Monday, February 24, 2014

மாதொருபாகன் - பெருமாள்முருகன் -காட்சி படுத்தும் ஆய்வு [Mathorupakan-Perumalmurugan A Complete Screen Play Analysis ]

"...............................குழந்தைப்  பேறு  இன்மையின் வலியும்,சமுக  தாக்கமும்  பெண்களுக்கே  மிகுதியாக  இருப்பதாலும் , இக்  கதையை    பொன்னாவின் பார்வையில்  இருந்து தொடங்கி பின்கதைகளை  இணைத்து  துயரங்களைக்  கூறி  ,பின்பு    நேரலைக்   காட்சிகளாக கொண்டு செல்வது  இந்த நல்ல படைப்பை  காட்சி  ரசிகருக்கு [screen  viewer ]  எளிமையாக்கும்............."

திரு பெமுவின்  நாவல்கள்  ஒன்றோடு  ஒன்று  கதை  உள்ளட்க்கத்தில்  வேறுபட்டு  இருந்தாலும் , மானுடவியல்-வரலாற்று நிகழ்வுகளை  காட்சிப்  படுத்துவதில்   இயைந்து வரிசையில்  நின்று ,திரு  பிரபஞசனின்  மானுடன் வெல்லும்  என்ற மானுடவியல் சார்ந்த  நாவல்  போல சிறப்புத்  தோற்றம்  அளிப்பதில்  எந்த வியப்பும்  இல்லை ! மானுடவியல்  பின்னணியுடன் எழுதப்பட்ட,  1930-40 களின் கொங்கு  நிலத்ததின்  வரலாற்று கூறுகளுடன்  வடிக்கப் பட்ட  சொற்  சிற்பம் தான்     மாதொருபாகன்.   மொத்தம் 190 பக்கங்களுடனும் ,ரூ 140 விலையுடனுன் ,34 அத்தியாயங்களுடனும்[scenes ] எழுதப்பட்ட  இன்நூல்  காலச்சுவடு பெரும் பதிபகத்தால்  பதிக்கப்பட்டு  உள்ளது. இக் கதையில் நடக்கும் 24 மணி நேர  நிகழ்வுகளை  கதைநாயகன்  காளியின்  போக்கில்  ,பின் கதைகளுடன்[flashbacks]  இணைத்து பெமு கூறியுள்ளார்.

 இக்  கதையை  காட்சிப்  படுத்த[writing screen play ]  முடியுமா  ? முயன்று  பார்ப்போம் !  கதையின்  அத்தியாயங்களை [scenes] முதலில்  வரிசைப்  படுத்துவோம்.



பாகம்  அ
[1] மாமன்  வீட்டு  பூவரச மரம்  பூத்து  ஏற்க,  திரு விழாவுக்கு  வந்த  காளி !
[2]பூவரச மரத்தீன் வயதான   12 ஆண்டுகளும்  குழந்தை பேறு   இல்லா  காளி-பொன்னா
[3]மறுமணம்  பற்றிய  பொன்னாளின்  ஊடல்     [ பின் காட்சி 1 [flashback ]]
[4]பூவரச மர நிழலில்  காளி-பொன்னா உரையாடலும் ,குழந்தை பேறு  இன்மைக்கான  சாபம்  பின் காட்சி [ பின் காட்சி 2 [flashback ]]
[5]குழந்தை பேறு  இன்மைக்கான  பாவாத்தாவின் சாபம்  பின் காட்சி3[[ பின் காட்சி 3 [flashback ]]
[6]பாவாத்தாவுக்கு  சிறு  தெய்வ  வழிபாட்டு  பூசை பின் காட்சி4[பின் காட்சி 4 [flashback ]]


பாகம்  ஆ
[7]பின் காட்சியுடன்  நண்பன் ,மச்சான்  முத்துவின்  அறிமுகம் [பின் காட்சி 5 [flashback ]]
[8]திருச்செங்கோடு -மலை -வறடி கல் -சுற்றுதல்   [பின் காட்சி 6]
[9]நங்கையுடன்  முரண்பாடு -காளி  மாமன்  வீட்டுடன்  சண்டை [ பின் காட்சி 7]
[10]நல்லுப்பையன்  சித்தப்பா  கதை1 [பின் காட்சி 8]
[11]காளியீன்  கோயிலாட்ட நினைவுகள் [பின் காட்சி 9]
[12]நல்லுப்பையன்  சித்தப்பா  கதை2[பின் காட்சி 10]
[13]அம்மா ,மாமியார் "சாமீப்  பிள்ளை சதி"  ஆரம்பம் [பின் காட்சி 11]
[14]காளியீன்  திருச்செங்கோடு  "திருவிழா சாமீயாடலும்  ",கருப்புவின்  மற்றான்  மனை  நோக்கலும் பின் காட்சி 12]


பாகம்  இ
[15]நல்லுப்பையன்  சித்தப்பா  கதை3ம்  காளி-பொன்னா "சாமீப்  பிள்ளை சதி"  பற்றிய  உரையாடல் [பின் காட்சி 13]
[16]குழந்தை பேறு  இன்மையால் ஏற்படும் சமுகப்  புறக்கணிப்பு  நிகழ்வுகள்  [பின் காட்சி14]
[17]பொன்னாவின்  சாமீப்  பிள்ளை சதி"  ஒப்புதலும் ,காளியீன்  வெறுப்பும் [பின் காட்சி15]
[18]முத்துவின்  வருகை ,திருவிழாவுக்கு  அழைத்தல் ,கரிக்குருவி  கூடு  [பின் காட்சி16]
[19]தொண்டுப்பட்டியில் முத்து-காளி  உரையாடல் 1[பின் காட்சி17]
[20]தொண்டுப்பட்டியில் முத்து-காளி  உரையாடல் 2[பின் காட்சி18]
[21]முத்து-காளி மாமன்  வீட்டில்  சந்திப்பு  ,குடிக்கச்  செல்லுதல்


பாகம்  ஈ
[22]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 1
[23]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 2 ம்  பின் காட்சி19ம்
[24]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 3
[25]முத்து-காளி குடிக்கச்  செல்லுதல் 2
[26]முத்து-காளி குடிக்கச்  செல்லுதல் 3ம்  மண்டையன் ,காத்தாயி கதையும்  [பின் காட்சி20]
[27]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 4
[28]காளியின்  தாத்தாவும்  கல்  எறி விளையாட்டும்  [பின் காட்சி21]
[29]முத்து-காளி குடித்தலும் ,மண்டையன் ,காத்தாயி  குழந்தையை  கேட்பதும்
[30]  பொன்னாவின்  சாமீத்  தேடல்1 !
[31] பொன்னாவின்  சாமீத்  தேடல்2 !
[32]பொன்னாவின்  சாமீத்  தேடல்3 !
[33]குடித்த  காளி  கலையில்  மாமன் வீடு  திரும்புதல்
[34] ஐயோ  பாவம்  காளி [சாமீப்  பிள்ளை சதி நிறைவு  பெறுதல்]

 34 காட்சிகள்  [scenes ]  உள்ள  இக்  கதையில்  21 க்கும்  மேலான பின் காட்சிகள்-கதைகள்  [flashbacks ] உள்ளது ,காட்சிபடுத்துபவருக்கும்[Screen  paly  writer ] ,காட்சியை  கண்பவருக்கும் [viewer ] தொடர்சி சார்ந்த  மனச்சிக்கலை  ஏற்படுத்தும்.

என்னச்   செய்யலாம் ?

இப் படைப்பின்  வேர்களும்  அறுந்துவிடக்கூடாது ,   காட்சிபடுத்துவதும்,காண்பதும்   எளிமையாக்கப்பட  வேண்டும் !

என்னச்   செய்யலாம் ?

கதையில்  சிறு  மாற்றம் கூடச்  செய்யாமல்  எப்படி   எளிமையாகக்  காட்சிபடுத்துவது? முடியுமா ?

முடியும் !

எப்படி  என்று  பார்ப்போம்.

கதையீன்  கூறுகள்  என்ன ? 

குழந்தைப்  பேறு  இன்மை,அதன்  மீதான காளி-பொன்னாவின்  அக உணர்ச்சி வெளிபாடுகள் ,அதன் மீதான சமுகப் புறம்  போசுதல்   , நல்லுப்பையன்  சித்தப்பாவின்  ஆறுதல்  பேச்சு ,உறவுகளின் "சாமீப்  பிள்ளை சதி",சாபங்கள், திருச்செங்கோடு கோவில்  வழிபாடுகள்[சிறு,பெரு தெய்வ  வழிபாடுகள்] தானே !

இவற்றை மனம்  கவரும் முறையில் வரிசைப்  படுத்த  முடியாதா  என்ன ?

காட்சி 22 ல் [பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 1] கதைக்காட்சியை  தொடங்கி  பிறகாட்சிகளை  [பின்கதைகளை ] இவ்  வரிசையில்  கோர்த்தால்  நன்று !

பாகம்  அ  : காட்சிகள் (scenes  ) :[22],[3],[4],[5][6] [8]         {சாபமும் ,சாப  மீட்பும்  }

பாகம்  ஆ : காட்சிகள் (scenes  ) :[7][8][9][11] [14] [16]         { சமுகப் புறம் போசுதல்}

பாகம்  இ  : காட்சிகள் (scenes  ) :[10],[12],[15]                    {நல்லுப்பையன்  சித்தப்பாவின்  ஆறுதல்  பேச்சும்  கதையும் }

பாகம்  ஈ  :காட்சிகள் (scenes  ) :  [13][17][18][19][20]          {சாமீப்  பிள்ளை சதி}

பாகம்  உ  :காட்சிகள் (scenes  ) : [1][2][21]                  {பின் கதைகள்   முடிந்தன  }

பாகம்  ஊ   :காட்சிகள் (scenes  ) : இனி முடிவை நோக்கி பயணிக்கும் நேரலை  காட்சிகள் :பொமு காட்சிப்படுத்திய  வரிசைப்  படியே !

[23][24][25][26][27][28][29][30][31][32][33][34]

கதை  இப்போது  முடிவை நோக்கி பயணிக்கும் நேரலைக்   காட்சிகளாக இருப்பதால்  கீழ்  கண்ட காட்சியில்  உள்ள  பின் கதையை  தவிர்த்தல்  நன்று.
  
[26]முத்து-காளி குடிக்கச்  செல்லுதல் 3ம்  மண்டையன் ,காத்தாயி பின் கதையும்  [பின் காட்சி20]


கதை  காளியீன்  பார்வையில்  எழுதப்பட்டு இருந்தாலும்  , குழந்தைப்  பேறு  இன்மையின் வலியும்,சமுக  தாக்கமும்  பெண்களுக்கே  மிகுதியாக  இருப்பதாலும் , இக்  கதையை    பொன்னாவின் பார்வையில்  இருந்து தொடங்கி பின்கதைகளை  இணைத்து  துயரங்களைக்  கூறி  ,பின்பு    நேரலைக்   காட்சிகளாக கொண்டு செல்வது  இந்த நல்ல படைப்பை  காட்சி  ரசிகருக்கு [screen  viewer ]  எளிமையாக்கும்.


அன்புடன் ,

கி.செந்தில்குமரன்