Monday, October 20, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #17 பின்னணி காட்சி XIII Screen Play for the Movie Siva-karthikeyan scene #17 Flashback Scene XIII

காட்சி #17:  பின்னணி காட்சி காட்சி X I I I : 





வேலச்சேரி கார் விபத்தில் மரணம் அடைந்த தம்பதிகளுக்கு அஞ்லியும் ,உயிர் பிழைத்த குழந்தைக்கு[ அன்பு ] வாழ்த்துக்களும் !

எம் திரைக்கதை " சிவ-கார்திகேயன் " திரையில் உயிர் பெற்று வெற்றி பெறுமாயின் அக் குழந்தையும் எம் குழந்தையாகும்

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்  &  கோ.வனிதா 



CHENNAI: A day after three people were fatally run over by a drunk driver on the Velachery-Taramani Road in the wee hours of Monday, police have traced the mother of Arumugham, who was killed along with his wife Aishwarya. The woman offered to take care of the couple's child, but police are yet to decide on the custody of the 18-month-old boy. 

Arumugham and Aishwarya, rag pickers sleeping on the pavement along with an elderly woman, were run over by a Tata Indica car. Their 18-month-old son Anbu escaped unhurt. 

Arumugham's septuagenarian mother Jaya is under the care of his sister Bharathi, a flower vendor at Ice House. She happened to see the news of the accident but did not think the victims were her kin. Only after seeing the child on television, Jaya knew the identity of the victims. The family membershave not been on good terms with Arumugham since he eloped with Aishwarya two years ago. 

The couple, who did not have a house, led a nomadic life. But Jaya kept visiting her son, tracing him with the help of other rag pickers. The Guindy traffic investigation police have been trying to trace the relatives with the help of photographs they obtained from the spot. 

Police conducted inquiries with a paper mart where Arumugham used to sell old newspapers, but they did not get any information about any relative. "We showed the photographs to a few people in Ice House where we got some information about their relatives," said Guindy traffic investigation inspector Rajapandian. 

Jaya wanted to take care of the orphaned child, but police said they were not sure as the woman had no means to bring up a child. The child who was kept at the Indian Council for Children Welfare (ICCW), Shenoy Nagar, was produced before the Child Welfare Committee (CWC) and sent to Bala Mandir in Teynampet. Meanwhile, Sivakumar, Sasikumar and Devendiran who were booked on charges of culpable homicide not amounting to murder have been remanded in judicial custody.



Thanks to TOI

Thursday, September 18, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி 16 பின்னணி காட்சிக்கான பாடல் Song for scene #16 Flashback Scene XII

காட்சி #16: பின்னணி காட்சிக்கான பாடல்
[இளையராசாவின் "How to Name it " போன்ற பின்னணி இசையுடன் பாடல் காட்சி தொடங்குகிறது. அடுத்து மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்றான ஹம்சானந்தி மற்றும் பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி ராகங்களின் கலவையாக "நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்" போன்ற நா. முத்துக்குமார் பாடல் தொடங்குகின்றது
http://fileraja.com/Tamil/01/7G_Rainbow_Colony_160kbps/Ninaithu_Ninaithu_Parthal-VmusiQ.Com.mp3
]
மாதிரி பாடல் [Template Song]
கதைத்து கதைத்து பேசினால்
காலம் எல்லாம் உன்னுடன் இருப்பேன்
நம்மால் தானே பூக்கள் பூக்கின்றன ஓ......
என்னில் இன்று உன்னை காண்கிறேன்
தொட்டுச்சுட்டு அறியும் முன்னே
தெரியும் காதல் உனக்கு தானே
நம்மால் தானே பூக்கள் பூக்கின்றன ஓ......
என்னில் இன்று உன்னை காண்கிறேன்

நடந்து போகும் பாதையின் சுவடும்
எனது காதலை நாளும் கதைக்கும்
நெகிழ்ந்து போன உடையின் துயரமா
நாவில் சுவைத்த தேனீர் சுவையை
நாள் தோறும் மேசைகள் கதைக்கும்
நொறுங்கி போன மனதின் வருத்தமா
பிஞ்சுநெஞ்சில் இன்பம் சேர்க்கும்
இறகுகள் உந்தன் மனதில்
களத்தில் நின்று சண்டைகள் போட
நமது ஊழில் சாத்தியம் இல்லை
கன்னி சண்டை போதுமே நண்பா கோபம் துறந்திடு

கடந்து போன காட்சிகள் எல்லாம்
எனது மனதில் உயிரோடு உலவும்
காலம் அழியும் கனவுகள் அழியுமா
சிரித்து பேசிய உணர்வுகள் எல்லாம்
இன்றும் என்றும் என்னுடன் வாழும்
எந்தன் நெஞ்சம் உன்னை மறுக்குமா
முறிந்து போன உறவின் சாட்சி நின்று நின்று பார்க்கும்
மறைந்து போன வலிகள் என்றும்
மீண்டு வருவாய் நீயும்
என் நொடியும் வெப்பம்
தகிக்க என்னுள் இருக்கிறாய்

(கதைத்து கதைத்து பேசினால் ....)

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #16 பின்னணி காட்சி XII Screen Play for the Movie Siva-karthikeyan scene #16 Flashback Scene XII

காட்சி #16: பின்னணி காட்சி காட்சி X I I : பகல் மணி 8 மணி EXT , INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை, விடுதிக்கு வெளியே ,சாலை ,காண்டீன்,வகுப்பறை,gum ,நடனமேடை

கார்திகேயனுக்கு செல்போனில் சிவ சங்கரி அழைப்பு விடுக்க அவன் கால்-ஐ கட் செய்கின்றான்.
[தொடர்சியாக 3 முறை இது நடக்கிறது ]

[இளையராசாவின் "How to Name it " போன்ற பின்னணி இசையுடன் பாடல் காட்சி தொடங்குகிறது. அடுத்து  மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்றான ஹம்சானந்தி மற்றும் பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி ராகங்களின் கலவையாக "நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்" போன்ற நா. முத்துக்குமார் பாடல்தொடங்குகின்றது
]

மாணவிகள் விடுதியை விட்டு வெளியே வருகின்றாள்.

அவன் ஒத்தை காலில் நின்று காத்து இருக்கும் மரத்தை காண்கின்றாள். அவன் போக்கேயுடன் 'அன்று' நின்ற உருவமும் தெரிகின்றது பழைய நினைவுகள்[கற்பனையாக]

சாலையில் நடக்கின்றாள்....

கார்திகேயனும் அருகில் நடப்பது போல [கற்பனையாக]

காலையில் breakfast சாபிடாததால் காண்டீன் செல்கின்றாள்......

அவன் டீ வாங்கி வந்து பரிமாறும் பழைய நினைவுகள்[கற்பனை].

தனிமையில் அமர்ந்து டீ குடிக்கின்றாள்....

அவள் பின் அவன் அமர்ந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றான் ....

வகுப்பறையில் ஒருவருடன் மற்றவர் பேசிக்கொள்ளவில்லை .......

இடைவேளையில் இவர்கள் இருவர் இருந்தும் பேசிக்கொள்ள வில்லை .....

இருவரும் நட்புடன் பேசிக்கொள்ளும் பழைய நினைவுகள் [கற்பனையாக]

பெஞ்சில் முகம் புதைத்து தன் அழுகையை மறக்கின்றாள் ....

ஏதும் நடக்காதது போல அவன் தன் lap top ல் முழ்கி கிடக்கின்றான் ......

அன்று மாலை வகுப்பு முடிந்து கூட்டமாக மாணவர்கள் வெளியே செல்லும் போது சிவசங்கரியும் செல்கின்றாள்

அவன் தன் இருக்கையில் அமர்ந்தவாறே "சிவா " என்று அழைக்கின்றான்.

அவன் குரல் காற்றில் ,இரைச்சலில் கரைய .... சிவசங்கரி அவன் அழைத்ததை அறியாமல் செல்கின்றாள்.

இருவரும் ஒன்றாய் வகுப்பு விட்டு செல்வது போல [கற்பனையாக]

கோபத்தில் தன் lap top shout down செய்யாமல் மூடும் கார்திகேயன் ....

தன் கோபத்தை குறைக்க Gim ல் கார்திகேயன் வியர்வை வழிய ஆவேசமாக exercise செய்யும் காட்சி ....

தன் சோகத்தை மறக்க சிவசங்கரி நடனமாடும் காட்சி .....

[பாடல் முடிகின்றது ]

காட்சி #16: பின்னணி காட்சி காட்சி XI I முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #15 பின்னணி காட்சி XI Screen Play for the Movie Siva-karthikeyan scene #15 Flashback Scene XI

காட்சி #15: பின்னணி காட்சி காட்சி X I : இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran

அழுது அழுது களைத்துப்போன சிவ சங்கரி ஆழ்ந்து தூங்குகின்றாள். சொல்போன் ஒலிக்கின்றது. செல்போன் திரையில் தாமரை என்று மின்னுகின்றது. பார்த்தவள் முகம் கழுவ செல்கின்றாள். முகம் துடைக்கும் சிவ சங்கரியின் கண்கள் அழுது அழுது சிவந்து உள்ள close up காட்சி.

போனை எடுத்து தாமரைக்கு அழைப்பு செய்கின்றாள். ரிங் டோன்......

[இன்டர் கட் ]

மறு முனையில் போனை எடுக்கும் தாமரை "என்ன சிவா படிக்கிறியா ..., disturb செய்யறேனா.., சாரி பா" என்றவாறே "பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை" மூடுகின்றாள்.

[இன்டர் கட் ]

"இல்ல தாமர தூங்கிட்டேன்..., பிரியா தான் இருக்கேன் ...,என்ன செய்துகிட்டு இருக்க பா " என்றவாறே படுக்கையை சிவ சங்கரி சரி செய்கின்றாள்

[இன்டர் கட் ]

"எங்க intercaste marriage கதை மாதிரியே ஒரு நாவல் படித்துக்கொண்டு இருக்கேன்" என்னும் தாமரை [ பூக்குழி புத்தகம் front page close up ல் காட்டப் படுகின்றது.]

[இன்டர் கட் ]

"என்ன professor என்னுமா வரலை ? " என்ற சிவ சங்கரி " ரிலேசன்ஸ் எல்லாம் கம்ப்ரமிஸ் ஆகிட்டாங்கலா ? என கேட்க....

[இன்டர் கட் ]

"நீவேற சிவா இது தமிழ்நாடு பா ...., இங்கு தமிழ் உணர்வை விட cast பீலிங் தான் அதிகமிருக்கும் நம்ம மக்களுக்கு" என்று கூறி தாமரை சிரிக்கின்றாள். [ பூக்குழி நாவலின் பின் அட்டையில் உள்ள பெருமாள் முருகனின் படமும் அதில் உள்ள நாவல் பற்றிய சிறு விமர்சனமும் tight close up ல் காட்ட படுகின்றது ]

[இன்டர் கட் ]

"ஏன் என்னைய நா பாத்த சாதிபார்க்காத தமிழச்சியா தெரியலையா உனக்கு .... நான் இருக்கும் வரை எதுக்கும் கவலை படாதே கண்ணு " என்றவாறே சோகமான மன நிலையிலும் சிரிக்கின்றாள் சிவ சங்கரி

[இன்டர் கட் ]

"thanks lot சிவா ..., marriage ஆகாம கூட கருமுட்டையை தானம் செய்ய எப்படி பா தோணுச்சி ? " - தாமரை

[இன்டர் கட் ]

"நீ எனக்கு friend மட்டுமா டி? அதுக்கும் மேல என் உயிர் டி ! இது வரைக்கும் நீ தான் எல்லா உதவியும் எனக்கு செய்யுரே அதான் நீ கேட்ட உடன் எதையும் யோசிக்காம சரினு செல்லிட்டேன்"

[இன்டர் கட் ]

"வீட்டில் சொன்னியா பா " - - தாமரை

[இன்டர் கட் ]

"இல்லை தாமரை சொல்லலை [pass] ...... யாருக்கோ முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா கொடுக்கின்றேன். உனக்கு தானே பா ? குழந்தையை நல்லா படிக்க வை என்ன ?" - சிவ சங்கரி

[இன்டர் கட் ]

" ஆமாம் சிவா... உன்னை மாதிரியே அழகான ,அன்பான ,அறிவான குழந்தை பிறக்கும் இல்லையா பா ? அதை  நல்லா படிக்க வெச்சி நீ படிக்கிற I I M ல் சேர்கின்றேன் பா " - தாமரை

[இன்டர் கட் ]

"குழந்தைக்கு உரிமை கோரி எல்லாம் வர மாட்டேன் தாமரை பயப்படாதே .... கன்னத்தில் முத்தமிட்டால் படம் மாதிரி துர இருந்து சந்தோசபடுவேன் பா ....... "என்று கூறிய சிவ சங்கரி சோகமாக சிரிகின்றாள்
"சரி dinner க்கு late ஆகுது மெஸ் close செய்துட்டாங்கனா magi நுடல்ஸ் தான் சாப்பிட வேண்டி இருக்கும்...  பாய் பாய் Good Night "

[இன்டர் கட் ]

"Good Night siva " - தாமரை

காட்சி #15: பின்னணி காட்சி காட்சி XI முற்றும்

Tuesday, September 16, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #14 பின்னணி காட்சி X Screen Play for the Movie Siva-karthikeyan scene #14 Flashback Scene X

காட்சி #14: பின்னணி காட்சி காட்சி X : மாலை 4.15 மணி EXT @ IIM -B உள் சாலை
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran


கார்திகேயன்,சிவசங்கரி தொலைவில் நடந்து வரும் காட்சி


அருகாமையில் .....

"என்ன கார்த்திக் ஏன் இப்படி டென்ஷன் ஆகிற ? ரிலாக்ஸ் பா " என்று கூறி அவன் தோள்களை தன் இடது கையால் மெல்ல பற்றியவளை ....

கார்திகேயன் தன் தோள் பட்டையை மெல்ல நெகிழ்த்தி விடுவித்துக்கொண்டு நடக்கிறான்.

அவனுடன் நடக்கும் சிவசங்கரி "நான் நேத்து evening போன் செய்தேனே ! ..... உன்னிடம் permission வாங்கிட்டு தான் பா egg donate செய்யனும்னு இருந்தேன்...நீ தூங்கிட்ட பா " என்கின்றாள்.

எவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.
"இல்ல பா தாமரை என்னேட close frind தெரியுமா ? அவ பாவம் பா " என்று சோகமான முகத்துடன் கூறுகின்றாள்.
எவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.

அவன் பேசாமல் நடப்பதை கண்டு கோபமுற்ற சிவசங்கரி "இதுல என்ன தப்பு இருக்கு கார்த்திக் ? blood donate செய்வது போல தானே இதுவும் ? என் உயிரையே காப்பாத்தியவளுக்கு நான் இது கூட செய்யக் கூடாதா ? " என்று கூறி அமைதியாகிறாள்.அவள் கண்கள் கலங்குகின்றன.

தூரத்தில் எங்கோ பார்வையை செலுத்தி "கரு முட்டையை தானம் கொடுக்க அவங்களுக்கு relations யாருமில்லையா ?" என்கின்றான்

"" donate செய்ய relations இருக்காங்களா இல்லையானு தெரியல கார்த்திக் ..... ஆனா என்னிடம் தாமரை கேட்டப்ப நான் சரி தறேனு சொன்னப்பவே உன்னை நினைத்து பார்க்காதது.... ,உன்னிடம் பேசி முடிவெடுக்காது தவறு தான் I am very sorry கார்த்திக் " என்று கூறி அவன் வலது கையை தன் இடது கையால் பற்றுகின்றாள்.

தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டவன் அவள் முகத்தை, கண்களை உற்று நோக்கி .....,

" உனக்கு செக்குக்கும் சிவலிங்கலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதா சிவா ?"
என்று கேட்க...

அதிர்ந்து போனவள்.....

" நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்னனு திட்டுறியா ..., நான் என்ன நாயா பா ? [அழுகை] நாம என்ன சாதி, சமுகம் எல்லாம் பார்த்தா காதலிக்கின்றேம் ....,.marriage செய்துக்க போறேன் ? என்னை உன்னோட share செய்துக்க முடியும் போது என் friend க்காக நான் ஒரு கரு முட்டையை donate செய்ய  கூடாதா ? "

என்று கூறி அழுதவள் அவர்கள் நடந்த திசைக்கு எதிர் திசையில் வேகமாக நடக்கின்றாள்

தன்னை விட்டு விலகி எதிர் திசையில் செல்லுபவளை பார்த்து

"சிவசங்கரி நில்... நான் சொல்லாததையும் நீயா கற்பனை செய்து கொண்டு கோபப்படுவது என்ன நியாயம்"

என்று கூறியவாறே அதிர்ந்து போய் சிலையாக நிற்கின்றான்.

இருவரும் எதிர் எதிர் திசையில் நடப்பதை காட்சி படுத்த .....
காட்சி #14: பின்னணி காட்சி காட்சி X முற்றும்
[வாசகர்கள் இக் காட்சிக்கு கண்டிப்பாக விமர்சனம் வைக்கவும்]

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #13 பின்னணி காட்சி IX Screen Play for the Movie Siva-karthikeyan scene #13 Flashback Scene IX

காட்சி #13: பின்னணி காட்சி காட்சி IX : காலை 11 மணி INT @ IIM -B வகுப்பறை
கார்திகேயன் கருத்தரங்கு [seminar] நடத்திகொண்டு உள்ள காட்சி.
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran

My dear friends This seminar is about "Child labour in India" என்றவனை பார்த்து சிவசங்கரி சிரிக்க

அவளை பார்க்காமல் பார்வையை மாணவர்கள் பக்கம் திருப்பி .....

INTRODUCTION
Child Labour, consisting of children below 14 years of age, is defined by the International Labour Organization (ILO)
Child labour is a universal problem and as a citizen of India we must strive to take stern actions against child labour.
Who Is a Child Labour?
Children are the greatest gift to humanity and the same gift is being misused for personal gains as child labour..
person who has not completed his 14th year of age ,such person engaged for wages, whether in cash or in kind, is a child worker.
Child labour is more a rural phenomenon than an urban phenomenon. Due to acute poverty poor families residing in rural areas send their children to urban areas for bread and butter.

என்று பேசிக்கொண்டு அறுபவனை பார்த்து "excuse me I feel vomiting sensation" என்று கூறி வகுப்பறையை விட்டு வெளியேறும் சிவசங்கரி அவனை கடக்கும் போது அவன் அருகில் சென்று

"குழந்தையை உருவாக்கிட்டு Child Labour பத்தி செமினார் கொடுகிறியா பா "

என்று கூறி நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே வெளியே செல்கின்றாள்.
வகுப்பிற்கு வெளியே வந்தவள் தன் தோழி தாமரைக்கு call செய்கின்றாள்

"தாமரை எப்படி இருக்க பா "
......
....
"டாகடர் என்னிக்கு கருவை inject செய்ய போறாங்க தாமரை ?"
.....
...
....
"அப்படியா சரி நல்லா ரெஸ்ட் எடுத்துக்க "
.......
....
....
"ஆமாம் டாகடர் சொல்லுவாங்க பாரு பெட் ரெஸ்ட் எடுக்கனும் என்று "
......
......
"சரிபா செமினார் நடக்குது பாதியில் வெளியே வந்துட்டேன் evening பேசுறேன் என்ன ? " என்று கூறி செல் போனை அனைத்து விட்டு .....

வகுப்பறை உள் நுழையும் போது கழுவிய வாயை கைகுட்டையால் வாயை துடைப்பது போல பாவனை செய்து கொண்டு போகின்றாள்

டென்ஷன் ஆனா கார்திகேயன் முகம் close-up ல்

காட்சி #13 : பின்னணி காட்சி காட்சி I X முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #12 பின்னணி காட்சி VIII Screen Play for the Movie Siva-karthikeyan scene #12Flashback Scene VIII

காட்சி #12: பின்னணி காட்சி காட்சி VIII : காலை 9 மணி INT @ IIM -B விடுதி உணவகம் அல்லது கேண்டீன்
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran

கேன்டீனில் அமர்ந்து தேனீர் அருந்தும் கார்திகேயனை நோக்கி செல்லும் சிவசங்கரி

"ஹாய் கார்த்திக் how are you ? " என்றவாறே அவன் முன் உள்ள இருக்கையில் அமருகின்றாள்.

தலையை சற்றே உயர்தி புன்னகை பூத்தவாறே "ஹாய் சிவா" என்றவன் "just wait ..,I bring a cup of tea " என்றவாறே எழுகின்றான்.

"No கார்த்திக் I finished my breakfast in flight " என்றவள் "கை கொடு நான் அம்மா ஆக போறேன்" என்றவாறே கையை கொடுக்க...

"என்னப்பா சொல்லரே " என்றவாறே அவள் கையை மிருதுவாக பற்ற அவனியும் மீறிய பதட்டத்தில் அவன் கைகள் நடுங்க.....

அவனை கலாய்க்கும் முடிவுடன் " குழந்தையின் அப்பா நீங்க என்ன சொல்றீங்க" என்றவாறே அவனை நோக்கி கையை காட்டி புன்னகை பூக்கின்றாள்.

மேலும் பதறும் கார்திகேயன் ,பூக்கும் நெற்றி வியர்வை துளிகளை கையால் துடைத்துக்கொண்டே "முத்தம் கூட கொடுத்துகிளியே பா...... எப்படி இது சாத்தியம் ஆச்சு " என்றான்.

மேலும் அவனை கலாய்க நினைத்தவள் " பீர் அடித்தாலே என்ன நடக்குதுனு தெரியாது...., ஹாட் அடிச்சியே Carnival Feast அன்னிக்கு அப்ப தான் எல்லாம் நடந்தது " என்றவாறே "என்ன குழந்தை வேணும்பா ?" என்கின்றாள்

டென்ஷன் ஆன கார்திகேயன் முகம் close-up ல்

காட்சி #12 : பின்னணி காட்சி காட்சி VI I I முற்றும்

Wednesday, September 10, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #11 பின்னணி காட்சி VII Screen Play for the Movie Siva-karthikeyan scene #11 Flashback Scene VII

காட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII : இரவு 10.15 மணி INT @ சென்னை சிவசங்கரியின் வீடு , சிவசங்கரியின் படுக்கை அறை,பள்ளி கூடம் ,வகுப்பு அறை 


தனிமையிலே இனிமை காண முடியுமா ? என்ற பாடல் கணினியில் இசைத்துக்கொண்டு இருக்க .....

சிவ சங்கரி தன் சிறு வயது பள்ளி நினைவுகளில் முழ்கிபோகின்றாள் [பின்னணியில் பாடல் low volume ல் ஒலிக்கின்றது ]

5 ஆம் வகுப்பு அறையின் வெளியே உணவு இடைவேளையில் அருகருகே அமர்ந்து இருக்கும் தோழிகள் : சிவசங்கரி மற்றும் தாமரை

உணவை பகிருகின்றார்கள்.

பள்ளியின் வெளிதோற்றம் long shot

வகுப்பறையின் வெளிதோற்றம் long shot

"நானும் இப்ப எல்லாம் முட்டை கூட சாப்பிடுறது இல்லை தெரியுமா... சங்கரி" என்கின்றாள் தாமரை

"ஏன் என்னாலையா பா" என்கின்றாள் சிவசங்கரி

"இல்ல பிரிண்ட்ஸ்காக எதையாவது ஒன்னை விட்டு கொடுத்தா தானே அது பிரிண்ட்ஸ்ஷிப்...சங்கரி" என்கின்றாள் தாமரை

"அப்ப நானும் உனக்காக முட்டை சாப்பிடட்டுமா பா " என்கின்றாள் சிவசங்கரி

"வேண்டாம் உங்க வீட்டில் திட்டுவாங்க அதனால நானே சாப்டாம இருக்கேன்" என்ற தாமரை கை கழுவ எழுந்து நிற்க மேல் இருந்து சரிந்து விழும் கட்டிட சாரத்தின் சவுக்கு கட்டைகளை பார்க்க அதிர்ந்தவள்

தன் தோழியை , சிவசங்கரியை தர தர வென்று இழுத்து நகர்த்தி காப்பாத்துகின்றாள்
காட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII முற்றும்

----------------------------------------------------------------------------------------
காட்சி #11-A : பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII-A : மாலை 4.45  மணி INT சிவசங்கரியின் வீட்டு வாசல்

சென்னை சிவசங்கரியின் வீட்டு வாசல் ...... [பின்னணியில் பாடல் low volume ல் ஒலிக்கின்றது ]

பள்ளியில் இருந்து வீடு வரும் சிவசங்கரி தன் காலில் உள்ள சிராய்ப்பு காயத்தை பார்த்தவாறே shoe வை கழற்றுகின்றாள்.

சிவசங்கரியின் அம்மா காயத்தை கானுகின்றார்."என்னடி இது எங்க விழுந்து வாரிட்டு வர..." என்கின்றார்.

"இல்ல.. மா... தாமரை என்ன தர தரனு பிடிச்சி இழுத்துட்டா தெரியுமா "

"அவங்க கூட சேராதனுசொன்னா கேட்டியா நீ "

"இல்ல மா மேல இருந்து சாரம் விழுந்துதா அப்ப தான் என்னை இழுத்து காப்பாத்தினா மா "

மனம் நெகிழும் அம்மா சிவசங்கரியை கட்டி அனைத்துக்கொண்டே நாளைக்கு "அவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு வாடி" என்கின்றாள்.

"என் பிரண்டு எனக்காகவே முட்டை சாப்பிடாம நிறுத்திட்டா... நாளைக்கு அவளுக்கு கேக் வாங்கி தரட்டுமா மா?"

காட்சி #11-A : பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VIII-A முற்றும்

------------------------------------------------------------------------------------------------------
காட்சி #11-B: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII-B : மாலை 4.45  மணி INT பள்ளி கூடம் ,வகுப்பு அறை 


சிவ சங்கரி காலையில் தன் சிநேகிதி தாமரைக்கு ரோசா பூவை கொடுத்துகொண்டே , 
"அம்மா இன்னிக்கு உன்னை கூட்டிக்கொண்டு வர சொன்னாங்க தாமர " 
என்கின்றாள்.

"சரி பா வறேன் " என்கின்றாள்  தாமரை


"என் உயிரையே காப்பாத்தி இருக்க ..., திருப்பி நான் என்னப்பா செய்ய போறேன் ? " 

என்றவாறே தாமரையின் நோட் புக்கில் " உன்னால் தானே இன்று நான்உயிருடன் ...என்று எழுதுகின்றாள் 


" சரி math home work முடிச்சிட்டியா கொஞ்சம்கொடு  ......" என்னும் தாமரையை பார்த்து 



math home work  நோட்டை நீட்டிய வாறே " இல்லை தாமர நான் ஏதாவது உனக்கு செய்யனும்........ எதுவா இருந்தாலும்  என்கிட்ட கேளு என்ன ?" என்று கூறுகின்றாள்  



-----------------------------------------------------------------------------------------
பிளாஷ்பேக் cut
"அப்பா நாளை காலை flightல் பெங்களுருக்கு ticket book செய்துடார் " என்ற அம்மாவின் குரல் கேட்டு நிகழுக்கு வருபவள் அணிச்சையாக தன் உடைகளை சரி செய்து கொண்டே படுக்கையில் இருந்து எழுந்து வந்து லிவிங் ரூமுக்கு செல்கின்றாள்
-----------------------------------------------------------------------------------------


[தனிமையிலே இனிமை காண முடியுமா ? என்ற பாடல்
ஆண்:
தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்:
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
ஆண்: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
ஆண்: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
பெண்:
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)
பெண்:
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)
பெண்:
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)]

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #10 பின்னணி காட்சி VI Screen Play for the Movie Siva-karthikeyan scene #10 Flashback Scene VI

காட்சி #10: பின்னணி காட்சி காட்சி VI  : இரவு  8.15 மணி INT  @  சென்னை  சிவசங்கரியின் வீடு 


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


சிவசங்கரி டைனிங் டேபிளில் அமர்ந்து ,அம்மா ,அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கின்றாள்.

"TCS இண்டர்வியுவில் சென்னைக்கே placement  கேட்டு இருக்கலாமே சிவா..." என்கின்ற அம்மாவை பார்த்து

"என் friend  சென்னை TCSல் GM ஆ இருக்கார் ...அவர் மூலமா முயற்சிக்கட்டுமா " என்ற அப்பாவை பார்த்து

"Thanks Lot Dad Just one year தானே ...,நானே கேட்டு transfer வாங்கிகிறேன்    "  என்ர்கின்றாள்

சிவசங்கரியின் செல் போன் ஒலிக்க "ஹாய் கார்த்திக் என்ன busy யா ? " என்கின்றாள்

Inter Cut

"Sunday lazy evening sleeping சங்கரி .... என்ன மேட்டர் evening போன் செய்தாய் போல இருக்கு  " என்கின்றான்

Inter Cut

"ஒரு surprise  matter ...,நாளைக்கு பெங்களூர் வரும் போது சொல்றேனே " என்கின்றாள்.

Inter Cut

"என்ன உன் dad கிட்ட பேசிட்டியா ? என்ன சொல்றார் என் மாம்ஸ்,என்  boss ....  HCL சென்னை HR  Vice President? "

Inter Cut

"அது இல்லப்பா, அதைவிட முக்கியமான மேட்டர் ..,நான் அம்.... " என்று அம்மாவை பார்த்தவாறே பேச்சை நிறுத்தியவள்

"நாளைக்கு சொல்றேன் கார்த்திக் ஏன் surprise தாங்க  மாட்டியா"  என்றவள்

"Good Night கார்த்திக்" என்று கூறி call ஐ கட் செய்து ....

அப்பாவை பார்த்து  சிரித்துகொண்டே "  கார்த்திக் உங்க சென்னை ஆபீஸ்சில்  தான் placed ஆகி இருக்கார்... கொஞ்சம் பாத்துக்குங்க என் friend ஐ " என்றவள்

"Business Analist ஆ select ஆகி இருக்காரு பா   " என்கின்றாள்



 காட்சி #10: பின்னணி காட்சி காட்சி VI   முற்றும் 

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #9 பின்னணி காட்சி V Screen Play for the Movie Siva-karthikeyan scene #9Flashback Scene V


காட்சி #9 : பின்னணி காட்சி காட்சி V : மாலை 5.15 மணி INT @ சென்னை வடபழனி கருவுறுதல் மருத்துவ மையம் டாக்டர் அறையில் சிவசங்கரி,இளம் வயது தம்பதிகள் மற்றும் பெண் டாக்டர்


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


டாக்டர் சிவ சங்கரியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்துகொண்டே ...."Sivasankarai Are You Okey for donating Egg? It is metered enough today. இன்றே கூட donate செய்யலாம் " என்கின்றார்.



குழப்பத்தில் முகம் சுருங்கியவள் "just a minute Doctor " என்றவள் இரண்டு முறை கார்த்திகேயனுக்கு ring கொடுக்க INTER CUT ல் அவன் செல் போனை silent model வைத்து விட்டு தூங்கும் காட்சி.


"Okey doctor I ready " என்றவளை டாக்டர் புன்னகை பூத்தவாறே


"உன் friend தாமரையின் கருப்பையில் எந்தக்கோளாறுமில்லை  it is perfect ஆனா   கருமுட்டை mature  ஆவதில்  தான் சிக்கல் இருக்கு...... ஹம் இந்த காலத்து youngster's ரொம்ப matured மா " என்று கூறி சிரித்தவாறே சிவசங்கரிக்கு கைகொடுக்க .....

"labக்கு போங்க இன்னிக்கே  process ஐ முடித்துடலாம்! " என்ற டாக்டரை பார்த்து 

"தேங்க்ஸ் லாட் டாக்டர்" என்கின்றாள்  தாமரை


தாமரை,சிவசங்கரி இருவரும் அறையை விட்டு வெளியேறி  லேப் க்குள் நுழைவதுடன் காட்சி முடிகின்றது. 


காட்சி #9 : பின்னணி காட்சி காட்சி V முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #8 பின்னணி காட்சி IV Screen Play for the Movie Siva-karthikeyan scene #8 Flashback Scene IV

காட்சி #8 : பின்னணி காட்சி காட்சி IV : மாலை 4.30 மணி INT @  சென்னை வடபழனி கருவுறுதல் மருத்துவ மையம் கேன்டீன் உள்புறம்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


இளம் வயது தம்பதிகள் இருவர் சோகமான மன நிலையில் அமர்ந்து உள்ளார்கள். கணவன் கைகொடிகாரத்தையும்,செல்போனையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருகின்றான்.

INTER CUT

சிவசங்கரி விடுமுறையில் சென்னைக்கு தன் வீட்டிற்கு வந்தவள் ....." அம்மா ஹோஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வறேன் ...ஒரு சின்ன வேலை " என்கின்றவளை அவள் அம்மா
"ஒரு நாள் லீவில் வீடு வந்தா கூட எங்கேடி போற ?"
தன் வண்டியின் கீயை எடுத்தவாறே "என் பிரண்ட தாமரையை  பார்த்துட்டு வரேன்.... ஹோஸ்பிட்டலில் இருக்கா " என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்கின்றாள்.

INTER CUT
கணவன் தன் மனைவியை பார்த்து "உன் ஸ்கூல் மேட் என்று சொன்ன இல்லை ? கருமுட்டை தானம் செய்ய ஒத்துப்பாங்கலா ? " என்று கேட்க

காப்பி கப்பை dust bin ல் போட்ட வாறே " அவ ரொம்ப நல்லவ... அதிகம் படித்தவ ... ஒத்துகொண்ட பின்பு தானே வறேன் என்று சொன்ன ?" என்கின்றாள்.

"அவங்க பேரன்ட்ஸ் ?" என்றவனை பார்த்து

"எனக்காக இந்த ஹெல்ப்பை கூடவா என் friend செய்ய மாட்டா ? ஏன் இதுக்கு கூட பேரன்ட்ஸ் கிட்ட permission வாங்கணும்?" தன் கணவனின் நெற்றியில் வியர்வையில் வழியும் செந்துரத்தை துடைத்து விடுகின்றாள் "

செல்போன் ஒலிக்க எடுத்தவன் "ஹோஸ்பிட்டல் கேன்டினில் இருகோம் மேடம் என்கின்றான்.

கையில் ஹெல்மட் உடன் ஹோஸ்பிட்டல் கேன்டினுக்குள்வேகமாக நூழையும் சிவசங்கரி தன் தோழியை கண்ட உடன் கட்டி அனைத்து "தாமரை எப்படி இருக்கடா செல்லம்... really I missed you pa" என்றவள் ....

தோழியின் கணவர் முன் அமர்ந்து "எப்படி இருக்கிங்க professor sir ? தாமரை உங்களை நல்லா பார்த்துகிறாளா ? " என்ற வாறே அவருக்கு கை கொடுகின்றனர்.

"sorry சிவா உன்னை ரொம்ப disturb செய்யறேன்.....   எங்க இரன்டு பேர் relationனும் எங்களை கை கழுவிட்டாங்க சிவா "  என்றவாறே சிவ சங்கரியின் கையை பற்றுகின்றாள் தாமரை

" ஏன் தாமரை  கவலை படறே ...,நானு,உன் சார் எல்லாம் உனக்காக இல்லையா Do 't  worry pa  "

சிவ சங்கரியின் தோளில் தலை சாய்த்து அழுபவளை தன் இடது கையால் அனைத்தவாரே தாமரையின் கணவனை பார்த்து " professor ......,  என்னோட மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் இப்ப தான் முடிச்சுட்டு வரேன் ரிசல்ட் இன்னும் 2 hrs ல் தெரியும் " என்கின்றாள் சிவ சங்கரி



காட்சி #8 : பின்னணி காட்சி காட்சி III முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #7 பின்னணி காட்சி III Screen Play for the Movie Siva-karthikeyan scene #7 Flashback Scene III


காட்சி #7 : பின்னணி காட்சி காட்சி III : காலை 11 மணி INT @ I I M வளாகத்தின் வகுப்பு அறை [Class Room ] பகுதி 

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


வளாக நேர்முகத்தேர்வுக்கான [campus Interview] முன்னேர்பாடுகளுடன் அந்த வகுப்பறைகள் உள்ளன.
ஒரு வகுப்பறையில் TCS ,மற்றோன்றில் HCL நிறுவனங்கள் நேர்முகத்தேர்வை நடத்துகின்றன. சிவசங்கரி,கார்த்திகேயன் அறைகளுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள்[ வாலண்டியர்கள் ] நேர்முகத்தேர்வுக்கு வந்து உள்ள சீனியர் மாணவர்களை பெயரிட்டு அழைத்து உள் அனுப்பிக்கொண்டு உள்ளார்கள்.
சிவசங்கரி TCS நேர்முகத்தேர்வு அறைக்கும் , கார்த்திகேயன் HCL நேர்முகத்தேர்வு அறைக்கும் செல்கின்றார்கள்.
TCS நேர்முகத்தேர்வு அறை : "Good Morning every one here " என்று கூறி உள் நுழையும் சிவசங்கரி...
IINTER CUT
HCL நேர்முகத்தேர்வு : "I am Karthikeyan Ramaswamy ..., Happy morning all my elders ...." என்றவாறே உள் நுழையும் கார்திக் பேராசிரியர்கள் நின்று பேசும் மேடையில் உள்ள நாற்காலியில் அமருகின்றான்.
INTER CUT
TCS நேர்முகத்தேர்வு அறை : சிவசங்கரி நாற்காலியில் அமராமல் மேசை மீது இடது கையை வைத்துக்கொண்டு "Gentlemen..., Shall I answer for your questions now ? " என்று கூறியவாறே புன்னகை பூக்கின்றாள்.
INTER CUT
HCL நேர்முகத்தேர்வு : "Can you answer me for this silly question Mr Karthik Ram ?... Who have entered in the next room for TCS interview session just now and Can you say some thing about that person ?"
அட இது என்ன கேள்வி என்று முகத்தில் ஆச்சரியத்தை காட்டிய கார்த்திக் ,"
Of course She is my best friend and She is only my life " என்கின்றான்.
INTER CUT
TCS நேர்முகத்தேர்வு அறை : முதல் கேள்வி மிக எளிமையாகவும் ,அதே சமயம் மிக ஆழமான விடயத்துடனும் கேட்க படுகின்றது.
"Who is Your competitor in your class room ? and tell the relationship with him or her "
"He is Mr Karthikeyan Ramaswamy who care me lot ...,I can not compete with him in this regard " என்று தன்னை அறியாமல் கூறியவளை பார்த்து interviewer கள் நட்புடன் புன்னகை செய்கின்றனர். சிவசங்கரி வெட்கப்படும் தன் முக பாவனையை மறைக்க விரல்களால் நெற்றியை தடவுகின்றாள்.
"Are you going to marry him and settle in life very soon ?"
"Yes....., We can settle in life soon.., if We are placed in the same city" என்று கூறி மெல்ல தலை அசைக்கின்றாள்
INTER CUT
....
...
INTER CUT
...
...
INTER CUT
....
....
[ஒலி முடக்கப்பட[ Mute ] இரு அறைகளிலும் நிகழும் நேர்முகத்தேர்வு காட்சிப்டுத்தபடுகின்றது ]
நேர்முகத்தேர்வு அறையை விட்டு வெளி வரும் சிவசங்கரி,கார்த்திகேயன் இருவரும் மகிழ்வுடன் கை கொடுத்துக்கொள்ள ....

காட்சி #7 : பின்னணி காட்சி காட்சி III முற்றும்

Tuesday, September 9, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #6 பின்னணி காட்சி II Screen Play for the Movie Siva-karthikeyan scene #6 Flashback Scene II


காட்சி #6 : பின்னணி காட்சி காட்சி II : காலை 6.36 மணி EXT @ I I M - B வளாகத்தின் மாணவிகள விடுதி வெளிப்புறம்


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran


கார்த்திகேயன் செல்போனை நோண்டிக்கொண்டு மரத்தடியில் கையில் flower bokeh உடன் ஒற்றை காலில் நிற்கின்றான். 

Waiting for You here....,come out pls என்று SMS அனுப்பிக்கொண்டும் ,missed calls கொடுத்துக்கொண்டும் இருக்கின்றான்.

Wait karthi ...., coming now என்று பதில் வர .... மாணவிகள விடுதி உள் பார்வையை செலுத்துகின்றான்.

உள் இருந்து NIKE WOMEN'S STYLE Running and Jogging உடையில் சிவசங்கரி வெளியேவருகின்றாள்.

"Thanks Lot Karthic ..Your Music selection very excellent , I love you karthic " என்று கூறி மென்மையாக அணைக்கின்றாள் [hug]

"நேற்று super performance " என்று கூறி flower bokeh வை கார்த்திக் கொடுக்க இருவரும் நடக்கின்றனர்.

"எப்படி இது ....., எனக்கு என்ன என்ன எப்ப எப்ப தேவை என்று உனக்கு மட்டும் perfect ஆ தெரியுது ?" என்று ஆச்சிரியம் மிக்க குரலில் கூறியவள் "நீ சொன்ன protein power ஐ 15 days ஆ சாப்பிடுறேன் ..., பாதத்தில் வலி இப்ப சுத்தமா இல்லை " என்றாள் .

நட்புடன் அவள் கையை கோர்த்தவன் இறுக்க பற்றுகிறான். "just 45days have left .., campus interviews .. selecting employers... After Hum We are leaving Each other " என்று சோகமாக கூறுகின்றான்.

"Are You fall in love with me ? " என்று புன்னகையுடன் கூறியவள் "Do not worry karthic....., இந்த உலகத்தில் நான் எங்கு சென்றாலும் என் மனசு உன்னுடன் தான் இருக்கும் " என்றவாறே அவன் தோள்களில் நட்புடன் கை போடுகின்றாள்.


காட்சி #6 : பின்னணி காட்சி காட்சி II முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #5 பின்னணி காட்சி காட்சி I Screen Play for the Movie Siva-karthikeyan scene #5 Flashback Scene I

காட்சி #5 : பின்னணி காட்சி காட்சி I  : இரவு மாலை 6 மணி  INT  @ I I M வளாகத்தின் அரங்கம் [auditorium] பகுதி  


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 


இரைசலான அரங்கில்  ஒளி விளக்குகள் ஒளிர  மேல்நிலை ப்ரொஜெக்டர் திரையில் [OHP screen] 


Welcome To  IIM-B

 Carnival Feast

[with art work on  the screen] 

என்று முதல் ஸ்லைடு [slide] ஒளிர

அடுத்த ஸ்லைடில்

Dance by

Miss Sivasankarai

என்று ஒளிர

பரதநாட்டியம் ,ஒடிசி ஆகிய நடன அமைப்பில் தமிழ் பாடலுடன் நாட்டியம் தொடங்குகின்றது.[ Hit Song ]

காட்சி #5 : பின்னணி காட்சி காட்சி I  முற்றும்

 திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #4 Screen Play for the Movie Siva-karthikeyan scene #4

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran


காட்சி #4 : காலை 7  மணி INT  @ வேளச்சேரியில் உள்ள அப்பர்ட்மெண்ட்,பிளாட்,மொட்டை மாடி நிழல் பகுதி 


மொட்டை மாடியின்  நிழல் பகுதியில் குழதையை  படுக்க வைத்துவிட்டு [குழதை தூங்குகின்றது ] சோகமான முகத்துடன் வான்வெளியை பார்த்து பெருமூச்சு விடுகின்றான்.  பிளாஷ் பேக் தொடங்குகின்றது.

காட்சி #4 முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #3 Screen Play for the Movie Siva-karthikeyan scene #3

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 

 காட்சி #3 : காலை 4 மணி INT @ வேளச்சேரியில் உள்ள அப்பர்ட்மெண்ட்,பிளாட் 

 

போலிஸ் ஜீப்பில் வரும் அதிகாரி ,சிவ-கார்திகேயன்கள் ,செக்யூரிட்டி கதவை திறக்க உள் நுழைகின்றனர்.

கீழே இறங்கும் அதிகாரி "surveillance camera இருக்கா ?" என்று கேட்கின்றார்.

"இருக்கு மேடம் ஆனா பயன் படுத்துரது இல்லை " என்கின்றான்.

சிரித்துக்கொண்டே "Middle Class idiots" என்கின்றார்.

தூங்கும் குழந்தையை வலது கையில் வைத்துக்கொண்டு அனுபவபட்ட அப்பா போல கதவை திறப்பவனை பார்த்து " குழந்தையை கொடுங்க " என்று போலிஸ் அதிகாரி கூற சிரித்துக்கொண்டே கதவை திறக்கின்றான்.

உள் நுழையும் அதிகாரி living room மற்றும் மூடியுள்ள இரு அறைகளையும் நின்றவாறே பார்வை இடுகின்றார். நேரே living room க்கு பின் பக்கம் சமையல் அறை.இடப்பக்கம் இரு படுக்கை அறைகள்.

குளிர்சாதன பெட்டியை திறந்து ஆவின் பால் பாக்கெட்டை எடுக்கும் கார்த்திகேயன் "மேடம் குழந்தைக்கு ஆவின் பால் கொடுக்கலாமா ..., ஒத்துக்குமா என்று கேட்கின்றான்.

சிரித்துக்கொண்டே "யாருக்கு தெரியும் ...அதன் அம்மாவிடம் தான் கேட்க வேணும் " என்றவள்
"குழந்தைக்கு ஒரு வயசு இருக்குமா ? இன்னும் நடக்கல இல்லையா ?" என்கின்றார்.

1 க்கு 2 என்று பாலும் ,நீரும் கலந்து கொதிக்க வைத்தவன் ,சக்கரை கலந்து இரண்டு ஆற்று ஆற்றி அப்படியே பெரியவர்கள் குடிக்கும் சூட்டில் குழந்தைக்கும் கொடுக்க போனவனை பார்த்து " பாவி மக்கா இந்த சூட்டில் கொடுத்த என்ந்த்துக்கு ஆகும் ?" என்றவள் சக்கரை போடாமல் மறுபடியும் பாலை எடுத்து இளம் சூடு வரும்வரை நன்கு ஆற்றி வாயில் உற்றிப்பார்த்து "சூடு வெத வெதனு இருக்கு கொடுங்க என்றவள் சக்கரை போட்டு ஆற்றாத பாலை தான் குடிக்கின்றாள்.

பாலை உடலில் வழிய குடிக்கும் குழந்தை வயிறு நிறைந்த உடன் ஒருகட்டத்தில் பாலை வாயில் இருந்து ஓசையுடன் spray செய்து அவனை பார்கின்றது. இருவரையும் பார்க்கும் அதிகாரி நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு தொலைகாட்சி பெட்டியை ரிமோட் மூலம் on செய்ய செய்திகள் ஓடிக்கொண்டு உள்ளது.

"நேற்று இரவு இந்திய நேரப்படி 11.45க்கு மலேசிய விமானம் உக்ரைன் ,ருஷ்ய நாட்டு எல்லையில் சுட்டு வீழ்த்தபட்டது... அதில் பயணம் செய்த இந்தியர்கள் 7 பேர் பலி..... விபத்தில் பலியான தமிழ் நாட்டை சேர்ந்த சிவசங்கரி ஐயர் அவர் தந்தை கனேஷ் ராம்  பற்றி உறவினர்கள் கண்ணிர்பேட்டி....... " 

காட்சி #3 முற்றும்