Friday, January 9, 2015

ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும் Wining of Srilanka Election Results

ஜனவரி 9,2015 : ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும்ஈழ தமிழருக்கு இனி என்ன ?


                   ராஜபக்சவின் வெற்றிக்காக மறைமுக களம் கண்ட தெற்காசிய பிராந்திய வல்லரசான இந்திய வல்லான் அரசுக்கும் அதன் மதவாத பிராதமர் மோடிக்கும் கொடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை மணியோசை தான் சிறிசேனவின் வெற்றியும், ராஜபக்சவின் தோல்வியும். ராஜபக்சவின் தோல்வி முகம் போன டிசம்பர் மாதமே ஒளிர தொடங்கினாலும் அதனை முழுமையாக காட்டிய நாள் இன் நாள்.   ஈழ தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய வல்லான் அரசு எடுத்த நேரடியான ராஜபக்ச ஆதரவு கைகோர்ப்புகள் ,அனுப்பிவைக்கபட்ட ஆதரவு பிரச்சசார நடிப்புலக பிரங்க்கிகள் ஈழ மக்கள் சனநாயக சக்தியின் முன் செய்லிழந்தது ஒன்றும் உலக அரசியலில் முதலும் அல்லது இருதியுமானது அல்ல.ஆனால் வடக்கு மாகாண தமிழ் மக்கள் ,வடகிழக்கு தமிழ் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ,இந்திய வம்சாவழி மலையகத்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும்  ராஜபக்சவின் தோல்விக்கு மிக நேரடியான காரணமாக அமைந்தது என்பதனை பெரும்பான்மை சிங்கள பொதுமக்களே மறுக்க இயலாத நிலையில்  அடுத்து பதவி ஏற்க்க வரும் சிறிசேனாவிற்கு ஒன்று பட்ட ஈழத்துக்கும் ,அதில் வாழும் அனைத்து இன மக்களின் அதிகார பகிர்விக்கும்,வாழ்வுரிமைக்குமான  அரசியல் செயல்பாட்டுக்கு உரிய அதிகப்ச்ச புரிதலை கொடுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.  

                   இன ,மத வேறுபாடுகளை கடந்த ஈழத்து எளிய மக்களிடம் நடைமுறைக்கு வரவேண்டிய அரசியல் ,பொருளாதார ஐக்கியமும் ,அதனை நேக்கிய நீண்ட புரிந்துணர்வு பயணமும் ,இன சீற்றத்தை கடந்த வர்க்க ஒற்றுமையும் மட்டுமே அம்மக்களின் நீண்ட , நிலைத்த எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனையும்  ,உலக ,பிராந்திய வல்லரசுகளின் ஆதிகத்தில் இருந்து ஈழத்தை மீட்டெடுக்கும் என்பதனையும் ,அவர்களின்  நாட்டின்  இறையாண்மையை காக்கும் என்பதனையும் ஈழ மக்கள் அனைவருமே புரிந்து கொள்ளவேண்டிய நாள் ஜனவரி 9,2015.


அனைத்து இலங்கை[ஈழ] மக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள்  !


இவன் ,

கி .செந்தில்குமரன் 
சென்னை 

No comments: