Saturday, January 31, 2015

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 3




தன் வாழ்க்கையையே குடிப்பது ,பிச்சைபெற்றும் குடிப்பது ,பிச்சைபெற்றும் வெள்ளைக்காரன் சரக்கை மட்டுமே குடிப்பது அதன் பின் இணைய உரையாடலில் பெண்களுடன் வக்கிரமாக புணர்வது என்ற உன்னதமான கொள்கைகளுடன் வாழும் வக்கிர எழுத்தாளனுக்கு ,வாழ்க்கையை தினம் தினம் சிரித்துக்கொண்டே ஆனால் கடின உழைப்புடன் கழிக்கும் ,12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் தேனீர் கடை சிறுவனின் வாழ்க்கை எல்லாம் எச்சமாகத்தான் தெரியும். எனக்கு ஏனோ கற்றது தமிழ் படத்தில் திரு ராம் காட்சி படுத்தும் ஒரு உணர்வு பூர்வமான காட்சி தான் சாருவை நினைக்கும் போது நினைவுக்கு வருகின்றது. இரவு வரும் காரை வழிமறித்து கற்றது தமிழ் பிரபாகரன் BPO ஊழியரிடம் போசும் காட்சித்தான் அது.


தொடரும் .....

How to Write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2




விளிம்புநிலை மனிதர்கள் குற்றவாளிகளாக தான் இருப்பார்கள் என்று தமிழர்களின் பொது சிந்தனைக்கு காட்சி படுத்திய பெருமை சாருவையும் ,செல்வராகவனையுமே சேரும். விளிம்பு நிலை மக்களும் உழைப்பாளிகள் தான் என்று போன தலைமுறை இலக்கியத்திலேயே காட்சி படுத்திய ஜெயகாந்தன் போன்றவர்கள் சாருவுக்கு கோமாளிகளாகவே தெரிவார்கள். வழக்கு எண் 18/9 என்ற படம் காட்டும் படிமங்களும் ,தேகம் காட்டும் விகற்பங்களும் நேர் எதிரானவை. முன்பே கூறியது போன்று தேகமும் ,புதுப்பேட்டையும் வக்கிர இலக்கிய கூட்டாளிகள் என்றால் JK வின் படைப்புகளும் ,பாலாஜியின் வழக்கு எண் 18/9 என்ற படமும் வாழ்வின் உன்னதமான ஆனால் வலிமிகுந்த ஏடுகளை காட்சிபடுத்தும் இலக்கிய வகைமைகளை சாரும் அல்லவா சாரு?


தொடரும் .....

How to write Novel Like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1



பின்நவினத்துவம் ஆராதிக்கும் விளிம்புநிலை மனிதர்களை [குற்றவாளிகளை] பற்றி நாவல் எழுதவது எப்படி என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்த பதிவுக்கு செல்வதற்கு முன்நிபந்தனையே தனுஷ் ரவுடியாக நடித்த செல்வராகவன் படமும் ['புதுப்பேட்டை'] பாலியல் சார்ந்த கெட்டவார்த்தைகளை பற்றிய அறிவின் அறிதலுமே ஆகும். தேகத்தை புதுப்பேட்டையின் மற்றும் ஒரு பிரதி என்றால் சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் நம்புவீர்களா ? என்ன செய்வது குமுதத்தில் உள்ள ஆறு வித்தியாசத்தை போன்றே 69 [பாலியல் குறியீடு ] ஒற்றுமைகளை எம்மால் சாருவுக்கு சமர்பணம் செய்ய முடியும் ! மேலும் இரண்டாம் நிபந்தனையாக தேவை படுவது என்னவென்றால் மின்னஞ்சல், காதல் கடிதங்கள் , இணைய பில்கள் , EB-பில்கள் போன்றவையே !


குறிப்பு : தேகம் நாவலை படிக்க கொடுத்த நண்பன் சாருவிடம் வதைபடுவானாக!


தொடரும் ......