Saturday, July 19, 2014

அரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு கடிதம் Letter to Arvindan Neelakandan

அரவிந்தன் நீலகண்டன்,

மனு தர்மம் , அதன் மீது கட்டமைக்க பட்டு உள்ள பார்பனிய ஹிந்து மதம் ,அதை சார்ந்த ஹிந்து RSS ,VHP போன்ற இயக்கங்கள் ,அவற்றின் மதத்தீன் பெயரால் மக்களை கொல்லும் பாசிச மக்கள் விரோத தன்மை இவை அனைத்தையும் முற்றும் உணர்ந்த அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இன்னும் தொடர்ந்து அவ்வியக்க சார்பு உடன் இருப்பதற்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கடுமையான கண்டனங்கள்.

உங்கள் மனு தர்ம ,பார்பனிய பாசீச ஹிந்து மதம் கூறுவது படி …..

முகத்தில் பிறந்தவன் பிராமணன்,
தோளில் பிறந்தவன் சத்திரியன்,
தொடையில் பிறந்தவன் வைசியன்
காலில் பிறந்தவன் சூத்திரன்

எனில் ,பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] எங்கே இடம் ?இது தான்ஹிந்து மத சனநாயகமா அரவிந்தன் நீலகண்டன்?பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] ஹிந்து மத, மனு தர்மம் இருதியில் கூட இடம் கொடுக்காத போது பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] ஏது ஜனநாயகம் உங்கள் ஹிந்து மதத்தில் ?

 
பார்பனியத்தில் மூழ்கி திளைக்கும் 

மனு தர்ம ஹிந்து மதம் வெட்கி தலைகுனியுமா 

ஆசான் அம்பேதகாரின் பார்பனிய எதிர்ப்பை கண்டு ?

பார்ப்பானுக்கு கொடிகட்ட,பார்பன கொலை வெறிக்கு

கட்டை தூக்க வேறு இடம் பாருமையா !

எம் தளித்தியர் வரமாட்டார் உம்மோடு 

RSS கொலை வெறிக்கு கட்டை தூக்க வேறு ஆள் 

பாருமையா மேற்கு மாம்பல அயோத்தி மண்டபத்தில் !


அரவிந்தன் நீலகண்டன் நீர் நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ? [OR] மோடி மயக்கம் ஏன்? 
 
[1]ஆசான் அம்பேத்கர் அவர்களுக்கு இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் இடம் அளிக்கபட்டது பற்றி பேசும் நீர் ஆசான் பார்பனிய ஹிந்து மதம் பற்றி கூறி உள்ள எதீர் கருத்துக்களை பற்றி ஏதும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் ?

[2]உம் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளிடத்திலும் வேற்றுமை ஏற்படுத்தி தளித்தியர் சமுக உயர் அதிகாரிகளை தனி குடிஇருப்புகளில் குடிஅமர்தீய மோடி பற்றி ஏது கூறாமல் பல ஆண்டுகளாக நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ?

[3] தளித்தியர் சமுக துப்புரவு தொழிலாளர்கள் அவர்கள் செய்யும் தொழிலாள் புன்னியம் அடைகின்றார்கள் என்ற மோடியீன் கருத்துக்கு நீர் கண்டனம் தெரிவிக்காது பல ஆண்டுகளாக நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ?