Tuesday, July 15, 2014

Discussion with vinavu about the word Dalith-தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு!

வினவு,
[1]இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக்[பன்மை] குறிக்க வழங்குகின்றன.பிராமணர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்கள் ஒருமையில் குறிப்பிட்ட வழங்குகின்றன. இதை வினவு நினைவு கொள்ள வேண்டும்.
நன்றி தமிழ் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
http://siragu.com/?p=2623
//பிராமணன் அல்லது பிராமணர், சூத்திரன் அல்லது சூத்திரர் என்று அன் இர் விகுதி வேறுபடுவதாக நாம் பயன்படுத்துவது ஒருமை, பன்மைக்காக மட்டுமே//
[2]நான் பிராமணர், சூத்திரன் என்று “இர்”, “இன்” என்று கொடுத்த உதாரணத்தை திரித்து “சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்” என்று வினவு என்னை இட்டு கட்டி பேசுவது கயமை தனம்.
//அடுத்து ஒருவர் பிராமணன் என்று அழைக்கப்பட்டால் இழிவு, சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்//
[3]முதலில் தலித் என்பதை பெயர் சொல் என்றது வினவு. இப்போது போராட்ட உணர்வை குறிக்கும் பண்புப் பெயர் ஆக்குகின்றது வினவு.
//தலித் என்பது ஒருமை பன்மையைத் தாண்டிய போராட்ட உணர்வைச் சுட்டுகிற ஒரு சொல் தலித் இளைஞர், தலித் மக்கள், தலித் பெண் என்ற பயன்படுத்துவதுதான் சரி.//
[4]வினவு கொள்கை படி ஒடுக்க பட்ட மக்களீன் சாதிகளை குறிக்க “இர்” அல்லது “இன்” பயன்படுத்துவார்களா என்பதை வினவு தான் உணர்த்த வேண்டும்.
//மற்றும் தலித் என்றே சொல்லை ஒடுக்கப்ப்ட்டோரின் எதிர்ப்பு உணர்வை பிரதிபலிக்கிறது.இர் இல்லை என்பதால் இது தகுதிக் குறைவு என்று நீங்கள்தான் அறியாமையால் கருதிக்க கொள்கிறீர்கள். //
[5]வினவுக்கு என்ன அனைத்து இந்திய மொழிகளும் அத்துபடியா ? வினவுக்கு என்ன அனைத்து இந்திய மொழிகளும் அத்துபடியா ? பிற இந்திய மொழிகளில் தலித் என்ற சொல்லின் இயல்பு [Grammar meaning ] , [Singular,plural ][பயன்பாட்டின் உயர்வு தாழ்வு] வினவுக்கு தெரியுமா என்ன ?
//மேலும் முழு இந்தியாவும், தமிழகமும் தலித் என்றே பயன்படுத்தி வருகிறது.ஆகையால் நாங்களும் தலித் என்றே எழுதுகிறோம், எழுதுவோம். நீங்கள் தளித்தியர் என்று தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் அப்படித்தான் எழுத வேண்டும் என்று உத்திரவு போடாதீர்கள்.//

No comments: