது மெஸ் close செய்துட்டாங்கனா magi நுடல்ஸ் தான் சாப்பிட வேண்டி இருக்கும்...  பாய் பாய் Good Night "

[இன்டர் கட் ]

"Good Night siva " - தாமரை

காட்சி #15: பின்னணி காட்சி காட்சி XI முற்றும்