Monday, March 24, 2014

வியாசனின் சாட்டை அடி உங்கள் ஆரிய மாயையை கலைக்குமா எம் சாதிய தமிழர்களே ! Aryamayai

"........பெரியார் கூட ப்படி சாதி பற்று உள்ளவர்களீன் ஆரிய பற்றை சாடி இருக்க மாட்டார் !......."

I Said in vinavu.com :
போலி தமிழ் தேசியம் பேசுவோரின் இலக்கணப் படி சோழர்கள் தமிழர்களாக இருக்க இயலுமா? ஏனெனில் இன்று போலி தமிழ் தேசியம் பேசுவோருக்கு தமிழகத்தில் வாழ்ந்தாலும், தமிழ் மொழி பேசினாலும், தமிழகத்தை ஆண்டாலும் கூட தமிழர்கள் ஆகிவிட முடியாதே. அவர்களுக்கு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள் என அனைவரும் சுதிசுத்தமான தமிழர்களாக இருக்க வேண்டுமே.!
இங்கு தான் இடிக்கின்றது. அப்படிப் பார்த்தால் நடுக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட சோழர்கள் சுத்தமான தமிழர்களாக இருந்திருக்கவில்லை என்பதை வரலாற்றின் ஊடாக அறியலாம். உலகில் உள்ள அனைத்து மன்னர் குடும்பங்களைப் போல இவர்களும்[சோழர்களுக்கும்] பிற மொழி பேசும் மன்னர் குடும்பங்களோடு சம்பந்தம் செய்துள்ளனர். ஆக ஒரு வகையில் இவர்கள் யாவரும் “கலப்புற்றவர்கள்”. இனத் தூய்மை பேசும் நவீன இட்லர்களுக்கு[வியாசனுக்கு] இது பொறுக்காதே!
திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பழஞ்சோழ மன்னர் பெயரை இட்டும், மறு பக்கம் ஆந்திரத்தை ஆண்ட இக்சவாகு மன்னர் குலத்தை இட்டும், இன்னொரு பக்கம் நால்வருண மனு சாஸ்திரத்தை உருவாக்கிய மனு உட்பட பண்டைய ஆரிய அரசை தோற்றுவித்த பரதனின் வழி எனவும் எழுதி வைத்துள்ளார்கள்.
நன்றி கோடங்கி



Viyasan Replayed in vinavu.com:
//திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பழஞ்சோழ மன்னர் பெயரை இட்டும், மறு பக்கம் ஆந்திரத்தை ஆண்ட இக்சவாகு மன்னர் குலத்தை இட்டும், இன்னொரு பக்கம் நால்வருண மனு சாஸ்திரத்தை உருவாக்கிய மனு…..///
அந்தக் காரணத்தால் சோழர்கள் தமிழர்கள் இல்லை என்றால், தீச்சட்டிக்குள் இருந்து குதிரையில் வெளியே வந்த சத்திரியர்களாகிய வன்னியர்களும், தம்மை வானவர்களின் தலைவனாகிய தேவேந்திரன் வழியில் வந்ததாகக் கூறும் தேவேந்திர குல வெள்ளாளர்களும், தமது சத்திரியர்களாக உயர்த்திக் கொள்ள, மகாபாரதத்தில் வேரைத் தொடும் மள்ளர்களும், பள்ளர்களும், ஏனைய ஒவ்வொரு தமிழ்நாட்டுச் சூத்திர சாதிகளும் மட்டுமல்ல, ஆதித்தமிழர்களாகிய பறையர்கள்ள் கூட, யாரோ சாம்பவன் என்ற பார்ப்பானின் வழியில் வந்ததாக கூறி, தம்மைச் சாம்பவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்களாம், அதன் படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள எவனுமே உண்மையான தமிழன் இல்லை, எல்லோருமே ஆரியர்கள் என்றாகி விடுகிறது.
இன்று பல தமிழ்நாட்டுச் சாதிக் குழுக்கள் எவ்வாறு தமது சாதியையும் மகாபாரதத்துடன் இணைத்து, ஒவ்வொரு புராணக் கதைகளை இயற்றி வைத்துக் கொண்டிருகின்றனவோ, அதைத் தான் சோழர்களின் கல்வெட்டுக்களையும், செப்புத் தகடுகளையும் எழுதியவரும் செய்திருக்கிறார். அதனால் அந்த அடிப்படையில் சோழர்கள் தமிழர்கள் அல்ல என்றால், தமிழ்நாட்டிலுள்ள பல சாதிக்குழுக்கள் தமிழர் அல்ல. வடநாட்டு மகாபாரதத்தில் தமது வேர்களைத் தேடும் வன்னியர்கள், முத்தரையர்கள், மள்ளார்கள், தேவேந்திரகுல வேளாளர்கள், சாம்பவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்று துணிந்து யாரும் தமது வலைப்பதிவில் எழுதக் காணோம்

.
My Repaly in vinavu.com:
வியாசன் நன்று !
பெரியார் கூட எப்படி சாதி பற்று உள்ளவர்களீன் ஆரிய பற்றை சாடி இருக்க மாட்டார் !
தம் சாதியுடன் ஆரிய புராணக் கதைகளை சேர்த்து தம் சாதியை உயர்த்த நினைக்கும் தமிழர்களுக்கு வியாசன் கொடுக்கும் சாட்டை அடி !
வியாசனின் சாட்டை அடி உங்கள் ஆரிய மாயைய் கலைக்குமா எம்  சாதிய தமிழர்களே !
வியாசன் மிக்க நன்று !
http://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-132003