Friday, March 13, 2015

நெடுங்கதை - துல்லிய தேசம் அத்தியாயம் 2 Henry Ford Story

நெடுங்கதை - துல்லிய தேசம் 

அத்தியாயம் 2

நான் இந்த கதையிலே அரசியல் பத்தியெல்லாம் பேச போறது இல்லைங்க. ஆனா கதையில் அரசியல் பத்திய உள் செய்திகள் வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லைங்க. கார் கம்பெனிக்கு யாரு கீழக்கரனை நிலத்தை எல்லாம் எடுத்தது ,யாரு கம்பெனி கட்டியபின்பு தொறந்து  வைத்தது என்று கூறும் போது அதுல அரசியல் வருமே நா என்ன செய்ய ?கார் கம்பெனியை  தொறக்க டாகடர் கலைஞர் வந்ததாகாவும் அவரை பொத்தேரி அருகில் அன்னிக்கு பார்த்ததாகவும் என் வீட்டுக்காரர் சொல்லி இருக்காரு. அம்மா ஆட்சியில் தான் கீழக்கரனை நிலத்தை எல்லாம் கவர்மண்டே தரகராக இருந்து கார் கம்பெனிக்கு வாங்கி தந்ததாக அப்பா கூறியதாக நினைவு. எதுக்கு என் நிலத்தை ஹென்றி போர்டுக்கு வாங்கி தர தமிழ்நாடு கவர்மெண்டு புரோக்கர்-தரகு  வேலை செய்யணும் ?  எவ்வளவு கமிசன் யாரு வாங்கினாங்க ? வினவு இணைய தளத்தில் படித்த போது புதிய பொருளாதார கொள்கை ,அந்நிய செலவாணிக்கான முதலீடு என்று என்ன என்னமே காரணத்தை செல்லுறாங்க! அதை பத்தியெல்லாம் எங்க   கீழக்கரனை விவசாய மக்களுக்கு என்ன தெரியுங்க ? நா அப்ப ரொப்ப சின்னவ , பள்ளிக்கூடத்தில்  எழாவது தான் படிச்சிட்டு இருந்தேன். அதனால என்னால ஒன்னும் செய்ய முடியல. இனியாவது தெரிந்துக்கொண்டு மத்த ஊரையாவது ஹென்றி போர்ட் மாதிரியான ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்தலாம் இல்லையா ? அதுக்கு தான் இந்த உண்ம கதையை எழுதுறேன்.


தொடரும்



No comments: