Monday, January 19, 2015

Tholkuti E-Publishing பதிப்பகம் : எமது கன்னி முயற்சி

பதிப்பகம் :  எமது கன்னி முயற்சி 

தமிழ் கூறும் உலக தமிழ் மக்களுக்கு எனது வணக்கங்கள். இன்றைய  அரசியல்,சமுக ,பண்பாட்டு சூழலில் எழுத்துலகின் பங்கு எம்மை  சிந்திக்க வைக்கின்றது. தமிழ் உலகில் எழுத்து எழுத்து போதுமானது தானா?  ,சமுக சிக்கல்களை எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமானது தானா? ,என்று எல்லாம் யோசிக்கையில் நாமே நல்ல எழுத்துகளை பதிபித்தால் என்ன என்று தோன்றியது. பதிப்பகம் என்றால் அலுவலகம் ,அச்சு இயந்திரம் ,பணி ஆட்கள் போன்ற விடயங்களுக்கு அதிக பொருள் செலவு ஆகுமே என்று பயப்பட தேவை ஏதும் இல்லாத மின் பதிப்பகம் போன்ற அமைப்பு எமக்கு கைகொடுக்கும் என்று நினைக்கின்றேன். பேப்பர் ,மை செலவு இல்லாத ,மார்க்கெட் செய்வதற்கு  விளம்பர செலவு செய்ய தேவை இல்லாதா மின் பதிப்பக[e-publishing] முயற்சி இது.

என்ன பெயர் வைக்கலாம் பதிப்பகத்துக்கு ? என்ற கேள்வியுடன் தினம் தினம் வாழ்வை நகர்தியவன் இன்று பெற்ற பதில் தான் "தொல்குடி மின்  பதிப்பகம்"[Thol kuti   e-publishing].  புத்தகங்களை வாசகர்களுக்கு அனுப்பும் முறை மிக எளிதானது. புத்தகம் வேண்டுவோர் எமது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் புத்தகம் உடனே ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 விரைவில் நூல் வெளியீடு இணையத்தில் !


அன்புடன் ,

தொல்குடி மின் பதிப்பகம் சார்பாக 
கி.செந்தில்குமரன்  
19, January 2015
Chennai