Thursday, March 27, 2014

பெரிசு, சாதி வெறி தாயுமானவன் பிள்ளைக்கு சுடுகாட்டு சித்தன் கி.செந்தில் குமரன் பாடும் பாட்டு Final Song

".......நீ என்னைய புலையனு சாடுற-ஆனா நீ செத்தா என் காலடி மண்ணுலதான் மண்டியீட்டு புதையுர !...."


பெரிசு ரொம்ப சாதி வெறியோட ஆடாத .
நீ செத்து சுடுகாட்டுக்கு போறபோதும்
எங்க தீண்டாசேரியில் இருந்து தான்
சிவனின் உண்மை வாரிசுகளான “பிதாமகன்கள்” வந்து தான்
“காமன் – அரிச்சந்திரன்” பாடல்கள் பாடி
“உன்னைய” சிவலோகத்துக்கு அனுப்பி வேக்கோனும்!


பெரிசு “செத்த” உன் பொணம் தன்னால சுடுகாடு போவாது !
நான் அரிச்சந்திரன் பாட்டு படாட்ட உன்
கட்டையும் வேகாது.

நீ என்னைய புலையனு சாடுற-ஆனா
நீ செத்தா என் காலடி மண்ணுலதான்
மண்டியீட்டு புதையுர !

நீ படுத்த குழிய என் கலால
மண்ணை தள்ளி மூடுறேன்
செத்த பின்பாவது இவன் சாதி வெறி
அடங்குமானு கள்ளு குடித்து தன்னால புலம்புறேன்!
பைத்தியகார நான் சித்தனடா ,சுடுகாட்டு சிவனடா !


குறிப்பு :
இப் பாடல் தாயுமானவன் பிள்ளை போன்ற அனைத்து சாதி வெறியன்களுக்கும் சமர்பணம்
தாயுமானவன் பிள்ளை://நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…//