Sunday, January 26, 2014

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ...? கட்டுரைகள் – பெருமாள் முருகன்[ஓரு முழுமையான விமர்சனம்]( Carbon Paper You Do Not Know ?- Perumal Murugan - Essays - A Complete Critic)

" கருவறையில் மொட்சம் ஆனா எலி ; கருவறை உள்ளே சென்று எலியை எடுத்து , கருவறையை புனிதப்படுத்திய உங்கள் மாணவனின் கதை கேடு கெட்ட இந்து சனாதனத்தின் அழகிய முரண்  "


ஐயா பெருமாள் முருகன் ,

உங்கள் கட்டுரைகள் , சிறுகதைக்கான ஈர்ப்பு[உயிர்ப்பு ] உடன் உள்ளன . உங்கள் நாவல்,சிறுகதைகளை விட உங்கள் கட்டுரைகள் [ கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்] மிகவும் பயன் உள்ளதாகவும் ,எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியும் உள்ளன. முதல் முறை உங்கள் எழுத்தை படிக்கும் உறவுகளுக்கு உங்கள் கட்டுரைகளை தான் சுட்டுவேன். தமிழில் நிறைய கட்டுரைகள் எழுத்து தமிழிலேயே எழுதுங்கள்.நாவல்,சிறுகதைககளில் வட்டார வழக்கையும்,தலித்தியத்தையும் பயன் படுத்துவது மிக்க நன்று.

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ ? கட்டுரைகள் – பெருமாள்முருகன்[விமர்சனம்]

23 கட்டுரைகள் உள்ள இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் சமுக-அரசியல் நிகழ்வுகளை மிக நூட்பமாக ஆய்துள்ளது.

[1]"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை " யில் புரட்சிகர அரசியலை விட்டு வெளியேறிய பின், தாங்கள் சனநாயக முறையில் வேலை கேட்டு போராடியதையும்,போலிஸ் காட்டிய பூச்சாண்டி [உரிமை மீறல்களையும்] பதிவு செய்துள்ளீர்கள்.

[2]"எருமைபாலும் பத்திரிகை வேலையும்" யில் தமிழ் கற்றவனின் கோபம் [கற்றது தமிழ் பிரபாகரனை விட] பல மடங்கு தெறிக்கின்றது. உங்களால் குறைந்த ஊதியத்தைக்கூட பொறுத்து இருக்க முடியும். "ஓற்றுப்பிழைகளை திருத்தக்கூடாது" என்ற தடை உங்களை அப்பத்திரிகையை விட்டு வெளியேறியது.இக்காரணத்தையே நீங்கள் கூறி வெளியேறி இருந்தால் மிக்க பொருத்தமாக இருந்து இருக்கும்.

[3] "கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ" யில் புலவர் பெருஞ்சித்தனார் [ சித்திரனார் ?] அவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள மதிப்பீடுகள் ,தனித்தமிழ் மீது உள்ள உங்கள் நம்பிக்கை வெளிபடுகிறது. நான் கூகிளிட்டப்பொது "பெருஞ்சித்தனார்" என்று தான் அதிக பதில்கள் கிடைக்கின்றது.[ 5,000 மேலான பதில்கள்]
[4]"ஆட்டோ வாசகங்கள்" கட்டுரையில் தனிமை மனிதனின் கிறுக்குத் தனங்களை காட்டியுள்ளிர்கள். இக்கட்டுரையை படிக்கும் போது நீங்கள் "கற்றது தமிழ் பிரபாகரனை" நினைக்க வைக்கின்றிர்கள்.

[5]"வேகம் இழந்த விசைத்தறிகள்" கட்டுரை நம் மக்களின் மொக்கைத்தனமான போராட்ட முறைகளை கவனமாக விமர்சனம் செய்து உள்ளது. தமிழகத்தில் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ம க இ க போன்ற இயக்கங்களுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். புதிய போராட்ட முறைகளை கூறாதது இக்கட்டுரையின் மிகப்பெரிய குறை.

[6]"கருவறை எலி" கட்டுரையில்  நந்தன் முதல் ம க இ க வரை கோவில்[கருவறை] நுழையும் உரிமைக்காக போராடியதை நேர்மையாக பதிவு செய்து உள்ளீர்கள். கருவறையில் மொட்சம் ஆனா எலி ; கருவறை உள்ளே சென்று எலியை எடுத்து , கருவறையை புனிதப்படுத்திய உங்கள் மாணவனின் கதை கேடு கெட்ட இந்து சனாதனத்தின் அழகிய முரண்.இந்த இரு கட்டுரைகளும் ம க இ க மற்றும் வினவு.காம் ஆகியவர்களால் கவனிக்கப்படவேண்டியவை. ஈழம் சார்ந்த கட்டுரைகளை திரு பெமு எழுதாதது அவரின் 'கவனமான கவனக்குறை' என்று அய்யம் அடைகின்ரேன் .

[7]"வண்ண வண்ணப் பூக்கள் " கட்டுரை திரு பெருமாள் முருகன் அவர்களின் முதல் பெருங்கதை "ஏறு வெயில்" வெண் திரை நோக்கி பயனித்த கதை. திரு பாலு மகேந்திரா ஏறு வெயிலை திரைக்கு தெரிவு செய்தது ;திரைக்கு பொருந்துமா என்ற திரு பெமு வின் ஐயம்; இறுதியில் வாய்ப்பு கை நழுவி போனதன் கதை.தமிழ்த் திரைக்கு ஓரு "பதேர் பன்சாலி" வாய்க்கவில்லை.

[8]"முதல் கடிதம்" கட்டுரை சினேகிதி, திரு பெமுவுக்கு எழுதிய முதல் பதில் கடிதம் கிடைத்தும், கைக்கு கிடைக்காத "அறம் சார் நீதி " சோகக்கதை.

[9]"உள்ளது கொண்டு உண்ணுதல் " கட்டுரை , எம் கொங்கு மக்களின் [நான் வாழ்த மல்லசமுத்திர வாழ்க்கையை மறக்க முடியுமா ?] எளிய உணவு முறைகளை அவற்றின் வட்டார வழக்குச்சொற்களுடன் அறிமுகப்படுத்துகின்றது. திரு பெமு வின் கருத்துருக்கள் :

[௧]மக்களின் உணவுமுறை ,அவர்கள் வாழும் நிலம் ,பொருளாதார வலிமை சார்தது.[இக்கட்டுரையில் ,கொங்கு மக்கள் "வீட்டுக்கு வெளியே" தனிப் பாத்திரத்தில் "பெரியாட்டுக்கறி" சமைக்கும் அழகியல் விடுபட்டு உள்ளது ]

[௨]ஆண்டானும்,அடிமையும் ஒரே மாதிரியான உணவுமுறைகளை பெரும்பாலும் கொண்டு உள்ளனர். [1980கள் வரை உண்மை தான் என்றாலும், இன்று இருவருமே ரேசன் அரிசியை தானா சமைத்துண்கின்றனர் ?]

[௩]குக்கர் இல்லாமல் ,கஞ்சி வடிக்காமல் சோறு ஆக்கும் முறை [எரிபொருள் சேமிப்பு ]

[௪]கொங்கு மக்களின் "அரிசி-பருப்பு" சோறு செய்முறை [அரிசி-மாவுச்சத்து ,பருப்பு-புரதம் நன்று. ; எம் கொங்கு மக்கள் இத்துடன் ஏதோ ஒரு காய்கறி[விட்டமீன்] சேர்தால் மிக்க நன்று ]

[௫]"விக்கவிக்கத் தின்னாலும் கெழக்க வெளுக்கப் பீதான்" என்ற கொங்கு வட்டார பழமொழியுடன் முடியும் இக்கட்டுரை, பெரு-சிறு நகர, நடுத்தர-உயர்நடுத்தர மக்களின் ஆடம்பர-சக்கை உணவுமுறைகளுக்கு எதிராக நல்ல மாற்று வழியை விவாதிக்கின்றது.

[10]"ஹர ஹர மகாதேவா!சம்போ மகாதேவா!" கட்டுரை, நாட்டார் வழ்வியலுக்கு எதிராக, இந்து சனாதனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்த பலியிடல் தடுப்புச் சட்டம் மீது எதிர்வினை ஆற்றிய கையேடு.அசைவ முருகன் "சைவன்" ஆன கதையில் தொட்ங்கி ,உலகமயமாக்கலில் முடியும் கட்டுரை.
திரு பெமு அவர்கள், வெளிப்படுத்தும் கருத்துக்கள் :

[௧]"சிறுதினை மலரொடு,மறி அறுத்து" உண்டு வாழ்ந்த "திருமுருகாற்றுப்படை அசைவ முருகன்", பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்டான்.

[௨]கோவில் அசைவம் ,மூலவர் சைவம் என்ற நிலையை மாற்றி கோவிலும் சைவம் ,மூலவரும் சைவம் என்ற நிலைக்கு மாற்ற முயலும் சட்டம் இது.

[௩]இச்சட்டம் சிறுதெய்வங்களை பொருந்தெய்வங்களுடன் இணைக்கும் முயற்சி .[இணைக்கும் முயற்சியா ?அல்லது அழிக்கும் முயற்சியா ?]

[௪]இச்சட்டம், நாட்டார் சிறுதெய்வ கோவில்களில் நிகழும் சமுக செயல்களை [இனக்குழுகளின் கூட்டங்களுக்கு இடையிலான திருமண பேச்சு , பஞ்சாயத்துகள்] குலைக்கின்றன.[திரு பெமு அவர்கள் ,இச்சட்டம் மூலம் , இனக்குழுகளின் சாதீய கட்டுமானத்தை தளர்த்த சாத்தியம் உள்ளதா என ஆய்வு செய்ய தவறிவிட்டார் ]

[௫] கோவில்களை சைவமாக்கும் முயற்சி, இந்து மத அமைப்புகள்
 உலகமயமாக்கலுக்கு துணைபோகும் செயல்
.
[௬] த.அ வின் "கள்ளுக்கு தடை ,பிராந்திக்கு ஏற்புரை" கொள்கையை இச்சட்டத்தின் சிறுதெய்வ அழீப்பு கொள்கையுடன் ஓப்பீடு செய்யும் திரு பெமு அவர்கள் , இரண்டுமே [மதம் -மது ] போதைக்கான விடயங்ககள் தான் என்பதை ஏனோ கூறவில்லை.

முற்றும்.

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்