Friday, January 24, 2014

சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 21th Jan,2014



இன்று சென்னைப் புத்தகக்காட்சிக்கு செல்ல நேரமும் ,பணமும் அமைந்தது. நைந்து போன பதிப்பகங்கள் வலிமையான பதிப்பகங்களுடன் நொண்டியடித்துக்கொண்டு இருந்தன. மதிய உணவை தவீர்த்து சென்றதால் ,அந்த ஒழுங்கற்ற தளத்தில் நடப்பது மது போதைக்கு ஏற்ற தள்ளாட்டத்தை கால்களுக்கு ஏற்படுத்தியது.

புத்தகங்களை தேர்வு செய்வது பெருங்குப்பையில் இருந்து குண்டுமணியை தேடுவது போல இருந்தது. வினவின் “சென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள்” கட்டுரை திசைக்காட்டியது. வாங்கிய புத்தக்ங்கள் :

[1] கருக்கு நாவல் -பாமா

[2]பூக்குழி நாவல் – பெருமாள் முருகன்

[3]அமைப்பியமும் பின்அமைப்பியமும் -க.பூரணச்சந்திரன் [என் கல்லூரி என் தமிழ் ஆசிரியர்]

[4]மதொருபாகன் நாவல் – பெருமாள் முருகன்

[5]திருச்செங்கோடு சிறுகதை தொகுப்பு -பெருமாள் முருகன்

[6]ஆண்டாள் பட்சி நாவல் -பெருமாள் முருகன்

[7]அந்நியப்படும் கடல் -கீழைக்காற்று பதிப்பகம்

[8]இதுவல்லவோ கதை -கீழைக்காற்று பதிப்பகம்

[9]வேப் பெண்ணைய்க் கலயம் சிறுகதை தொகுப்பு-பெருமாள் முருகன்

[10]கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்

[11] கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை -கீழைக்காற்று பதிப்பகம்

[12]கணிதத்தின் கதை -ஆயிஷா இரா.நடராசன்

[13] தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?-கீழைக்காற்று பதிப்பகம்

[14] வான் குருவியின் கூடு கட்டுரைகள் – பெருமாள் முருகன்

கீழைக்காற்று பதிப்பகத்தில் புத்தக பட்டியல் கிடைக்காதது பெருங்குறை. காலச்சுவடு பதிப்பகத்தில் கொற்கை நாவல் ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருந்தது. டீ ,காப்பி விலை முறையே ரூ10,ரூ 12. 3 இட்லி ரூ 30. எல்லாம் முடிந்து வெளியேறும் போது பெரியவர் கூவி கூவி விற்ற கை பை , புத்தகங்களை இன்று சுமக்கவும் நாளை காய்கறிகளை சுமக்கவும் பயன்படும் என்பதால் வாங்கிச்சென்ரேன் .

No comments: