Tuesday, September 9, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #1 Screen Play for the Movie Siva-karthikeyan scene #1

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran


காட்சி #1 : இரவு 11.30 மணி EXT @ கிண்டி இரயில் நிலையம், வெளிப்புரம் ,வேளச்சேரி சாலை 

இரயிலின் ஆரன் ஓசை ,

இரயில் நகர , கார்திகேயன் பிளாட்போரத்தில் நடந்து படி ஏறி, அம்ர்ந்து இருக்கும் கண் தெரியாத வியாபாரியை கடக்கின்றான். இரண்டு அடி வைத்தவன் திருப்பி "ஐயா மணி 11.30 ஆகிறது வீட்டுக்கு போகலையா" என்கின்றான்.

குரல் மூலம் அடையாளம் கண்டவர் "கார்த்திக் சாரா ... இன்னிக்கி இங்க தான் தூக்கம்..... ஏன் தம்பி நீங்க லேட் ?" என்கின்றார்.

வாங்க நம்ம வீட்டில் தங்கி நாளைக்கு காலையில் பிரெஸ்ஆ வரலாம் என்கின்றான் கார்திகேயன்.

"இருக்கட்டும் கார்திக் " என்று கூறிய கண் தெரியாத வியாபாரி சிகரெட் அட்டையில் உள்ள 10 இலக்க செல்போன் எண்னை படிக்கச்சொல்கின்றார்.

கார்திகேயன் முதல் ஐந்து இலக்கங்களை படிக்க அவர் செல்போனில் தட்டுகின்றார் அடுத்த ஐந்து இலக்கங்களையும் படிக்க அதனையும் தட்டி யாரையே அழைக்கின்றார்

"குட் நைட் அண்ணா" என்றவன் படி இறங்கி வேலச்சேரி சாலையில் நடக்கின்றான்.

தூரத்தில் இருந்து குழந்தையில் அழு குரல் கேட்கின்றது. கார் ,பை ஆகியவை கார்திகேயனை கடந்துச்செல்கின்றன. சாலை ஓரத்தில் இருட்டில் தவழும் குழந்தையை காண்கின்றான். பதட்டத்துடன் அருகில் விரைந்து சென்றவன் குழந்தையை தூக்கி பார்க்கின்றான். அதன் கழுத்தில் ஒரு உத்துராச்ச கொட்டையுடன் கருப்பு கயிறு. தன்னை அறியாமல் " ருத்துரா ....,சிவா... யாரட நீ" என்கின்றான்.

இது வரை அழுத குழந்தை .., இப்போது இவனைபார்த்து சிரிக்க .........டைட்டிலில் " சிவ-கார்திகேயன்" என்று மின்ன ...........

காட்சி #1 முற்றும்

 கதை பிடித்து உள்ளதா நண்பா ?
https://www.facebook.com/groups/Perumalmurugan/
திரைக்கதை தயாராகின்றது.
https://www.facebook.com/groups/618141481573698/

No comments: