Friday, March 13, 2015

நெடுங்கதை – துல்லிய தேசம் அத்தியாயம் 4 Henry Ford Story

நெடுங்கதை – துல்லிய தேசம்
அத்தியாயம் 4
எதோ சொல்லனும் என்று நினைத்தது மறந்து விட்டது . உம் நினைவுக்கு வருது. எனக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகுது. என் வீட்டுக்காரர் என் சொந்த ஊரு கீழகரனைக்கு இது வரைக்கும் 3 முறை தான் வந்து இருக்காரு. இத்தனைக்கும் மறைமலை நகரில் இருந்து 4கிலோ மீட்டர் தொலைவு தான். கடைசியா என்னோட பெரியப்பா சாவுக்கு ஆட்டோவில் மாலையும் கையுமா போயிருந்தோம்.ரோடு சரியிலாததாலே ஊர் கோவில் திருப்பதில் ஆட்டோவை விட்டு எறங்கியவரு ரோட்டோர ஹென்றி போர்ட் கட்டிய கோட்டைச்சுவரை பார்த்து
“இவனுங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு போயி திருநெல்வேலி விச்சருவாளால் கொண்டு வெட்டணும் வானதி. உங்க ஊருக்கு வந்தாலே மனசு பதறுது. அது தான் வரது இல்லை ”
என்று சொன்னாரு.
சாவு வீட்டுக்கு இன்னும் 5 நிமிட நடை இருந்ததாலே நானும் அவருக்கு தெளிவா பதில் சொன்னேன்.
” இவனுங்களை ,அமெரிக்க மொதலாளிகளை வெட்டி சாச்சா பிரச்சனை தீர்துடுமா ? இந்த ஊருக்கு வாக்கப்பட்ட உங்களுக்கே இவ்வளவு வருத்தம் இருக்கும் போது இந்த ஊரிலேயே பிறந்து வளந்த எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும் . என்ன செய்ய ஊரு மக்களை அரசாங்கம் பொய்யா வேலை கொடுக்கின்றேன் , வேறு இடம் கொடுக்கிறேன் என்று வாயாலேயே மொழம் போட்டு ஏமாத்திட்டாங்க. விஎஒ-வில் இருந்து அன்னிக்கு இருந்த காஞசிபுரம் கலைக்டர் வரைக்கும் இப்படி பேசியே எங்களை கொண்ணுட்டாங்க. நாம ,நாங்க எதிர்த்து போராட வேண்டியது எங்க நிலத்துக்கு புரோக்கர் வேலை பாத்த அரசாங்கத்தை எதிர்த்து தான் ”
அதுக்கு அப்புறம் சாவு வீடு வந்ததாலே பேச்சை நிறுத்திட்டு வீட்டுகுள் போனோம்.
பெரியப்பா சாவுக்காண காரணத்தையும் அவரு சாவுக்கு வந்து இருந்த நொடிஞ்சு போன விவசாயி சீத்தா லச்சுமன நாயுடு கதையையும் அப்புறமா சொல்லுறேன்.
தொடரும்

No comments: