Saturday, January 11, 2014

Poem

கவிதை: தேவயானிக்களும்…..சங்கீதாக்களும்


தேவயானிக்கள் சொர்கத்திலும்
சங்கீதாக்கள் நரகத்திலுமா பிறக்கிறார்கள் ?

இவர்கள் இந்திய தாயின் மகள்கள் என்றால்
ஏன் இந்த பாகுபாடு ?

தேவயானிக்கள் இங்கும் அங்கும்
தவறே செய்தாலும் தாங்கி பிடிக்குது அதிகார வர்க்கம் !

இங்கே வாங்கிய வீடும் ,அங்கே பிணை  பணமும் 
ஒரு கோடி ,இரு கோடி.! யார் பணம் …?

சங்கீதாக்களின் உழைப்பை திருடும் தேவயானிகள்
"சேதார செய்கூலிவியபாரிகள்.

நடுத்தர வர்க்கம், தேவயானிக்கு ஆதரவா வாதிடுவது
அயோக்கியத்தனத்துக்கு துணை போகும் கேடு கெட்ட அயோக்கியத்தனம்

தேவயானிக்கு சட்டப்படியான சம்பளம் கொடுக்க வக்கில்லை என்றால்
தனது வேலையை தானே பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே

இப்ப தேவயானிய India’s permanent mission to UNக்கு மாத்தியாச்சு.
இப்போ full immunity இருக்கறதால US case புஸ்ஸாயிடிச்சு. Chapter close. 

என்னா நாயம் பேசுது இந்த நடுத்தர வர்க்கம்
திருடன பிடிக்க சொன்னா , பரத் ரத்னா பட்டம் கொடுத்தாச்சுனு சொல்லுது இந்த நடுத்தர வர்க்கம்

தேவயானிக்கள் ஆண்டையாய் ,சங்கீதாக்கள் அடிமையாய் வாழ்ந்தது போதுமே !

அன்புடன் ,


லெனின்

No comments: