Sunday, February 1, 2015

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 7



பின்நவினதத்துவத்தை புரிந்துகொள்வது எப்படி ?மனிதன் தன்னை உள்நோக்கி பார்த்தல். அந்த உள்நோக்களில் நாம் உலகை எப்படி கான்கின்றோம் என்ற பார்வையை மனிதனுக்கு கொடுக்கும் முறை. தேகம்-தர்மா வின் பார்வையும் அப்படி பட்ட பாவையே ! அவன் மனம் கூறும் நியாயங்கள் /அநியாயங்கள் அனைத்துமே அவன் உள்உணர்வு சார்ந்ததே ! பின் நவினத்துவம் என்ற போக்கு மனிதனின் பார்வையை உள் உணர்வுகள் அடிப்படையில் சாதி சார்ந்தும் ,மதம் சார்ந்தும் வெளி உலகை நோக்கிய தேடலை கொடுக்கும் போது அது தேகம்-தர்மாவின் செயல்களிலும் அவன் பிறரை செய்யும் வதைகளிலும் பிரதி எடுக்கின்றது. பின்நவினதத்துவத்தின் ஒரு முக்கிய கூறான தொடச்சி அற்ற தன்மை தேகம்-தர்மாவின் கதை ஓட்டத்திலும் எதையும் முடிக்காமல் அங்கங்கே தாவிசெல்லும் போக்கில் இருந்து காண முடியும்.பின்நவினதத்துவத்துவம் இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது என்பதை தேகம்-தர்மாவின் செயல்கள் மூலம் காணமுடிகின்றது. ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகனையும் காடை எனும் தாதாவையும் வதைக்கும் அதே தர்மா தான் பின்னொரு இடத்தில் ஒரு நாயை கல்லடித்ததற்காக ஒரு சிறுவனையும் வதைக்கிறான். ஒரு பெண்ணை கற்பழிப்பதும் நாயை கல்லடிப்பதும் ஒரே மாதிரி குற்றங்களா? பின்நவினதத்துவத்துவம் எல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை என்று கூறுகின்றது. தேகம்-தர்மா செலின் என்ற காதலியை நிறைவாய் புணராமல் மறைமுகமாய் அவளை வதைக்கிறான்.அடுத்து நேஹா என்றொரு காதலி. அவளை மேலும் நுட்பமாக தனது விலகலின் மூலம் உளவியல் ரீதியாக வதைக்கிறான். அவள் பைத்தியம் பிடித்து சாகிறாள். கடைசியாக அவன் மீனா என்றொரு “மிடில் கிளாஸ்” பெண்ணை மணந்து கொள்கிறான்.


எது எப்படி இருந்தாலும் தன்னை பின் நவினத்துவ முதல்வன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு எழுத்தாளன் தேகம்-தர்மாவை போன்று பின் நவினத்துவமாக வாழாமல் தர்மாவின் வாழ்க்கையை எழுத்தில் வடித்து இருக்க முடியாது.


பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்ற பின்நவினத்துவ கூறுகள் உள்ள வரலாற்று புனைவில் சமுக அழுத்தம் காரணமாக குழந்தை பேறுக்காக மாற்று முறையில் முனையும் பெண்ணின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் ? பாலியல் விடுதலையை மையம் கொண்டதாகவா ? அல்லது வலியுடைய தேடலாகவா ? இந்த இடத்தில் பொன்னாவின் மன் உணர்வுகளை வெளிகாட்டுவதில் பெருமாள் தன் நிலை இழகின்றார். வருனனைகளுடன் வேறுவிதமான தேடலை காட்சி செய்கின்றார் ! மானுட விடுதலையே பாலியல் தேடலில் தான் உள்ளது போன்று தன் பின் நவினத்துவ trend ,வாலை ஐ அவிழ்த்து விடுகின்றார் ! எத்தகைய பின் நவினத்துவ கூறுகள் இதில் பதிந்து உள்ளது என்றால் வரலாற்றை மீண்டும் எழுதும் முறையாகிய [மெடபிக்‌ஷன்] முறையாகும் .


தொடரும் .....

How to write like Saru? தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 6

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 6

நவினத்துவ எழுத்தாளர் திரு ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் என்ற கதையை மீள்வாசிப்பு உட்படுத்திய போது இந்த பின் நவினத்துவ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தூய நதியில் கலக்கும் சாக்கடை நீர் போன்று இலக்கியத்தில் கலந்த கசடுகளாகவே காட்சி அளிக்கின்றன. 1966களில் எழுதப்பட்ட அக்கினிப் பிரவேசம் என்ற கதையாடல் திடீர் என்று ஒருவனின் பாலியல் தேவைக்கு ஆட்படும் ,உட்படும் இளம்பெண்ணை அவளின் அம்மா தூய்மை படுத்துவது என்ற கருத்தை மையம் கொண்டது. இக் கதையில் JK அவர்கள் நினைத்து இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பாலியல் நிகழ்வுகளை வருனனையுடன் காட்சி படுத்தி இருக்க முடியும். ஆனால் அவரின நோக்கமும் ,கதையின் போக்கும் ஆண் ஒருவனின் பாலியல் தேவைக்கு ஆளாகும் ஒரு சிறுபெண்ணை எப்படி மீண்டும் வாழ்வின் எதார்த்த போக்கில் கொண்டு செலுத்துவது என்பதையே முதன்மையாக கொண்டதாக இருந்தது.

சாருவின் போதைக்கு வருவோம். தனக்கு அறிமுகம் ஆன பெண்களுடன்[காதலிகள் என்று கூற மாட்டேன்] பாலியலில் ஈடுபடும் தேகம்-தர்மாவின் நடவடிக்கைகள் அதனை பற்றிய சாருவின் வருனைகள் மிகவும் விகற்பமாகவும் , தன்னை மிஞ்சி எவரும் காமத்தை காட்சி படுத்த இயலாது என்ற திமிர் போக்கிலும் , காமத்தில் ஈடுபடும் போது கூட அதனை முழுமையாக பகிராமல் பெண்களை உணர்ச்சி வெளியில் சிறுமை படுத்த முடியும் என்ற கருத்தையும் தெளிவாக தன் தர்மாவின் சிந்தனையில் இருந்து visual செய்கின்றார் சாரு.

மாதொருபாகனின் பொன்னா 14 ஆம் நாள் திருவிழாவுக்கு போன முடிவில் இருந்து தொடங்கும் இரு நாவல்களில்[அர்த்தநாரி ,ஆலவாயன்] காளி மரணம் அடைந்தால் .....,காளி மரணம் அடையாமல் இருந்தால் என்ற இரு விதமான வாழ்வியல் சூதாட்டங்களை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி எழுதித்தள்ளிய பெருமாள் முருகன் இலக்கியத்தில் புதிய வகைமையை கொடுத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு நிற்கின்றார் !

என்ன இருந்தாலும் JK என்ற இலக்கிய ராசா...., ராஜா தான் !

தொடரும் .....

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 5

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 5


               பின் நவினத்துவ எழுத்து என்றால் இன்றைய எழுத்தளர்களுக்கு அலாதியான பிரியம். ஏதும் வரைமுறை இன்றி தறிகெட்ட எழுத்து எழுதுவதை தானே இவர்கள் தமது சிந்தனை வெளியின் உள்நோக்கிய சிதறல் என்று பெருமைபடுகின்றார்கள். தேகம் நிகழ்கால வாழ்வை பின் நவினத்துவ வடிவத்துடன் இணைகின்றது என்றால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் வரலாற்றை பின் நவினத்துவ கூறுகளுடன் சங்கமம் செய்கின்றது. எது எப்படியாயினும் சாரு மற்றும் பெருமாளில் எழுத்து வெளி அவர்களை பொறுத்தவரை மிகவும் தெளிவானது. அந்த தெளிவில் இருந்து தானே அவர்கள் வாழ்க்கையை பயில்கின்றார்கள். பெருமாள் காட்டும் 14 ஆம் நாள் திருவிழா நிகழ்வுகள் உண்மையாக இருப்பினும் அதை நோக்கிய பொன்னாவின் மகப்பேறுக்கான பயணம் மிகவும் செயற்கையானது. “மாதொரு பாகன்” நாவலில் திருவிழா ஒன்று கூடலை படிமப்படுத்தும் நாவலாசிரியர் “ஆதி மனிதன் தன்னைக் கண்டடைகிறான்” என்று குறிப்பிடுகிறார். திருவிழாவிற்கு கூட வந்த அம்மாவை பிரிந்த பிறகு தனக்கென இணை தேடுகிறாள் நாயகி பொன்னா. பின்நவீனத்துவத்தின்படி இந்த ஒன்று கூடல் பல்வேறு மக்கள் குழுக்களில் இருந்த, இருக்கும் ‘கார்னிவல்’ கொண்டாட்டம். அடக்கப்பட்ட பாலியல் உறவுகளில் வெந்து நோகும் மக்கள் தணித்துக் கொள்ளும் ஒரு கலாச்சார நடவடிக்கை. இந்த பார்வை சரியானது தானா ? பெருமாள் அப்படியே இருக்கட்டும் ! தேகத்துக்கு வருவோம்.


                சாருகாட்டும் பாலியல் சார்ந்த மனிதனுக்குள் நிகழும் உயிர் வேதியல் நிகழ்வுகள் மிகவும் எளிமையாக தேகத்தில் காட்சிபடுத்த படுகின்றது."உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது." என்ற எழுத்துக்கள் எல்லாம் எனக்கு எதனை நினைவுபடுத்துகின்றது என்றால் பெருமாளின் “மாதொரு பாகன்” பின்நவினதுவத்தை விவரிக்கும் கோனார் நோட்ஸ் என்றால் சாருவின தேகம் அதே வேலையின் தென்றல் நோட்ஸ் போன்றது தானே ?


தொடரும் .....