Sunday, June 22, 2014

Answer to sukdev in vinavu I சுகதேவ் அவர்களுக்கு

சுகதேவ் அவர்களுக்கு ,

[0]மார்சிய சித்தாந்தத்தை பொருத்த வரை பிரசனைகளுக்கு தீர்வு தான் கூறப்பட்டு உள்ளது. ஆதங்கத்துக்கோ , வெற்று பூலம்பல்களுக்கோ மார்சிய-லெனிய கோட்பாட்டில் இடம் இல்லை. என் கேள்விகள் உங்களுடைய வெற்று ஆதங்கத்தால் எழுப்பபட்டவை. முடீந்தால் மார்சிய-லெனிய கோட்பாட்டின் படி பதில் அளீக்க முயலுங்கள் 

//அண்ணே! தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல நடிக்கும் உங்களை எழுப்ப முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிறந்த நடைமுறை ஒன்று இன்று ஒழிக்கப்பட்டதன் பிரச்சினையை மட்டுமே தெரிவித்தேன். அந்த நடைமுறை ஒழிக்கப்பட்டது குற்றம் என்று சொல்லவில்லை. அந்த பழைய நடைமுறை வாணக்காரய்யாவின் அணுகுமுறை போன்று சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதாக இருந்தது என்பது தான் நான் கூறிய உதாரணத்தின் மெசேஜ்.//

[1]அந்த ஆட்டத்தையும் ஆடித்தான் பருங்கள் சுகதேவ் ! ஆட்டத்தின் இருதியில் மார்க்ஸிய சித்தாந்தத்தையும் இழந்து அம்பல பட்டு போவது யார் என்று வினவு வாசகர்கள் உணர்ந்து கொள்ள உதவும். 

//உங்கள் கருத்துக்கள் தலித்தியத்துக்கு காவடி தூக்குகிறது என்ற முன்முடிவுடன் அவற்றை வசதிக்கேற்ப வெட்டி, திரித்து உங்களை மார்க்ஸிய விரோதியாக சித்தரிக்க முடியும். ஆனால், அது சில்லறை விளையாட்டு. விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். உண்மையை சொல்லப்போனால், உங்கள் கருத்துக்கள் எதனையும் படிக்க எனக்கு ஆர்வமில்லை. //

[3]இனி இது போன்ற தனி மனித அவதூறுகளுக்கு [Defamation] உதிர்த ரோமம் அளவுக்கே மதிப்பு கொடுப்பேன் என்பதை சுய விமர்சனமாக கூறிகொள்கின்றேன். முடிந்தால் நீங்களும் விவாதம் சார்ந்த கருப்பொருளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள் 

//நீங்கள் ஒரு ஆசிரியர் என்று நண்பர் ஒருவர் சொன்னார். உங்கள் மாணவர்கள் உங்கள் கருத்துக்களை படிக்க நேர்ந்தால் அவர்கள் உங்களை குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை தயவு செய்து ஒருமுறை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் காலணிகளை ஒருமுறை அணிந்து கொண்டு நீங்கள் பதிக்கும் கருத்துக்களை ஒருமுறை படித்துப் பாருங்கள். என்னுடைய ஆசிரியர்கள் யாரிடமும் மிகக் கீழ்மையான விவாத அணுகுமுறையை நான் கண்டதில்லை. எனவே இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.//

Answer to Tendral in Vinavu I தென்றல் அவர்களுக்கு என் பதில் I

தென்றல்,

[1]உங்கள்  பிரத்யோக  மொழி  நடையில் உள்ள  கருத்தாக்கம் எனக்கு சத்தியமாக புரியவில்லை தென்றல்.  

[2]தோழர் கலாஷ்நிகோவ் கையாளும்  எளீய ஆனால் அழுத்தமான,விரியமான   மொழி  நடையில் உங்கள் கருத்துகளையும்   பதியுங்கள்  தென்றல். இது  விமர்சனம் அல்ல ,வேண்டுகோள்.

//வினவின் பதிலில் நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற அம்சங்கள் உண்டு. இருந்தாலும் நீங்கள் அதை பரிசிலீக்க மறுக்கிறீர்கள். நான் வைத்த வாதத்திற்கு வினவின் கருத்தை சாதகமாக பொருத்திக் கொண்டேன் என்பது நடந்தது. ஆனால் என் நோக்கம் என்ன? உங்களுடனான என்னுடைய வாதம் விவாதத்தின் ஒரு பகுதியைப் பற்றியது.//


[3]சுய  முரண்பாடு  என்று நான் குறிப்பிடுவது வினவு  எமக்கு அளித்த  தலித்தியர்  இலக்கியங்கள்  பற்றீய முதல் இரு பீன்னுட்டங்கள்  மீது  நான்  வைக்கும்  விமர்சனம்.

[4]வினவு உங்களுக்கு  அளித்த பதிலை  வைத்து வினவும் ,தென்றலும்  முரண்படுகின்றீர்கள்  என்று கூறிஉள்ளேன்

//தலித் இலக்கியம் என்பதை ஆதிக்கசாதிகள் எவ்வாறு அணுகுகின்றன என்பது. அதனால் அந்தச் சொல்லாடலை மோசடி என்று குறிப்பிட்டேன். வினவின் பதிலை வைத்துக்கொண்டு சுயமுரண்பாடு என்கீறிர்கள். அப்படி சுயமுரண்பாடு என்றால் அதை ஏற்பதில் எனக்குப் பிரச்சனையில்லை.//

[5] நான், என்  மீது  கூறப்பட்ட அவதூறுகளை பற்றி  விளக்ககிய  பீன்னுடங்களை வினவு வெட்டி  ஏறிந்தமைக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.
http://vansunsen.blogspot.in/2014/06/vinavu-conflicts-and-wrong-replays.html

//இது ஒருபுறமிருக்க எதை அவதூறு என்கீறிர்கள்?//

[6]எம் தோழன் கலாஷ்நிகோவ் அவர்களுடன்  நான்  நடத்தும்  இவ் விவாதம் , உங்கள் குற்ற  சாட்டை  தவறு  என்று நிருபித்துகொண்டது உள்ளது. எங்கள் விவாதம் தீர்வுகளை  நோக்கி செல்வதை உங்களால்  உணர முடியவில்லையா ?  

//இதில் அனைவரையும் எதிரியாக காட்டி உங்களை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் காவலனாக காட்டிக்கொள்கிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.//

My answers to Sukdev சுகதேவ் அவர்களுக்கு

சுகதேவ் அவர்களுக்கு ,

[1]திரு சுகதேவ் அவர்களீன் சிறுபன்மை மக்களுக்கு எதிரான அவதுறுகளுக்கு வினவு தளத்தில் ஆதாரங்களுடன் எதீர்வினை அற்றி வந்து உள்ளேன் என்பது வினவு வாசகர்களுக்கு தெரியும்.
[2]என் கேள்வி என்ன என்றால் சிறுபன்மை மக்களுக்கு அரசியல் சாசன சட்டம் அளித்து உள்ள பாதுகாப்புகள் தவறா ? More over , Is Article 370 wrong?

சுகதேவ் //எனது நண்பர் பணிபுரியும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சிலரை நிரந்தர ஊழியராக சமீபத்தில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள். முன்பெல்லாம் அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக நியமிக்கப்படுபவர்களில் கணிசமானவர்கள் இந்துக்களாகவும் இருப்பார்கள். இது ஒரு சமூக நல்லிணக்கத்துக்கு — பரஸ்பர புரிதலுக்கு உதவியாக இருந்தது. இன்று இது போன்ற நேர்மறையான அணுகுமுறைகள் மதவாதிகளிடம் குறைந்து வருகிறது. //

[3]வினவு கூறும் கீழ் உள்ள கருத்தாக்கத்தில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் எப்படி தவறானது என்று திரு சுகதேவ் உணரவேண்டும்.

“இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். மதங்களை விமரிசக்கும் வினவு பாரபட்சமாக இருக்கிறது என்பதாக இந்த விமரிசனத்தில் அவர் சொல்கிறார். முதலில் இந்த நண்பர் கூறியிருப்பது போன்றுதான் வினவு எழுதுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஏன்?பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. புர்கா போடுவது, போடக்கூடாது, இசை கேட்கலாம், கூடாது, திருப்பதி லட்டு சாப்பிடலாம், கூடாது, இனம்-சாதி-பிரிவினைக்கேற்ப மணமுடிக்கலாம், கூடாது என்று நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது. வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது.” 

சுகதேவ்//இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொன்னாலே அது இந்துத்துவக் குரல் என்பதாகி விடாது. ம.க.இ.கவின் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் முழக்கத்திலே அது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து பயங்கரவாதத்தை கண்டிப்பதற்கே கூட இஸ்லாமிய மதவாதத்தை கண்டிப்பது நிபந்தனையாக உள்ளது என்று கருதுகிறேன்//


[4]மோடி BJP ,பெற்ற வாக்குகள் பற்றிய புள்ளியல் விவரங்களை முன்பே அளித்து உள்ளேன்.

###இந்திய மக்கள் தொகையில் மோடி பெற்ற ஒட்டு :17.5 * 100 /124 = 14.11 %
###By percentage out of total no of votes, Modi[BJP] got :17.5 * 100 / 81.45 = 21.49 %

மோடியால் மத்திய ,வட மேற்கு இந்தியாவில் மட்டும் தான் கணிசமான ஆதரவை பெற முடிந்து உள்ளது 

சுகதேவ்//கொஞ்சம் மாறியிருக்கும் சமூக நிலைமைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வு ஒரு உண்மையை சொல்கிறது. முஸ்லிம் மக்கள் 20 சதவீதம் வரை இருக்கும் 80 தொகுதிகளில் பாதிக்கும் மேல் இந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. வழக்கமாக, இந்த தொகுதிகளில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி வாய்ப்புள்ள ஒரு மதச்சார்பற்ற கட்சிக்கு குவியும். அதனால், அந்த கட்சி வெற்றி பெறும். ஆனால், இந்த முறை சிறுபான்மை மக்களின் வாக்குகளை மதச்சார்பற்ற கட்சிகள் சிந்தாமல், சிதறாமல் பெற்றிருந்தாலும், இந்து பெரும்பான்மையிடமும் ஒரு எதிர் ஒருங்கிணைவை உருவாக்கியுள்ளது. மதச்சார்பற்ற தேர்தல் கட்சிகள் சிறுபான்மை மதங்களிடம் கடைபிடிக்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணம். இவர்கள் ஒரு நாள் ரம்ஜான் கஞ்சி குடிப்பதையும், கிறிஸ்மஸ் கேக் வெட்டுவதையும் காட்டி ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் உணர்வை நிரந்தரமாக குத்தகை கேட்பதில் வெற்றி பெற்று வருகிறது. //

[5]வினவுக்கு திரு சுகதேவ் வைக்கும் கருத்துகளுக்கு உடன்பாடு தானா ? எவ் வித விமர்சனமும் கிடையாதா ?

கலாஷ்நிகோவ்க்கு எம் பதில்கள் [Answer to kalashnicov part II ]

 கலாஷ்நிகோவ்,


சரவணன்//இத்தகைய சூழலில் நம் தலித்தியர் மக்கள் தம் வாழ்வியல் வலிகளையும்,அவர்கள் மீதான சாதீய அடக்கு முறைகளையும் இலக்கியத்தில் பதிவு செய்வது அவர்களுடைய கடமையும், உரிமையும் ஆகும்//
 
கலாஷ்நிகோவ்://இதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இதே உரிமையை, தலித்தியரின் சமூக அவலங்களை பதிவிடும் உரிமையை, மற்ற சாதியில் பிறந்த ஒருவர் பெற்றிருந்தால் அதுதான் வர்க்க ஒற்றுமை. தலித் இலக்கியங்கள் இயற்றும் நண்பர்கள், தலித்களின் நல்வாழ்விற்காக நடைமுறையில் என்ன களப்பணியாற்றியுள்ளனர், வெறும் இலக்கியம் இயற்றல் மட்டுமே போதுமானதா? பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் தலித், தலித் அல்லாதவர் என்ற நிலையை அடைவதற்கான வழிகளை முன் வைக்கிறது. தலித் இலக்கியங்களும் இத்தகையவற்றை செய்யும்போது பாட்டாளி வர்க்க இலக்கியம் என்றே அழைக்கப்படும். இங்கே தலித் என்ற அடைமொழி மட்டுமே விவாதப் பொருளாக உள்ளது. //

[1]கலாஷ்நிகோவ் நீங்கள் அழகாக இயக்கவியல் பார்வையுடன் விவாதத்தை முன் நகர்த்தி செல்கின்றீர்கள்.ஆம் பாட்டாளி வர்க்க உணர்வு உள்ள எழுத்தீயல்/இலக்கிய துறையில் பயணிக்கும் ஒரு தோழர் நம் தலித்தியர் மக்களீன் வலிகளையும் அதை தீர்க்க தீர்வுகளையும் இலக்கியம் மூலம் வலியுறுத்துவதும் சாதியாத்தின் வேர்கள் ஆழமாக ஊடுருவும் இன்றைய சமுக சூழலீல் தவிர்க்க முடியாத தேவை.

[2] அதே நேரத்தில் தலித்தியர் மக்களீன் மீது நேசம் உள்ள ஆனால் பாட்டாளி வர்க்க உணர்வு அற்ற திரு பெருமாள் முருகன் போன்ற ஓரு படைப்பாளி தம் பெரும் கதைகள்[ஆளாண்டபட்சி] மூலம் கவுண்டர் மக்களை தலித்தியர் மக்களுடன் சமரசம் செய்து கொள்ள வலியுறுத்தும் மார்சீய திரிபையும் நாம் எச்சரிக்கையுடன் அவதானித்து அவர் போன்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் 

கலாஷ்நிகோவ்//ம க இ க போன்ற அமைப்புகள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. இந்த சிந்தனை முறை உண்மையான பிரச்சினையைவிட்டு திசை மாற்றி மென்மேலும் சிக்கலானதாக மாற்றிவிடும் என்பதையே வலியுருத்துகின்றனர். தலித் இலக்கியங்கள் பிரச்சினைகளை சொன்னால் மட்டும் போதாது. அதற்கான தீர்வாக என்ன சொல்கிறது என்பதே கம்யூனிஸ்டுகள் ஊக்குவிப்பதற்கான அடிப்படையாக அமையும்.//

[3]இதற்கான பதிலை கீழ் கண்டவாறு முந்தைய பின்னுட்டத்தில் கூறி உள்ளேன்.தலித்தியர் மக்கள் வலிகளை பிரதிபலிகும் தலித்தியர் இலக்கியங்களும் எம் பாட்டாளி வர்க்க இலக்கியமே என்று உரக்க உரிமை கூரல் கொடுத்து முற்போக்கான தலித்தியர் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கும் ,சாதியவாதிகளுக்கும் எதிராக தொடுக்க வேண்டும் அல்லவா ?

[4]மேலும் அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் அரசியல், சமுக, பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க தயங்காத ம க இ க; இலக்கியம் சார்ந்த கருத்தீயல் தளத்திலும் அவர்களுக்கு வழிகாட்டி பிரச்சனை மட்டும் அல்ல இலக்கியம் அதற்கு தீர்வுகளும் தலித்தியர் இலக்கியத்தில் இருக்க வேண்டும் என்று மார்சிய அரசியல் கல்வி அளிக்கலாம் அல்லவா ? இதுவும் ம க இ க வின் கடமை தானே ?

கலாஷ்நிகோவ்://தோழர்,அதே வர்க்கக் களம் தான், வர்க்க உணர்வுதான் சாதீயம் இல்லாமல் போவதற்கான களமாகவும் அமைகிறது. வேறு ஏதேனும் களம் இருந்தால் விவரிப்பீர்.நன்றி//

[5]பாட்டாளி வர்க்கம் X சுரண்டும் தரகு முத்லாளிகள் என்று இருக்கும் வர்க்க முரண்பாட்டில் எமக்கு எந்த முரண்படும் உங்களுடன் இல்லை. அதே சமயம் பாட்டாளி வர்க்கத்துக்குள் உள்ள சாதிய அடுக்கு நிலைகள் காரணமாக அமைந்து உள்ள அக முரண்பாடுகள் [வன்னியர் தொழிலாளி X தலித்தீயர் தொழிலாளி] தோழர்,எம் ஆசான் லெனின் அவர்களுக்கு வர்க்க போராட்ட களத்தில் ஏற்பட வில்லை என்று தான் கூறினேன்.