Sunday, July 13, 2014

[My confession about Christianity and Communism] கிறித்துவம்,கம்யுனிசம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம்

கிறித்துவம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம்[My confession about Christianity]

Benefits :

[1]தளித்தியர் மக்களுக்கு கிருஸ்துவம் கல்வி அறிவு புகட்டுவது மூலம் அவர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு செய்த நன்மைகளை யாரும் மறுக்க முடியாது. தளித்தியர் மக்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் பொருளாதார நன்மை அடைந்து சமுகத்தில் உள்ள சாதீய ஒடுக்கு முறையில் இருந்து விடுபட முடியும் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. உதாரணத்துக்கு திரு கார்டுவெல் அவர்கள் ஆய்வு செய்த நாடார் சமுகத்தீன் உட் பிரிவான சாணர் சாதி மக்கள், தம்மை கிருஸ்துவர்களாக மாற்றிய பின் அவர்கள் அடைந்த சமுக பொருளாதார முன்னேற்றங்கள் வியப்பு அடையும் அளவுக்கு உள்ளது. நாடார் மக்களை பார்த்து தோளுக்கு சீலைப் போடகூடாது என்று திருவாஇங்கூர் சமஸ்தான மன்னனும், நாயர்களும், நம்பூதிரிகளும் கட்டளை இட்ட போது நாடார் மக்களுக்கு கை கொடுத்து மானம் அவர்கள் காத்ததும் கிருஸ்துவமே. 

[2]அதே சமயம் தளித்தியர் மக்களுக்கு மட்டும் தான் கிருஸ்துவம் நன்மை செய்ததா என்ற கேள்வியும் எழுகின்றது. நம் சமுகத்தில் மேல் கட்டுமானதில் உள்ள பிராமணர்கள்[FC] மக்கள் முதல் பின் தங்கீய சமுகத்தை சேர்ந்த பிற சாதி [BC ,MBC ] மக்கள் வரை அனைவருக்கும் கிருஸ்துவம் கல்வி அறிவு புகட்டுவது மூலம் அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய நன்மை செய்ததை நாம் தமிழர் அனைவருமே நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டும். 

[3]மேலும் என் 12 +3+2 =17 ஆண்டு கால கல்வியையும் நான் கிருஸ்துவ நிறுவனங்களில் கற்றதால் எம்மால் உறுதியாக சொல்ல முடியும். பெந்தகொஸ்து மத மக்கள் இடுபடும் மத மாற்ற நடவடிக்கைகள் போல நான் படித்த RC, CSI கல்வி நீறுவனங்கள் மத மாற்ற நடவடிக்கைகளில் நேரடியாகவே அல்லது மறைமுக மாகவே ஈடுபட்டது இல்லை.

[4]மேலும் என் 12 +3+2 =17 ஆண்டு கால கல்வியையும் நான் கிருஸ்துவ நிறுவனங்களில் கற்றதால் எம்மால் உறுதியாக சொல்ல முடியும். பெந்தகொஸ்து மத மக்கள் இடுபடும் மத மாற்ற நடவடிக்கைகள் போல நான் படித்த RC, CSI கல்வி நீறுவனங்கள் மத மாற்ற நடவடிக்கைகளில் நேரடியாகவே அல்லது மறைமுக மாகவே ஈடுபட்டது இல்லை. இவை எல்லாம் கிருஸ்துவம் ஒட்டு மொத்த தமிழர்க்கு செய்த மாபெரும் நன்மைகள்.

Disadvantages

[5]பாதிரியார்கள் செய்யும் பொருளாதார,பாலியல் முறைகேடுகள் [Irregularities and Abuse]
[6]தளித்தியர் மக்களுக்கு கிருதுவ மதத்திலும் உள்ள சாதீய அடக்கு முறைகள்

கம்யுனிசம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம்[My confession about Communism]

[7]டாங்கே போன்ற பார்பன சாதியில் பிறந்து பின்பு கம்யூனிஸ்ட் ஆனாவர்கள் தளித்தியர் மக்கள் மீது செய்த பாகுபாட்டை திரு அம்பேத்கார் அவர்கள் பல முறை சுட்டி காட்டி உள்ளார்.அதை கம்யூனிஸ்ட்களாகீய அனைவரும் ஏற்று கொண்டு சுய பரிசீலனை கண்டீப்பாக செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட்கள் தளித்தியர் மக்களுக்காக ஏதும் செய்ய வீல்லையா ? என்ற கேள்விக்கு நாம் மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும். 

[8]தளித்தியர் மக்களீன் அரசியல் விடுதலைக்கும், பொருளாதார உயர்வுக்கும் இந்தியா முழுவதும் போராடி கொண்டு தான் உள்ளனர். ஆனால் அதனை உழைக்கும் மக்களுக்காக போராடுவதாக தான் மார்க்ஸ்ய-லெனினிய கொள்கை படி கூறுவார்கள் இந்த அப்பாவி கம்யூனிஸ்ட்டுகள். 

[9]அன்று தஞ்சை-வெண்மணி [தளீத்] கூலி விவசாய தொழீலாளர் பீரசனை முதல் முதல் ,கேரள பழங்குடி மக்கள் நிலம் பறிப்பு வரை அனைத்துக்கும் போராடி உயிர் கொடுத்தவர்கள் இந்த அப்பாவி கம்யூனிஸ்ட்டுகள் தான். இன்றும் பழங்குடி மக்களீன் வாழ்வாதரத்தை காக்க அம் மக்களுகடன் சேர்ந்து போராடுபவர்களும் மாஒயீடுகள் என்ற பெயரில் உள்ள ந்க்சல்பாரி கம்யூனிஸ்ட்டுகள் தான்.

முடிவுரை

[10] தளித்தியர் மக்களீன் முன்னேற்றத்துக்கு கிருஸ்துவம் கல்வி அளிப்பதன் மூலமும், கம்யுனிசம் அரசியல் தளத்திலும் போராடி சேவை செய்கின்றன என்பதை வினவு தளத்தில் பின்னுட்டம் இட்டு யாரேனும் மறுக்க முடியுமா ?